Posts

Showing posts from April, 2026

• எரிவாயு உருளை இருப்பு ஆலோசனை கூட்டம்.

Image
 ·         வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளை இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது . வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளை இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி , தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது .   இக்கூட்டத்தில் மாவட்டத்தில் எரிவாயு உருளை போதிய அளவில் இருப்பு வைத்து , தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது . இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது - எரிவாயு உருளை இருப்பு விவரம் , விற்பனை விவரம் மற்றும் பதிவு விவரங்களை HPCL BPCL & IOCL ஆகிய எரிவாயு நிறுவனங்கள் தினமும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் . எரிவாயு உருளைகளை பதுக்கல் செய்வதோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ குற்றமாகும் . எனவே , சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கைகள் ...

• காட்பாடி தொகுதி வாக்குச்சாவடிகளை தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு.

Image
·         தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட    பகுதிகளில்   வாக்குச்சாவடி   மையங்களை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .                 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி கழிஞ்சூர் யூனியன் மிஷன் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் . 157, 164, 165, 168, 169 மற்றும் 170 ஆகிய வாக்குச்சாவடி   மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .   தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி கழிஞ்சூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள   எண் 144, 145, 146, 147 ஆகிய வாக்குச்சாவடி மைய த்தை   பார்வையிட்டு ஆய்வு செய்தார் . அதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவ...

• வேலூர் மாவட்டத்தில் VST மற்றும் VVT குழு பயிற்சி வகுப்பு.

Image
·         தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு குழு (VST) மற்றும் வீடியோ பதிவுகளை பார்க்கும் குழுக்களுக்கான   (VVT)   பயிற்சி வகுப்பு   மாவட்ட தேர்தல் அலுவலர்   மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்     நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு குழு (VST) மற்றும் வீடியோ பதிவுகளை பார்க்கும் குழுக்களுக்கான   (VVT)   பயிற்சி வகுப்பு   மாவட்ட தேர்தல் அலுவலர்   மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது. வீடியோ   கண்காணிப்பு குழு    (Video Surveillance Team) மேற்கொள்ளவேண்டிய பணிகள். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு குழு இயங்கும். இந்த குழுவில் அலுவலர் ஒருவரும் வீடியோகிராபர் ஒருவரும் இருப்பார். இந்த குழு தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அன...

• அணைக்கட்டு வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் அலுவலர்ஆய்வு.

Image
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட    பகுதிகளில்   வாக்குச்சாவடி   மையங்களை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர்   பார்வையிட்டு ஆய்வு செய்தார் .                         தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பலவன்சாத்துகுப்பம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டு உ ள்ள வாக்குச்சாவடி   மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் . தொடர்ந்து விருப்பாட்சிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம், முத்துரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி   மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . பின்னர் பாகாயம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவட...

• லக்னோவில் விஐடி முன்னாள் மாணவர் சங்க கிளை தொடக்கம்.

Image
 ·         லக்னோவில் விஐடி முன்னாள் மாணவர் சங்க கிளை தொடக்கம்.       உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் விஐடி பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் சங்க கிளை தொடங்கப்பட்டது .         விஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் முன்னாள் மாணவர் சங்க கிளைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன .      அந்த வகையில் , 22- வது கிளையாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விஐடி முன்னாள் மாணவர் சங்க கிளை தொடங்கப்பட்டது .     விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க கிளை தொடக்க நிகழ்வில் உத்தரபிரதேச மாநிலத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் அனில்ராஜ்பர் , பாஜக எம்எல்ஏ நீரஜ்போரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் .      உத்தரபிரதேச மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம் . கே . சண்முகசுந்தரம் , ஐபிஎஸ் அதிகாரி ஜி . கே . கோஷ்வாமி , இந்திய வனப்பணி அதிகாரி எச...