Posts

• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சனி மஹா பிரதோஷம்.

Image
·          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் – மஹா தீபாராதனை.   ·          கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.        வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் , சந்தனம் , தேன், கரும்பு சாறு, இளநீர் , பன்னீர் , திருநீறு   உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.       பின்னர் சந்தன காப்பு அலங்காரங்களை செய்து மலர் மாலைகள், வில்வ இலைகள், அருகம்புல் மாலைகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் அரோகரா முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனைத்து தோஷங்களும் நீங்க வேண்டி நந்தி பகவானை வழிபட்டனர். மேலும் பக...

• இராணிப்பேட்டை மாவட்ட காவல் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்.

Image
·          இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்.       இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் தலைமையில் நடைபெற்றது .        இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 10 மனுக்கள் பெறப்பட்டன . மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார் .  

• திமிரி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு.

Image
·          திமிரி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு   விழிப்புணர்வு.         இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் , சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள GOOD PRIVATE LIMITED COMPANY- யில் பணிபுரியும் பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் .             இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு   பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் , சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அவசர உதவி எண் 1091 , சைபர் குற்ற உதவி எண் 1930 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன . இதில் சுமார் 400 பெண்கள் கலந்து கொண்டனர் .  

• இராணிப்பேட்டை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்.

Image
·          இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு .       இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் பொதுமக்களுக்கு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .  

• வாலாஜா அண்ணா மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு.

Image
 ·          வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.          இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் , சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் .            இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு   பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் ,   சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அவசர உதவி எண் 1091 , சைபர் குற்ற உதவி எண் 1930 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன . இதில் சுமார் 1,200 மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்  

• இராணிப்பேட்டை காவல் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்.

Image
 ·          இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை வாரந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் .       இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 24.06.2026 தேதி வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் தலைமையில் நடைபெற்றது .       இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 50 மனுக்கள் பெறப்பட்டன . மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார் .  

• வேலூர் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

Image
·         வேலூர் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - வேலூர் தியாகி வி.எம். உபயதுல்லா பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்   பி.எஸ்.லீலாஅலெக்ஸ், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை வேலூர் தியாகி வி.எம்.உபயதுல்லா பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வண்ணம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக போதை பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை பொதுமக்கள் இடையே கொண்டு சேர்க்கும் வகையிலும் தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக் (Start Run, Stop Drug) என்ற தலைப்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாண...