Posts

• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலய சனி மஹா பிரதோஷம்.

Image
 ·          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சனி மஹா   பிரதோஷம்    ·          நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம்.  ·          ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரோ ஹரா முழக்கங்களுடன் தரிசனம்             வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை, ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால் தயிர் , சந்தனம் , தேன், கரும்பு சாறு, இளநீர் , பன்னீர் , திருநீறு   உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்யப்பட்டது.       பின்னர் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர், மாலைகள், வில்வ இலைகள், அருகம்புல் மாலைகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கங்களுடன் அனைத்து...

• வேலூர் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் 20 ஆண்டுகள் சிறை.

Image
 ·          வேலூர் அருகே தவறான முறையில் பழகி மிரட்டி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ . 2 லட்சம் அபராதம் நீதிமன்றம் உத்தரவு.              வேலூர் மாவட்டம் , வேலூர் அருகே பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது இளம் பெண் . இவர் பிளஸ் 2 படித்து வந்தார் . அதே ஊரை சேர்ந்தவர் இவரது சித்தப்பா ரமேஷ் (38). கூலித் தொழிலாளி . இவர் தனது அண்ணன் மகளான பள்ளி மாணவியிடம் தவறான முறையில் பழகி பலமுறை மிரட்டி பாலியல் அத்துமீறல்கள் செய்துள்ளார்.                   இதனால் மாணவிக்கு 2 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நடந்து வந்த நிலையில் , இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து அனைத்து மகளிர் காவல் துறையினர் ரமேஷை கைது செய்தனர்.            ...

• வேலூர் சமுதாய நாய்களுக்கான அறுவை சிகிச்சை மையம்.

Image
·         வேலூர் கால்நடை ப ல்நோக்கு மருத்துவ மனையில் சமுதாய நாய்களுக்கான   அறுவை சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் திறந்து வைத்தார். வேலூர் தொரப்பாடியில் உள்ள கால்நடை ப ல்நோக்கு மருத்துவ மனையில் சமுதாய நாய்களுக்கான அறுவை சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி   திறந்து வைத்தார். வேலூர் கால்நடை பராமரிப்பு துறை , வேலூர் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நடத்தும் சமுதாய நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை வேலூர் கால்நடை பன்முக மருத்துவமனை , கால்நடை மருந்தகம் , செதுவாலை (இ) பொய்கை ஆகிய மையங்களில் தொடங்கி வைத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பொது இடங்களில் குறிப்பாக , நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் , தெருக்களில் சுற்றி திரியும் சமூக நாய்களால் பொது மக்களுக்கும் , கால்நடைகளுக்கும் அச்சுருத்தலான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு , இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மாண்புமிகு தமி ழ்நாடு முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக சமூக நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கால்நடை பராமரிப...

• ஸ்ரீபுரம் நாராயணி தங்க கோவிலில் சரஸ்வதி யாகம்.

Image
·          ஸ்ரீபுரம் நாராயணி தங்க கோவிலில் சரஸ்வதி யாகம்.   ·          10 மற்றும் 12- ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டி தங்க கோவில் நிறுவனர் சக்தி அம்மா ஸ்ரீ சரஸ்வதி யாகத்தில் எழுதுகோல்களை வைத்து பூஜை செய்து மாணவர்களுக்கு வழங்கினார்.                   வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி பீடத்தில் 10 மற்றும் 12 - ம் வகுப்பு   பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கும் விழா சரஸ்வதி யாகம் நடைபெற்றது.              வேலூர்   தங்க கோவில் நிறுவனர்   சக்தி அம்மா தலைமையில் நடைபெற்ற இந்த ஸ்ரீ மேதாசூக்தயாகம் எனப்படும் சரஸ்வதி யாகத்தில் புனித நீரை வைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகத்திற்கு பின்னர் புனித நீர் எழுதுகோல்களின் மீது ஊற்றி பூஜைகள் செய்யப்பட்டு மாணவர்களும் மாணவிகளும் நல்ல ...

• வேலூர் மத்திய சிறையில் சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு.

·          வேலூ ர் மத்திய சி றையில் சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு.                  வேலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் வேலூ ர் மத்திய ஆண்கள் சி றையில் 72 பேர் மற்றும் பெண்கள் சிறையில் 19 பேர் மொத்தம் 91 பேர் சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வின் மூலம் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி 2025 முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான சிறப்பு எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது .   இதை பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குனர் முனைவர் . பெ . குப்புசாமி பார்வையிட்டு படிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும் படிப்பதன் மூலம் தன்னம்பிக்கை வளரும் , பொது வாழ்க்கைக்கு படிப்பு அவசியம் எனவும் கூறினார்.                    உடன் மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில்குமார், மாவட்ட ஒருங்கி...

• வேலூர் பொது விநியோக திட்ட குறை தீர்வு முகாம்.

·         வேலூர் மாவட்டத்தில்   14.02.2026   இரண்டாவது   சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்வு முகாம் - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .                       பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள கிராமங்களில் 14/02/2026 ஆம் தேதி இரண்டாவது   சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம்,   புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல்,   குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது விநியோகத்திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இ...