Posts

• தொரப்பாடியில் இலவச கண்புரை பரிசோதனை முகாம்.

Image
 ·          தொரப்பாடியில் தமிழக புரட்சி கழகத்தின் சார்பில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் - முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.          வேலூர் மாவட்டம் , வேலூர், தொரப்பாடியில் தமிழக புரட்சி கழகத்தின் சார்பில் கரிகிரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண்புரை பரிசோதனை முகாமினை முன்னாள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.       இதில் மாநில மருத்துவ அணி அமைப்பாளர் தமிழரசன் , நிறுவன தலைவர் இக்பால் , மாநில இளைஞரணி அமைப்பாளர் முக்தியார் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சர்க்கரை வியாதி , ரத்த கொதிப்பு, கண்புரை உள்ளது போன்றவை எல்லாம் பரிசோதிக்கப்பட்டது. இதில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை கரிகிரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கண் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இந்த இலவச முகாமில் நூற்று கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ...

• பெண்கள் பாதுகாப்பு குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி

Image
 ·         பெண்கள் பாதுகாப்பு குறித் து திறன் மேம் பா ட்டு பயிற்சி ( POSH Act 2013) - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.   வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் பெண்கள் பாதுகாப்பு குறித் து திறன் மேம் பா ட்டு பயிற்சி POSH Act 2013 வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது.   மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் பெண் குழந்தைகளைப் காப்போம் பெண் குழந்தைக்கு கற்பிப்போம் BBBP திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 2026-2027- ஆம் நிதி ஆண்டு நிகழ்ச்சியின் அட்டவணைப் படி மாவட்ட அளவில் LC/IC உள்ளூர் குழு / உள்ளக குழு / உறுப்பினர் / தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Nodal Officers) அவர்களுக்கும் POSH ACT 2013 (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் குறித்தும் அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது. குழு உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் அனைவரும் ...

• ஆடி மூன்றாம் வெள்ளி

Image
·          ஆடி மூன்றாம் வெள்ளி   ·          வேலூர் ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு புஷ்ப பாவாடை அலங்காரம்.   ·          வேலூர் விஷ்ணு துர்கை அம்மனுக்கு வெண்ணை காப்பு சிறப்பு   அலங்காரம்   பக்தர்கள் வழிபாடு              வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு புஷ்ப பாவாடை அலங்காரம் செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜலகண்டீஸ்வரர், அகிலாண்டீஸ்வரி அம்மனையும் தரிசனம் செய்தனர்.               இதேபோன்று வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் விஷ்ணு துர்கை அம்மன் ஆலயத்தில்   துர்கை அம்மனுக்கு வெண்ணை காப்பு சிறப்பு அலங்காரங்கள் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான...

• வேலூர் மாநகராட்சி பூங்கா, நாற்றங்கால் பண்ணை.

Image
·         வேலூர் மாநகராட்சி பூங்கா மற்றும் நாற்றங்கால் பண்ணை - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு செய்தார்.  வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பூங்கா மற்றும் நாற்றங்கால் பண்ணை குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு செய்தார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் மாநகராட்சி, மண்டலம் 2,   வார்டு 28, எல்.ஐ.சி காலனியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                இந்த ஆய்வின்போது மர க்கன்றுகள் நடவு செய்யும் பணியை பார்வையிட்டார். பூங்காவை பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுக்கு ஆ லோசனைகளை வழங்கினார். மேலும் ​ சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும் , பசு மை பரப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் பூங்கா வளாகத்தில் புதிய மரக்கன்றுகள்   நடவு செய்ய அறிவுறுத்தினார். பூங்காவை அழகுபடுத்தும் விதமாகப் பசுமையான புல்வெளிகள் மற்றும் நவீன தோட்டக்கலை வடிவமைப்புடன் அழகுபடுத்த ...

• மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027

·          மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை சிறப்பாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள இடங்களையும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பினை மேற்கொள்ள உள்ளனர் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் . மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை சிறப்பாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .   மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக (II Phases) நடைபெற உள்ளன . முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு , சுய கணக்கெடுப்பு 17.07.2026 முதல் 31.07.2026 வரையும் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் மூலம் கணக்கெடுப்பு 01.08.2026 முதல் 30.08.2026 வரையும் நடைபெறவுள்ளது . இரண்டாம் கட்டமா க மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி மாதம் 2027   நடைபெற உள்ளது .             முதல் முறையாக ...

• வேலூர் குடும்ப அட்டைதாரர் கைவிரல் ரேகை சிறப்பு முகாம்.

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகையை 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்ய வேண்டும் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் .             வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.                  மேலும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலை கடைகளுக்கு சென்று தங்க...

• காட்பாடி வஞ்சி அம்மனுக்கு ரூ.30 லட்சம் அலங்காரம்.

Image
 ·          காட்பாடி வஞ்சி அம்மனுக்கு ரூ .30 லட்சம் நோட்டுகளில் அலங்காரம் .        வேலூர் மாவட்டம் , காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள வஞ்சியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் 3- ஆம் வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சொர்ண லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது . இதில் 10 ரூபாய் , 20 ரூபாய் , 50 ரூபாய் , 100 ரூபாய் , 200 ரூபாய் , 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு ரூ .30 லட்சம்   மதிப்பில் வஞ்சி அம்மனுக்கு சுவர்ணலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது . இதனை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள், பக்தர்கள்    சுவாமி தரிசனம் செய்தனர்.