பேர்ணாம்பட்டு, கீ.வ.குப்பம் மற்றும் குடியாத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு, கீ.வ.குப்பம் மற்றும் குடியாத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஏரியை தூய்மைப்படுத்தல், சாலை பணி, நீர் குளம் அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் வழங்கப்படவுள்ள மோதிரங்களை பாதுகாத்து வைக்க ரூ.1.75 இலட்சம் மதிப்பில் பாதுகாப்புப் பெட்டகம் (safety locker) அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்...