Posts

• காட்பாடி வஞ்சி அம்மனுக்கு ரூ.30 லட்சம் அலங்காரம்.

Image
 ·          காட்பாடி வஞ்சி அம்மனுக்கு ரூ .30 லட்சம் நோட்டுகளில் அலங்காரம் .        வேலூர் மாவட்டம் , காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள வஞ்சியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் 3- ஆம் வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சொர்ண லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது . இதில் 10 ரூபாய் , 20 ரூபாய் , 50 ரூபாய் , 100 ரூபாய் , 200 ரூபாய் , 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு ரூ .30 லட்சம்   மதிப்பில் வஞ்சி அம்மனுக்கு சுவர்ணலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது . இதனை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள், பக்தர்கள்    சுவாமி தரிசனம் செய்தனர்.  

• வேலூர் மாவட்ட திட்ட பணிகள் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர்.

Image
·         வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாற்று திறனாளிகள் நல துறை மற்றும் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில்   ரூ.20.79 கோடி மதிப்பில் 61 முடிவுற்ற திட்ட பணிகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திறந்து வைத்து,   ரூ.70 இலட்சம் மதிப்பில் 1 பணிக்கு அடிக்கல் நாட்டினார்.              வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாற்று திறனாளிகள் நல துறை மற்றும் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் ரூ.20.79 கோடி மதிப்பில் 61 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து,   கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி ரூ.70 இலட்சம் மதிப்பில் 1 பணிக்கு அடிக்கல் நாட்டினார். கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் சின்ன அல்லாபுரம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.86.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நடவு செய்தா...

• சுதந்திர போராட்ட தியாகிகள் குறை தீர்வு கூட்டம்.

Image
 ·          சுதந்திர போராட்ட தியாகிகள் குறை தீர்வு கூட்டம் - மாவட்ட வருவாய் அலுவலர்   தலைமையில் நடைபெற்றது.       வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதேமில்லத் அரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் குடும்பங்களுக்கான குறை தீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தியாகிகளின் வாரிசுகள் பங்கேற்றனர்.       இதில் அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இலவச பயண அட்டைகள் வழங்க வேண்டும். அளிக்கும் மனுக்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை   தெரிந்து கொள்ளும் வகையில் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.             தியாகிகளின் வாரிசுகளின் மாநில அளவிலான கொள்கை பிரச்சணை குறித்து பதிவு செய்து மாநில அளவி...

• பீடித்தொழிலாளர்கள் ஆர்பாட்டம்.

Image
·          பீடி தொழிலாளர்களின் வாழ்வாதரம் பாதுகாக்க கோரி வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் பீடித்தொழிலாளர்கள் ஆர்பாட்டம்.       வேலூர் மாவட்டம் , வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தொழிலாளர்களின் வாழ்வாதரம் பாதுகாக்க , மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுசெயலாளர் நாகேந்திரன் உள்ளிட்ட திரளான பீடி தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள் .         பீடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் மாதம் ரூ .6000/- வழங்கிடு 1947, 1966, 1976 பீடி சுருட்டு தொழிலாளர் வாழ்வாதாரம் பாதுகாக்க போடப்பட்ட சட்டங்களை பாதுகாத்து, அனைத்து பீடித் தொழிலாளர்களுக்கும் மருத்துவ அடையாள அட்டை வழங்கிடு. அனைத்து பீடி மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்க...