Posts

• வேலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டம்

Image
 ·          வேலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்வதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டம்.      வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திராவிட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.     இதில் மாநில அமைப்பாளர் அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்கிறது. ஜாதி வாரி கணக்கெடுப்பில் குழப்பத்தை ஏற்படுத்தவும் மத்திய அரசு முயல்வதால், இதனை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.     சமூக நீதியை காத்திட ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி முழக்கங்களை எழுப்பினர். இதில் திரளான தி.க.-வினர் கலந்து கொண்டனர்.  

• பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் ஆய்வு.

Image
வேலூர் மாவட்டத்தில்   பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்   குறித்து வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார   திட்ட இயக்குநர் ஆய்வு. வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமா, சத்துவாச்சாரி, ஊசூர், வெட்டுவானம், குடியாத்தம் நகராட்சி ஆகிய இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் குறித்தும், மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் பார்வையிட்டு   ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வேலூர் மாநகராட்சி, சத்துவாச்சாரியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட மைய சமையற் கூடத்தை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுக்கு சமைக்கப்பட்ட காலை உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர்   காலை உணவுத்திட்டம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது   மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார். மேலும், சமையற்கூ...

• வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்.

Image
வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுவின் தலைவர் / வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையி ல், உறுப்பினர் செயலர்/ மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையி ல் நடைபெற்றது. வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுவின் தலைவர் / வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி . எம் . கதிர் ஆனந்த் தலைமையி ல்,   உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் முன்னிலையி ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.                 இக்கூட்டத்தில்   தேசிய வேளாண்மை வளர்ச்சி திட் டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் , பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் , மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் , பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் , பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் குறித்தும் , விற்பனை குழு சார்பில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-Nam) குறித்தும் , வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் , அறுவடை பின்ச...

• வேலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

Image
·          வேலூரில் ஸ்டேட் வங்கி எதிரில் வங்கி ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் .     வேலூர், அண்ணா சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி எதிரில் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் .              ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மில்டன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் , வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாளாக அறிவிக்க வேண்டும் . தற்போதைய பணிச்சுமையை சமன் செய்யும் வகையில் கூடுதல் பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.         நீண்ட நேரம் பணிபுரிவதற்கான கூடுதல் ஊதியம் மற்றும் இதர சலுகைகளை முறைப்படுத்த வேண்டும் . பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .              இ...

• வேலூரில் 9 மாவட்டங்களை சேர்ந்த மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி.

Image
·          வேலூரில் 9 மாவட்டங்களை சேர்ந்த மண்டல அளவிலான பளுதூக்கும் போட்டி - 400 - க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.                வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள அரசு பளு தூக்கும் பயிற்சி மையத்தில் முதல்வர் கோப்பைக்கான திருவண்ணாமலை மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்றது.     இதில் வேலூர் , திருவண்ணாமலை , திருப்பத்தூர் , கிருஷ்ணகிரி , ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி , விழுப்புரம் , கடலூர் , தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 400- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.       இரண்டாவது நாளாக நடைபெறும் பளு தூக்கும் போட்டிகளை மண்டல மேலாளர் சாந்தி துவங்கி வைத்தார். இதில் காமன் வெல்த் வீரர் சதிஷ் போட்டிகளை முன்னின்று நடத்தினார். இதில் பாலமுருகன் , பயிற்றுநர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் வெல்வோர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.  

• UPSC – NDA & NA (II) & CDS Examination.

UPSC – National Defence Academy & Navel Academy –II & Combined Defence Service Examination –II   -2026, 13.09.2026 FN & AN (Sunday) வேலூர் மாவட்டத்தில் UPSC -   தேர்வாணையத்தின் மூலம் NDA & NA (II) & CDS – (II) -2026   தேர்வுகள் வருகின்ற 13.09.2026 (ஞயிற்றுகிழமை) அன்று முற்பகல் 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடக்கவிருக்கிறது.   வேலூர் மாவட்ட மையத்திலுள்ள   03   தேர்வுக் கூடங்களில்   686 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.   வ.எண். தேர்வு மையத்தின் பெயர் தேர்வர்களின் எண்ணிக்கை 1 Govt. Muslim Higher Secondary School, Officers line,Anna Salai, Vellore -632001 255 2 D.K.M. College for Women, DKM College Road, Sainathapuram, Near Krishna Petrol Bunk, Vellore – 632 001 277 3 Thanthai periyar Government Institute of Technology, Chitteri road, Thorapadi post, Near Female jail, Vellore -6320...