Posts

• மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை.

·          மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2026 மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர் மாவட்டத்தில் 09.09.2026 முதல் 22.09.2026 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர்.             வேலூர் மாவட்ட அளவிலான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் வருகின்ற 09.09.2026 முதல் 22.09.2026 வரை வேலூரில் உள்ள SDAT மாவட்ட விளையாட்டு அரங்கம், வி.ஐ.டி பல்கலைகழகம் , மற்றும் பாகாயத்தில் உள்ள சி.எம்.சி. விளையாட்டு மைதானம் , தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் கீழ்க்கண்ட முறைப்படி நடைபெறவுள்ளது. தடகளம் , இறகுபந்து , கபாடி , சிலம்பம் , கைப்பந்து , செஸ் , கோ-கோ போன்ற பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வருகின்ற 09.09.2026 காட்பாடி SDAT விளையாட்டரங்கிலும் , கூடைப்பந்து , கால்பந்து , மேசைப்பந்து , கையுந்து பந்து , யோகாசனா பள்ளி   மாணவர்களுக்கான போட்டிகள் வருகின்ற 09.09.2026 காட்பாடி வேலூரில் உள்ள VIT பல்கலைகழகத்திலும் , வளைகோல் பந்து பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான போட்டி வருகின்ற 09.09.2026...

• வேலூரில் காவலர் தினம்.

Image
 ·          வேலூரில் காவலர் தினம் - உயிர் நீத்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துறையினர் அஞ்சலி .           வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள காவல் துறை பயிற்சி மைதானத்தில் செப்டம்பர் 6 காவலர் தினத்தினை முன்னிட்டு மக்களுக்காக பணியாற்றி உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை   நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .              இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன்   காவலர்கள் நினைவு தூணுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் உதவி காவல் கண்காணிப்பாளர் தனுஷ்குமார் மற்றும் திரளான காவல் துறையினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.     மேலும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம். சமூக விரோத செயல்களை ஒடுக்குவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றதுடன் உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தி...

• வேலூரில் கம்பன் விழா.

Image
·          வேலூரில் கம்பன் விழா - பல தலைமுறை கவிஞர்களுக்கு கம்பர் ஒரு அமுதசுரபி - வி . ஐ . டி. துணைதலைவர் ஜி . வி . செல்வம் பேச்சு.       வேலூர் , பல தலைமுறை கவிஞர்களுக்கு கம்பர் ஒரு அமுதசுரபி என கம்பன் கழக விழாவில் வி . ஐ . டி துணைதலைவர் ஜி . வி . செல்வம் பேசினார் .   கம்பன் விழா :          வேலூர் டவுன் ஹாலில் வேலூர் கம்பன் கழகம் சார்பில் 48- வது ஆண்டு கம்பன் விழா , அமைப்பின் நிறுவனர் எஸ் . என் . குப்புசாமி முதலியார் நூற்றாண்டு விழா ஆகியவை நடைபெற்றது .    விழாவிற்கு வேலூர் கம்பன் கழக தலைவரும் , வி . ஐ . டி. துணைதலைவருமான ஜி . வி . செல்வம் தலைமை தாங்கி பேசுகையில் ,       உலகில் உள்ள பல்வேறு இலக்கியங்களில் தலைசிறந்தது கம்பராமாயணம் .       உலகை வென்ற மனிதர்கள் தவறு செய்து திருந்த வேண்டும் என்பதை உணர்த்தவே , ராமனும் , அனுமனும் கூட தலா ஐந்து முறை தவறு செய்ததாகக் கம்பர் தனது காவிய...