• வேலூரில் 9 மாவட்டங்களை சேர்ந்த மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி.
· வேலூரில் 9 மாவட்டங்களை சேர்ந்த மண்டல அளவிலான பளுதூக்கும் போட்டி - 400 - க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள அரசு பளு தூக்கும் பயிற்சி மையத்தில் முதல்வர் கோப்பைக்கான திருவண்ணாமலை மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் வேலூர் , திருவண்ணாமலை , திருப்பத்தூர் , கிருஷ்ணகிரி , ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி , விழுப்புரம் , கடலூர் , தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 400- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளாக நடைபெறும் பளு தூக்கும் போட்டிகளை மண்டல மேலாளர் சாந்தி துவங்கி வைத்தார். இதில் காமன் வெல்த் வீரர் சதிஷ் போட்டிகளை முன்னின்று நடத்தினார். இதில் பாலமுருகன் , பயிற்றுநர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் வெல்வோர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.