Posts

• வேலூர் சான்றளிக்கப்பட்ட விளம்பரங்களை வெளியிட வேண்டும்.

·         நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்த ல் 2026-ல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இயங்கும் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவால் சான்றளிக்கப்பட்ட விளம்பரங்களை மட்டுமே மின்னணு ஊடகங்களில் வெளியிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரங்களை மின்னணு ஊடகங்களில் (Television, FM, Social Media, Bulk SMS and Voice Message) வெளியிட அனுமதி வழங்கிடவும், வாக்குப்பதிவு   நாள் மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் (Silent Period-48 Hours) நாளிதழ்களில் வெளியிட அனுமதி வழங்கிடவும், நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் குறித்த செய்திகள், விதிமீறல்கள் ஆகியவற்றை கண்டறியவும் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஊடகச் சான...

• வேலூர் மாவட்டத்தில் 9,213 இடங்களில் சுவர் விளம்பரங்கள் அகற்றம்.

·         தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026- ஐ முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 9,213 இ டங்களில்   சுவர் விளம்பரங்கள் ,   சுவரொட்டிகள் ,   விளம்பர பதாகைகள்   அகற்ற ம்.    ·         இது தொடர்பான 44 புகார்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும்   மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் . தமிழ்நாடு சட்மன்ற பொது தேர்தல் 2026- ஐ முன்னிட்டு தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அரசு மற்றும் பொதுக்கட்டடங்கள் , தனியார் இடங்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன . வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை அரசு மற்றும் பொது இடங்களில் 6,130 இடங்களிலும் , தனியார் இடங்களில் 3,083 இடங்களிலும் என மொத்தம் 9,213 இடங்களில் சுவர் விளம்பரங்கள் , சுவரொட்டிகள்   மற்றும்   விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன . இவற்றில் அரசு மற்...

• வேலூரில் மஹாவீரர் ஜெயந்தி.

Image
·         வேலூரில் மஹாவீரர்   ஜெயந்தி.  ·         மேளதாளங்கள் முழங்க குதிரைகளுடன் ஊர்வலம்.             வேலூர் மாவட்டம் , வேலூர், பி . எஸ் . எஸ் . கோவில் தெருவில் உள்ள சம்பவ்நாத ஜெயின் ஆலயத்திலிருந்து மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரிசியை கொண்டு வழிபாடு நடத்தினர்.       பின்னர் குதிரைகளுடன் மேளதாளங்கள் முழங்க மஹாவீரர் சிலை மற்றும் திருஉருவ படம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து குதிரைகள் முன் செல்ல மேளதாளங்களுடன் நடனமாடி, பாடல்களை பாடியபடி, ஜெயின் சமுதாய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என   ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராஜேஷ்குமார் ஜெயின் தலைமையில், பிரகாஷ் ஜெயின் ஊர்வலத்தை துவங்கி வைக்க வேலூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஊர்வலம் அந்த ஆலயத்தை அடைந்தது.       இந்த ஊர்வலத்தில் ஜெயின் மதகுரு பக்தி ...

• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.

Image
·     வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில்    பிரதோஷம்.     ·         நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களை செய்து மஹா தீபாராதனை .        வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் , சந்தனம் , தேன், கரும்பு சாறு, இளநீர் , பன்னீர் , திருநீறு   உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்யப்பட்டது.       பின்னர் அருகம்புல் மாலை, மலர் மாலைகள், வில்வ இலைகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் அரோகரா முழக்கங்களுடன் பக்தர்கள் அனைத்து தோஷங்களும் நீங்க வேண்டி நந்தி பகவானை வழிபட்டனர்.  

• வேலூர் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுக கூட்டம்.

Image
·         வேலூர் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுக கூட்டம்.              வேலூர் மாவட்டம் , வேலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் மூன்றாவது முறையாக போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைக்கட்டு திமுக வேட்பாளர் நந்தகுமார், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் மற்றும் மதிமுக , கம்யூனிஸ்ட்கள் , தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர். இதில் வேலூர் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுகம் செய்யப்பட்டார்.               இக்கூட்டத்தில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் பேசுகையில்,              இந்த முறையும் நாம் ஒற்றுமையுடன் பணியாற்றி வேலூரில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனை வெற்றி பெற செய்ய வேண்டும். காரணம் பீகாரில் பாஜக ஆச...

• பி.டி.லீ. கல்லூரியில் AICRA நிறுவன உறுப்பினர் தொடக்க விழா.

Image
  காஞ்சிபுரம் பி . டி . லீ . செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் (AICRA) நிறுவன உறுப்பினர் தொடக்க விழா.            காஞ்சிபுரம் அடுத்த ஊவேரியில் அமைந்துள்ள பி . டி . லீ . செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இயந்திரவியல் துறை (Department of Mechanical Engineering) சார்பில் , " அகில இந்திய ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் கவுன்சில் " (AICRA) நிறுவன உறுப்பினர் தொடக்க விழா கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது . ​ நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் :       இந்நிகழ்விற்கு பி . டி . லீ . செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தலைவரும் , சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியுமான P. கலையரசன் தலைமை தாங்கி ஆசி வழங்கினார் .       இயந்திரவியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் S. பூபதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .           கல்லூரி முதல்வர் முனைவர் P. பழனிசாமி...