Posts

• காட்பாடி சட்டமன்றத் தொகுதி நல திட்ட உதவிகள்.

Image
 ·         காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் ரூ . 2.40 கோடி மதிப்பில் முடிவுற்ற 6 திட்டப் பணிகளை திறந்து வைத்து ,   98 பயனாளிகளுக்கு ரூ . 2.69 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் , வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார்கள். வேலூர் மாவட்டம் , காட்பாடி சட்டமன்ற தொகுதியில் ரூ . 2.40 கோடி மதிப்பில் முடிவுற்ற 6 திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பள்ளிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா , சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை , புதிய மின்னணு குடும்ப அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் என மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூ . 2.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா.சுப்புலெட்சுமி , வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த் வழங்கினர். வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் , வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் , வேலூர் மாநகராட்சி , மண்டலம் 1, காட்பாடி தாராபடவேடு   பகுதியில்   காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் நீர்வள துறை அமைச்சர் துர...

• காட்பாடி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகள்.

Image
காட்பாடி, அம்மூண்டி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.46.44 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை மற்றும் வெப்பாலை கிராமம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ.23.08 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு நீர்வள துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார். வேலூர் மாவட்டம் , காட்பாடி வட்டம் , அம் மூ ண்டி கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.46.44 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை மற்றும் ரூ.23.08 கோடி மதிப்பீட்டில் காட்பாடி வட்டம், வெப்பாலை கிராமம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார். வேலூர் மாவட்டம் , காட்பாடி வட்டம் அம் மூ ண்டி கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி. வேலூர் மாவட்டம் , காட்பாடி வட்டம் , அம் மூ ண்டி கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தமி ழ்நாடு எல்லையில் இருந்து தொலைக்கல் 90.00 கி.மீட்டரில் இத்தடுப்பணை அமையவுள்ளது. இத்தடுப்பணை   அமைக்க மாநில நிதியின் கீழ் ரூ. 46.44 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்தடுப்பணையானது 470 மீட்...

• குடியாத்தம் சட்டமன்ற தொகுதி நலத்திட்ட உதவிகள்.

Image
குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,341 பயனாளிகளுக்கு ரூ . 7.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் , குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர். வேலூர் மாவட்டம் , குடியாத்தம் பாபு மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,341 பயனாளிகளுக்கு ரூ . 7.49 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி , குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலுவிஜயன் வழங்கினர். நலத்திட்ட உதவிகள் விவரம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் வட்டம் மற்றும் பேரணாம்பட்டு வட்டங்களை உள்ளடக்கிய சைனகுண்டா , கல்லப்பாடி ,   தாட்டிமாணப்பல்லி ,   இராமாலை , ரங்கசமுத்திரம் , கருணீகசமுத்திரம் , பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளை சார்ந்த 624 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும் , பேரணாம்பட்டு வட்டம் , குடியாத்தம் வட்டம் ,   கீ.வ.கு ப்பம் வட்டத்தை சார்ந்த கள்ளூர் , சீவூர் மற்றும் ஆம்பூர் வட்டத்தை சார்ந்த அகரம் சேரி ஆகிய கிராமங்களை சார்ந்த 717 பயனாளிகளுக்கு பு...