Posts

• வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு மாத்திரை வழங்கும் திட்டம்.

வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு மாத்திரை வழங்கும் திட்டத்தின்கீழ்   (2026)   10.08.2026 மற்றும் 17.08.2026 அன்றும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது - என மாவட்ட ஆட்சி தலைவர்.            தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின்கீழ் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) 10.08.2026 அன்றும், விடுப்பட்டவர்களுக்கு 17.08.2026 அன்றும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது.                 மேற்படி முகாமானது அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலமாக சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் நோடல் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.                         1 முதல் 2-வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மா...

• TABCEDCO மூலம் கடன் மேளா முகாம்கள்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ( TABCEDCO ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள் - 2026-2027, வங்கி கிளை வாரியாக கடன் மேளா முகாம்கள்   நடைபெறவுள்ளது - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்                 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன், குழுக் கடன் மற்றும் கல்வி கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.   அதன் விவரம் பின்வருமாறு: வ.எண் திட்டம் தகுதி தேவைப்படும் சான்றுகள் 1 தனி நபர் கடன் 1.             விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்...

• ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள்.

·         சமூக நல   துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE)   என்ற திட்டத்திற்கு பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பணிபுரிந்திட பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் . தழிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் (24X7) பணிபுரிந்திட பாதுகாவலர் (Security) (24X7), மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multipurposer) (24X7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. பாதுகாவலர் (தொகுப்பூதியம்-Rs. 12,000/-) காலிபணியிடத்திற்கான கல்வி தகுதி 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி. மற்றும் பல்நோக்கு உதவியாளர் (தொகுப்பூதியம்-Rs. 10,000/-) காலி பணியிடத்திற்கான கல்வி தகுதி - 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி / தோல்வி, நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராகவும், மையத்தினை தூ...

• வேலூர் இணையவழி விளையாட்டு தீய விளைவு முகாம்

Image
·         வேலூர் மாவட்டத்தில் இணையவழி விளையாட்டு க்கு அடிமை யாவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்   நடைபெற்றது.                 வேலூர் மாவட்டத்தில் இணையவழி விளையாட்டு க்கு அடிமை யாவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்றது                 தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து, மாணவர்களிடையே "இணையவழி விளையாட்டு அடிமைத்தனத்தினால் ஏற்படும் தீய விளைவுகள்" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. மாணவர்கள் மற்றும் பிற தரப்பினரிடையே இணையவழி விளையாட்டு அடிமைத்தனத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற வல்லுநர்கள், இணையவழி விளையாட்டு அடிமை...

• வேலூர்12-வது தேசிய கைத்தறி தினவிழா.

Image
·         வேலூர் 12-வது தேசிய கைத்தறி தினவிழா - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்து 15 பயனாளிகளுக்கு ரூ.4.72 இலட்சம் மதிப்பில்   நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.                         1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை போற்றும் வகையிலும் கைத்தறி நெசவாளர்களின் பங்கினை கௌரவிக்கும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களின் பெருமையை போற்றும் விதமாக தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதலாவது தேசிய கைத்தறி தினம் தமிழ்நாட்டில் 07.08.2015 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.                  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅல...