Posts

• பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி நூற்றாண்டு விழா.

Image
·         பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்  தலைமையில்  நடைபெற்றது. வேலூர் மாவட்ட ம், பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் மரக்கன்றை நடவு செய்து, நூற்றாண்டு விழா ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும், ஓய்வு பெற்ற முன்னாள்   தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், பெருமுகை கிராமத்தில் கூலி தொழிலாளர் குழந்தைகளின் கல்வி நலன் கருதி 26.07.1926 அன்று லேபர் பள்ளியாக அப்போதைய சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டது. இப்பள்ளி வேலூர் நகரப்பகுதிக்கு அருகில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இப்பள்ளி அமைந்துள்ளது. பெருமுகை பள்ளியானது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்டு, பின்னர் நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளியாகவும் இயங்கி வந்து தற்போது அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறத...

• பள்ளிகொண்டா, குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் ஆய்வு.

Image
·   பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.                 வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், பள்ளிகொண்டா மற்றும்   குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி கட்டுவதற்கான நிரந்தர   இடம் தேர்வு செய்வது குறித்து பள்ளிகொண்டா அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி யின் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   தொடர்ந்து சி-2063 குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு நிலையம் மற்றும் சூரிய ஒளி உலர்களத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சூரிய ஒளி உலர்களம் மற்றும் எண்ணெய் பிழியும் இயந்திரத்தின் கொள்ளளவு குறித்து கேட்டறிந்தார். உலர்களத்தின் கொள்ளளவு-7500 தேங...

• COFFEE WITH COLLECTOR.

Image
·         COFFEE WITH COLLECTOR நிகழ்வின் வாயிலாக அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ, மாண வி களுடன் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கலந்துரையாடி னார்.               வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் COFFEE WITH COLLECTOR என்ற நிகழ்வின் வாயிலாக வேலூர் வட்டம், பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ, மாண வி களுடன் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்துரையாடி னார். இக்கலந்துரையாடலின்போது மாவட்ட ஆட்சி தலைவர் மாணவ, மாணவிகளிடம் தெரிவித்ததாவது.                  மாணவர்கள் போட்டி தேர்வுகளை சந்திக்க தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் . தமிழ்நாடு அரசு மாணவ , மாணவி களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதனை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். தினசரி நாளிதழ்களை படிக்க வேண்டும். மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக தங்களுக்குள்ளேயே போட்டி தேர்வு நடத்தி   பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்னால் முடியும் என்ற ந...

• ஆடி இரண்டாம் வெள்ளி.

Image
·          ஆடி இரண்டாம் வெள்ளி.   ·          வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு   குங்குமம் அலங்காரம்   ·          செல்லியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்.              வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளி முன்னிட்டு ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு குங்குமம் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.       வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ செல்லியம்மனுக்கு ஆப்பிள், எலுமிச்சை உள்ளிட்ட பழங்களை கொண்டு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்து மகா தீபாராதணை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

• அரசு வேலூர் மருத்துவ கல்லூரி சான்றிதழ் வழங்கும் விழா.

Image
·         அரசு வேலூர் மருத்துவ கல்லூரி யில் 16- வது இளநிலை மருத்துவ பட்ட படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா .    ·         வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் 100     மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். வேலூர் மாவட்டம் , அடுக்கம்பாறையில் உள்ள அரசு வேலூர் மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற 16- வது இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா வில், மாவட்டஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் , இளநிலை மருத்துவ பட்ட படிப்பினை முடித்த   100 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது. உங்க ளுடைய சவால்கள் இன்றிலிருந்து தொடங்குகிறது.   இவ்வளவு நாள் நீங்க ள் கற்ற கல்வி,   எடுத்த முயற்சிக ளின்   பலன்தான் இன் று நீங்க ள்   அனைவரும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளீர்கள். இதனுடைய முடிவு இ னி நீங்க ள் செய்யவுள்ள மருத்துவ சேவையில்தான் தொடங்குகிறது..   இனி நீங்க ள் ஒவ்வொரு நாளும் வெள்ளை கோட் அணியும்போது சம...

• வேலூர் மாற்று திறனாளி சிறப்பு குறை தீர்வு கூட்டம்.

Image
·         வேலூர் மாவட்ட   மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர் வு கூட்டம் . ·         8 மாற்று திறனாளிகளுக்கு ரூ.29,205/- மதிப்பில் சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.                  வேலூர் மாவட்டத்தில், மாற்று திறனாளிகளுக்கான குறைகளை களையும் பொருட்டு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான மாற்று திறனாளிகள் நல சங்க நிர்வாகிகள், துறை அலுவலர்கள் கொண்டு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.                  அதன்படி வேலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான குறைகளை களையும் பொருட்டு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், தலைமையில் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில்   நடைபெற்றது. ...

• சன்பீம் சி.பி.எஸ்.இ. தொடக்க பள்ளி விளையாட்டு விழா

Image
 ·          சன்பீம் சி . பி . எஸ் . இ. தொடக்க பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா - துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் பரிசு வழங்கி பாராட்டு.       வேலூர் மாவட்டம், காட்பாடி , சன்பீம் சி . பி . எஸ் . இ தொடக்க பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது . சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார் . பள்ளி மாணவர் தலைவி ரித்திமாரூஹல் வரவேற்றார் . விளையாட்டு ஆண்டறிக்கை காணொளி மூலம் தொகுத்து வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினருக்குப் பள்ளியின் தாளாளர் தங்கபிரகாஷ் நினைவு பரிசு வழங்கினார் .              சிறப்பு விருந்தினராக காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற நேரு அணிக்கும் , பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 250 மாணவ , மாணவிகளுக்கும் , 13 ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். ...