Posts

• செப்டம்பர் மாத தாயுமானவர் திட்டம்.

·         202 6 ஆம் ஆண்டு   செப்டம்பர்   மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இல்லம் சென்று பொது விநியோக திட்ட பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர்   திட்டத்தின்கீழ்   செப்டம்பர்   5   மற்றும் 7 -ம் தேதிகளில்” தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் .                                                       அரசாணை (நிலை) 82 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1) துறை நாள்.11.08.2025 மற்றும் அரசாணை (நிலை) 114 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1) துறை நாள்.16.10.2025-களின் படி இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட...

• பேர்ணாம்பட்டு, கீ.வ.குப்பம், குடியாத்தம் வளர்ச்சி பணிகள் ஆட்சியர் ஆய்வு.

Image
பேர்ணாம்பட்டு, கீ.வ.குப்பம் மற்றும் குடியாத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில்   வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு, கீ.வ.குப்பம் மற்றும் குடியாத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஏரியை தூய்மைப்படுத்தல், சாலை பணி, நீர் குளம் அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தத்தில் உள்ள   அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் வழங்கப்படவுள்ள மோதிரங்களை பாதுகாத்து வைக்க ரூ.1.75 இலட்சம்   மதிப்பில் பாதுகாப்புப் பெட்டகம் (safety locker) அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்...

• வேலூர் தர்மராஜா கோவில் கும்பாபிஷேகம்.

Image
 ·          தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம் .           வேலூர் மாவட்டம் , தோட்டப்பாளையத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் சமேத   தர்மராஜா திருக்கோவில் உள்ளது. இதன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.       பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் வைத்து மூன்று நாட்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டது. பூர்ணாஹூதிக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ராஜகோபுரம், ஆலய விமானம், மூலவர் சன்னதி ஆகிய கோபுரங்களுக்கு மகா சம்ப்ரோக்ஷணம் எனும் கும்பாபிஷேகமானது நடைபெற்றது.     இதில் ஜெயசந்திரன் சுவாமிகள் , அப்பாஜி சுவாமிகள் , வனதுர்கா பீட சுவாமிகள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.  

• ராஜஸ்தான் நாடோடி குடும்பங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

Image
  ·          ராஜஸ்தான் நாடோடி குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.     வேலூர் மாவட்டம் , காட்பாடியில், ராஜஸ்தானை சேர்ந்த நாடோடி குடும்பங்கள் வைபவ் நகர் வி . ஐடி பல்கலைகழகம் மூன்றாவது நுழைவாயிலின் அருகில் தனியாருக்கு சொந்தமான   இடத்தில் கூடாரங்களை அமைத்து 7 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றனர்.       இந்த நிலையில் இந்த 45 குடும்பங்களையும் பக்கத்து வீட்டுகாரர் மற்றும் நிலத்துக்காரரான சிவக்குமார் என்பவர் கூடாரங்களை காலி செய்துவிட்டு வேறு எங்காவது செல்லுங்கள் என மிரட்டுகிறார். இதில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் பெயரை சொல்லி மிரட்டுவதால் தங்களுக்கு இக்கூடாரங்களை காலி செய்யாமல் அங்கேயே இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர்.              இந்த 45 குடும்பங்களும் அரசின் அனுமதியை பெறாமல் மின்சார ஒயரில் கொக்கி போட்டு ...

• பேர்ணாம்பட்டில் விவசாயிகள் ஆர்பாட்டம் - கைது.

Image
 ·          பேர்ணாம்பட்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் - கைது .            வேலூர் மாவட்டம் , பேர்ணாம்பட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாநில பொதுசெயலாளர் உதயகுமார் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.       சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த கோரி பலமுறை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் திடீர் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்த விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.  

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர்  பொதுமக்களிடம்   658  கோரிக்கை மனுக்களைப் பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது .                  மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை , ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொது பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 658 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்...