Posts

• மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு.

·         மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு – நிதி தகுதி தளர்வு ;      TANFINET இணையதள போர்டல் மீண்டும் திறப்பு . தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் ( TANFINET) பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கத்தில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை ( District Level Franchisee Partners - DLFP) தேர்வு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக 01.01.2026 அன்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில் நிதி தகுதி விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விண்ணப்பதாரர்களுக்கு கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் சராசரி ஆண்டு வருவாய் 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்த நிலையில் தற்போது அது 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் என தளர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாரத் நைட் திட்ட பணிகளை தற்போது சுமார் 96% வரை நிறைவடைந்துள்...

• புத்த மதத்தினர் நாக்பூர் தீக்ஷ பூமி நிதியுதவி திட்டம்.

·         புத்த   மதத்தினர் நாக்பூர் தீக்ஷ பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொள்பவருக்கு நிதியுதவி வழங்கும் திட்ட த்தின்கீழ் விண்ணப்பித்து   பயனடைய வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                  தமிழ்நாட்டை சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷ பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்புபவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.5,000/- வீதம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2026-ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவத்தினை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்...

• வேலூரில் அதிமுக-வினர் ஆர்பாட்டம்.

Image
·          வேலூரில் அதிமுக-வினர் ஆர்பாட்டம் .   ·          விவசாய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய கோரியும் ,    மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை முறையாக பெற்று தராத   தவெக அரசை கண்டித்து அதிமுக-வினர் வேலூரில் ஆர்பாட்டம் .              வேலூர் மாவட்டம் , வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.         இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான வேலழகன் மற்றும் மாநகர மாவட்ட செயலாளர் அப்பு உள்ளிட்ட திரளான அதிமுக-வினர் கலந்து கொண்டு விவசாய கடனை முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரியும் , மேகதாது   விவகாரத்தில் மெத்தனம் காட்டி தமிழகத்துக்கு தண்ணீரை முறையாக பெற்றுத் தராத தவெக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ...

• பி.எஸ்.என்.எல். - 80-வது சுதந்திர தினம் பல்வேறு சலுகைகள்.

Image
·          இந்தியாவின் 80- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பி . எஸ் . என் . எல். நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது - வேலூர் கோட்ட பொதுமேலாளர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி.         வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள பி . எஸ் . என் . எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் பொதுமேலாளர் ராஜு மற்றும் இணைபொதுமேலாளர் அசோக்நாயக் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,     பி . எஸ் . என் . எல். நிறுவனம் என்றும் மக்கள் சேவை நோக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திர தினம் 80- ம் ஆண்டை கொண்டாடும் வகையில் பி . எஸ் . என் . எல். சிம் கார்டை வெறும் ரூ .1 கொடுத்து வாங்கி சென்று 22 நாட்களுக்கு தினசரி ஒரு ஜிபி டேட்டா மற்றும் இலவச அழைப்புகளை மேற்கொண்டு பேசலாம்.     இதேபோல் பி . எஸ் . என் . எல் நிறுவனம் பொழுது போக்கிற்காக வாடிக்கையாளர்களுக்கு 30 தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை இலவசமாக அளிக்கிறது. அதனையும் கட்டணமின்று காண...

• “ஞானம்பாடி”விருது வழங்கி கவிஞர் வைரமுத்து கவுரவிப்பு.

Image
·          வேலூர் விஐடி பல்கலைகழகத்தில்   தமிழியக்கம் சார்பில் “ ஞானம்பாடி ” விருது வழங்கி கவிஞர் வைரமுத்து கவுரவிப்பு.   ·          தமிழ் மொழியை எங்கும் விட்டு கொடுக்க வேண்டாம் - கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்.     வேலூர் : தமிழ் மொழியை எங்கும் விட்டு கொடுக்க வேண்டாம் ; படைப்பாளியைப் பார்க்காமல் , படைப்புகளை பாருங்கள் என்று ஞானபீட விருதாளர் கவிஞர் வைரமுத்து பேசினார் .       வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் தமிழியக்கம் சார்பில் ஞானபீட விருது பெற்ற கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது .         விழாவில் தமிழியக்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு , “ ஞானம்பாடி ” விருதை , தமிழியக்க நிறுவனரும் , விஐடி வேந்தருமான கோ . விசுவநாதன் வழங்கி சிறப்பித்தார் .         ஞானபீட விருதாளர் கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றி பேசியதாவது :     எனக்கு ...