Posts

• வேலூர் அரசு மருத்துவமனை, ஆவின் ஆட்சியர் ஆய்வு.

Image
·         வேலூர் அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஆவின் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், அங்கன்வாடி மையம், ஆவின் ஆகிய இடங்களில் நேரடியாக   ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுகாதார நிலையத்தில்   வருகை பதிவேடுகள் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் மருந்து பொருட்களின் இருப்பு குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும்    கேட்டறிந்தார். தொடர்ந்து   அணைக்கட்டு அரசு பொது மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பிரிவு, மகப்பேறு பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஊணை வாணியம்பாடி அரசு துணை சுகாதார நிலையத்தை ப...

• வேலூர் மாவட்ட கால்நடைகள் விவரங்களை பதிவேற்றம்.

·         வேலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் விவரங்களை தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தின் பாரத் பசுதான் போர்ட்டலில் பதிவேற்றம்.                   வேலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் விவரங்களை தரவு தளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு இந்திய அரசால் தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தின் (NDLM) பாரத் பசுதான் போர்ட்டலில் (Bharat Pashudhan Portal) பதிவேற்றம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தரவு தளத்தின் மூலம் அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளும் எளிதில் சந்தை மற்றும் சேவை அமைப்புகளை செயல்படுத்த உதவுகிறது. விவசாயிகளின் கால்நடைகளுக்கு 12 இலக்க அடையாளக் குறியீடு (BAR CODE) கொண்ட காதுவில்லை பொருத்தப்பட்டு மின்னணு தகவல் மூலம் கால்நடைகளின் உரிமையாளர் விவரம், கால்நடைகளின் காப்பீடு விவரம், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி பணிகள், நோயின் விவரம் மற்றும் பால் உற்பத்தி போன்ற அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் அரசு அறிமுகப்படுத்தும் புதிய திட்டங்களையும் டிஜிட்டல் ம...

• வேலூர், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஆட்சியர் ஆய்வு.

Image
·         வேலூர் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் மற்றும் சாலை பணிகள் குறித்து   மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட வெங்கடாபுரம், பெருமுகை , செம்பேடு ஆகிய ஊராட்சிகளிலும், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம், அகரம் மற்றும் இறைவன்காடு ஆகிய ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள், சாலை மற்றும் குடிநீர் பணிகள் குறித்து   மாவட்ட   ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.   வெங்கடாபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மையத்தில் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கிலோ ரூ.10 மதிப்பில் விற்கப்படும் இயற்கை உரங்களை பார்வையிட்டார். மேலும் இந்த ஊராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு, குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் முறைகள் விரிவாக கேட்டறிந்தார். பிளாஸ்டிக் ப...

• வேலூர் மாவட்ட குழந்தைகள் இல்ல மாணவிகள் நினைவு பரிசுகள்.

Image
 ·         வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட   ஆட்சி தலைவர் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார். வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை   பாராட்டி மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.                 வேலூர் மாவட்டத்திலுள்ள 14 குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவ, மாணவிகளின் 15 மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்க்கல்வி பயில உள்ளனர். இம்மாணவ, மாணவிகளுக்கு   உயர்க்கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில்   மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று   15 மாணவ, மாணவிகளையும் நேரில் அழைத்து அவர்களுக்கு தேநீர் மற்றும் இனிப்புகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் அவர்கள...

• சிறை கைதிகளின் மறுவாழ்விற்காக அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.

Image
·          சிறை கைதிகளின் மறுவாழ்விற்காக அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.  ·          சிறையிலிருந்து விடுதலையானவர்கள் மீண்டும் சமுதாயத்தில் மறுவாழ்வு வாழ பணியாற்றுங்கள் - வேலூர் சரக சிறை துறை தலைவர் சண்முகசுந்தரம் சிறை அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கி பேச்சு.              வேலூர் மாவட்டம் , தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் 9- வது பேட்ஜ் சிறை அதிகாரிகளுக்கான மூன்று மாதங்கள் பயிற்சி நிறைவடைந்தது. இதன் பட்டமளிப்பு விழாவானது சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் ப்யூலா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.       இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக சிறை துறை தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இதில் சிறப்பாக பயிற்சி முடித்த மீயூனாகட்டூன் மற்றும் பாலச...

• தூய்மை பாரத இயக்கம் விண்ணப்பங்கள்.

·         தூய்மை பாரத இயக்கம் விண்ணப்பங்கள் . ·         வேலூர் கிராம ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் ( கிராமம் ) திட்ட பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கும் , கண்காணிப்பதற்கும் , மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு (DPMU)   மற்றும் தகவல் கல்வி தொடர்பு பிரிவு (IEC) ஆகியவை உருவாக்கப்பட்டு வெளிமுகமை (Outsourcing) முறையில் திடக்கழிவு மேலாண்மை (SWM)   மற்றும் சுகாதாரத்திற்கு (Sanitation) இரண்டு பணியாளர்களையும் , தகவல் கல்வி தொடர்பு பிரிவிற்கு (IEC)   இரண்டு பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர் . இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் , கிராம ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் ( கிராமம் ) திட்ட பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கும் , கண்காணிப்பதற்கும் , மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு (DPMU)   மற்றும் தகவல் கல்வி தொடர்பு பிரிவு (IEC) ஆகியவை...