• காவல் துறை துணை ராணுவ படை அணிவகுப்பு.
· சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் துறை மற்றும் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு. வேலூர் மாவட்டம் , வேலூரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அமைதியாக தேர்தல் நடைபெறவும் கிரீன் சர்க்கிள் முதல் மம்மி மருத்துவமனை வரையில் மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் தனுஷ்குமார் தலைமையில் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் கையில் துப்பாக்கிகளுடனும், லத்திகளுடனும் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிறைவடைந்தது.