Posts

• இராணிப்பேட்டை சாலை விபத்துகளை தடுக்கும் “Single Pole Solar Blinkers”.

Image
 இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் “Single Pole Solar Blinkers” தொடக்க விழா .       இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு , ஆயுதப்படை தலைமையகம் அருகிலுள்ள சென்னை – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் “Single Pole Solar Blinkers” அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் , தொடங்கி வைத்தார் .         மேலும் , மாவட்டம் முழுவதும் புதிதாக கண்டறியப்பட்ட Accident Hotspot Areas சுமார் 51 பகுதிகளில் இந்த அமைப்புகள் நிறுவப்பட உள்ளன .       இந்த அமைப்புகள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை சுடராக செயல்பட்டு , சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உதவும் . மேலும் , சாலை பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .       இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் , காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பலர் கலந்து கொண்ட...

• வேலூரில் நீட் தேர்வு கண்டித்து திக ஆர்பாட்டம்.

Image
 ·         வேலூரில் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்தும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்பாட்டம்.             வேலூர் மாவட்டம் , வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்தும், நாடு முழுவதும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரியும் நீட் தேர்வு இனி நடத்த கூடாது என மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.       இதில் திமுக , மதிமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இதில் திரளானோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.

• வேலூர் பொற்கொடியம்மன் ஏரி திருவிழா.

Image
·         வேலூர் பொற்கொடியம்மன் ஏரி திருவிழா.     ·         ஒரு லட்சம் பேர் கூடி ஏரியில் சமைத்து மக்களுடன் உணவு உண்டு தேரை தூக்கி வழிபாடு     ·         மகிழ்ச்சியுடன் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தினர்.     வேலூர் மாவட்டம் , அனைக்கட்டு அருகேயுள்ள வேலங்காடு கிராமத்தில் ஏரியில் அமைந்துள்ளது அருள்மிகு பொற்கொடியம்மன் ஆலயம். இதில் ஆண்டுதோறும் ஏரித்திருவிழா என்றழைக்கப்படும் புஷ்பரத தேர் திருவிழா நடைபெற்றது.      வித்தியாசமான முறையில் வல்லண்டராமம் , வேலங்காடு , அன்னாசிபாளையம் , பனங்காடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மக்கள் பச்சை ஓலை கட்டி கொண்டு மாட்டு வண்டிகளிலும், டிராக்டர் ஆகியவற்றிலும் தென்னை ஓலை கட்டி கொண்டு ஏரியினுள் வந்து குடும்பம் குடும்பமாக கூடி பொற்கொடியம்மன் வணங்கி விவசாயம் செழிக்க வேண்டும், கால்நடைகள் நோய் நொடியின்றி இருக்க ...

• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.

Image
        வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.     ·         நந்தி பகவானுக்கு பால் தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக,   அலங்காரம்.      ·         பக்தர்கள் ஹரோ ஹரா முழக்கங்களுடன் தரிசனம்           வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் , சந்தனம் , தேன், கரும்பு சாறு, இளநீர் , பன்னீர் , திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்யப்பட்டது.       பின்னர் அலங்காரங்களை செய்து மலர் மாலைகள் வில்வ இலைகள், அருகம்புல் மாலைகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடந்தது.      இதில் அரோகரா முழக்கங்களுடன் பக்தர்கள் அனைத்து தோஷங்களும் நீங்க வேண்டி நந்தி பகவானை வழிபட்டனர். மேலும் மேளதாளங்கள் முழங்க சாமி உட்பிரகார...

• பொய்கை அருகே தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்தது.

Image
  ·         பொய்கை  அருகே  சென்னை பெங்களூர்  தேசிய  நெடுஞ்சாலையில்  பாலத்தின்  மீது   தனியார்  பேருந்து   தீப்பற்றி  எரிந்தது.    ·         தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரமாக போராடி தீயை அணைத்தனர்.         வேலூர் மாவட்டம் , பொய்கை கிராமத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரிலிருந்து வேலூருக்கு ஒரு சொகுசு பேருந்து வந்தது. பேருந்தின் பாகங்களை உடைத்து எடுப்பதற்காக வேலூருக்கு வந்ததை ஓட்டுநர் வினோத்குமார் ஓட்டி வந்தார்.      பொய்கை மேம்பாலம் அருகே வரும்போது திடீரென பேருந்தின் டயர் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. ஓட்டுநர் வினோத்குமாரை பேருந்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி உயிர் தப்பினார்.       சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை வேக வேகமாக அணைத்தனர். பாலத்தின் ம...