• மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் “விழுதுகள்”.
மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் “ விழுதுகள் ” . “ விழுதுகள் ” உங்கள் ஊருக்கு அருகிலேயே உள்ளது! அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகளும் , அரசு நலத்திட்ட உதவிகளும் இப்போது ஒரே இடத்தில் கிடைக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம்தான் " விழுதுகள்" மையம். மாற்று திறனாளிகள் நலத்துறை , உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 21 வகையான மாற்று திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை எளிதாகப் பெற இந்த திட்டம் உதவுகிறது. அதன்படி , வேலூர் மாவட்டத்தில் , வருவாய் கோட்ட அளவில் 1. அரசு பெண்ட்லேண்ட மருத்துவமனை, வேலூர். 2. அரசு தாலுக்கா மருத்துவமனை, பேர்ணாம்பட்டு ஆக மொத்தம் 02 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன. விரைவில் இம்மையங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும் , தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள 08 வட்டார அளவில் 1. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊசூர், 2. அரசு ஆரம்ப சுகாதார ...