Posts

• காட்பாடி “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் ஆட்சியர் ஆய்வு.

Image
·         காட்பாடி “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின்கீழ் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு.         ” உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் ” படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து , மக்களின் குறைகளை கேட்டறிந்து , அரசின் அனைத்து நலத்திட்டங்களும் , சேவைகளும் , தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று தமி ழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளது .             அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் , காட்பாடி வட்டத்தில் மாவட்ட ஆட்சி   தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு , ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் காட்பாடி வட்டத்தில் “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின்கீழ் வேலூர் ...

• வேலூரில் காமராஜர் பிறந்த நாள் விழா.

Image
·          வேலூரில் காமராஜர் பிறந்த நாள் விழா.   ·          முன்னாள் பெருந்தலைவர் சி.கே.தேவேந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.       பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட காங்கிரஸார் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடினர் .       வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட துணை தலைவரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான சந்திரபிரகாஷ் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா வேலூரில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது . முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ் அனைவரையும் வரவேற்று பேசினார்.       இந்த விழாவில் வேலூர் மாவட்ட பொருளாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான சி . கே . தேவேந்திரன் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ...

• வேலூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்பாட்டம்.

Image
·          பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்து நிறுத்து.   ·          பாலியல் குற்றங்களுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.   ·          டாஸ்மாக் மதுபான கடைகளை படிப்படியாக மூடி போதை கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தவும்.   ·          சிங்கப்பெண் காவல் படைக்கு தனி அலுவலகம் , கூடுதல் காவலர்கள் , கூடுதலான அதிகாரம் வழங்க வேண்டும்.   ·          வேலூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்பாட்டம்.              வேலூர் மாவட்டம் , வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்பாட்டமானது மாவட்ட செயலாளர் காவேரி தலைமையில் நடைபெற்றது. இதனை முன்ன...