• வேலூர் விவசாயிகளுக்கு ‘விதை பாதுகாவலர்’ விருதுகள்.
· சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 6 மாநில விவசாயிகளுக்கு ‘ விதை பாதுகாவலர் ’ விருதுகள் - வி . ஐ . டி துணைதலைவர் சங்கர் விஸ்வநாதன் வழங்கினார் வேலூர் , வேலூர் வி . ஐ . டி. பல்கலைகழக வளாகத்தில் , சத்குருவின் ‘ மண் காப்போம் ’ இயக்கம் சார்பில் , ' பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா மற்றும் கருத்தரங்கம் ' நடைபெற்றது . இதில் 6 மாநிலங்களை சேர்ந்த 9 முன்னோடி விவசாயிகளுக்கு , ‘ விதை பாதுகாவலர் விருதுகள் – 2026’ வழங்கி கௌரவிக்கப்பட்டது . வி . ஐ . டி பல்கலைகழகத்தின் துணைதலைவர் சங்கர்விஸ்வநாதன் இவ்விருதுகளை வழங்கினார் . இவ்விழாவில் சோழ மண்டல நிதி நிறுவனத்தின் நிர்வாக துணைதலைவர் நரேந்திரகுமார் , கலைமாமணி , மரபின் மைந்தன் முத்தையா மற்றும் வி . ஐ . டி விவசாய கண்டுபிடிப்புகள் பள்ளியின் துறை தலைவர் ஆர் . ராஜேந்திரன் , ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர் . இந்த விழாவில் 2,500- க்க...