• இராணிப்பேட்டை ரூ.12.6 லட்சம் மதிப்பு 107 செல்போன்கள் மீட்பு.
· இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ .12.6 லட்சம் மதிப்புள்ள 107 செல்போன்கள் மீட்பு · காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு இராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டனர் . இதன் தொடர்ச்சியாக , காணாமல் போன செல்போன்களின் IMEI எண்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப நடவடிக்கையின் மூலம் ரூ .12.6 லட்சம் மதிப்புள்ள 107 செல்போன்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன . மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மீட்கப்பட்ட செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன...