Posts

• பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன்

·         வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் ( Pradhan Mantri Shram Yogi Maandhan - PM-SYM) பங்களிப்பு ஓய்வூதிய திட்ட த்தில் தகுதியுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதை எட்டிய பின் மாதந்தோறும் ரூ.3,000/- உறுதியான ஓய்வூதியம் வழங்கும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் சேர்ந்து பயனடையலாம். பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan Mantri Shram Yogi Maandhan – PM-SYM) என்ற திட்டம் 18 முதல் 40 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்திய அரசின் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும். இத்திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால், இந்திய அரச...

• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலய ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடியேற்றம்.

Image
·          வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடியேற்று விழா - பக்தர்கள் வழிபாடு .             வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் எதிரில் உள்ள கொடி மரத்தின் அருகில் சிறப்பு யாகங்களை நடத்தி கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.      தொடர்ந்து அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  

• வேலூர் மாநகராட்சி காட்பாடி ஊராட்சி ஒன்றிய பணிகள் ஆய்வு.

Image
·         வேலூர் மாநகராட்சி மற்றும் காட்பாடி ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்டபணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி   தலைவர்  ஆய்வு. வேலூர் மாவட்ட ம், வேலூர் மாநகராட்சி மற்றும் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் பூங்கா, வீட்டு குடிநீர் இணைப்பு, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் கோட்டை பெரியார் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு   செய்தார். பூங்காவில் ஒளிப்படம் திரையிடும் அறையை ஆய்வு செய்தார். மேலும், பூங்காவை தூய்மையாக பராமரிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, காட்பாடி வட்டம், வார்டு எண்.6, செல்வம் நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் 24 X 7 குடிநீர் வழங்கும் திட்ட பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு   செய்தார். இந்த ஆய்வின்போது வீட்டு குடிநீர் இணைப்பு (HSC) கணக்கெடுப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டன . கணக்கெடுப்பு பணிகளை துரிதப்படுத்தி , நடப்...

• வேலூர் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை காணொளி காட்சி முதலமைச்சர் திறப்பு.

Image
 ·         திருவள்ளூவர் பல்கலைகழகம் மற்றும்   கல்லூரிகளில்   ரூ.22.36 கோடி மதிப்பில்   உயர்கல்வி துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் 5 முடிவுற்ற பணிகளை காணொ ளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர்   திறந்து வை த்தார். காட்பாடி வட்டம், சேர்க்காடு ஊராட்சியில் திருவள் ளூ வர் பல்கலை கழகத்தில் உயர்கல்வி துறையின் சார்பில் ரூ.600 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 18 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் காணொ ளி காட்சி வாயிலாக திறந்து வை த்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்.              தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உயர்கல்வி துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட கட்டடங்கள் விவரம் 1.         வேலூர் மாவட்டம்,   காட்பாடி வட்டம்,   சேர்க்காடு ஊராட்சியில் திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் ரூ.600 இலட்சம்...

• வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் பயிற்சி.

·         அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், வேலூரில் பயிற்சி பெற 14.08.2026 வரை விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சி தலைவர் . ஐ . டி . ஐ . எனப்படும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் வேலூரில் உள்ள 15 தொழிற் பிரி வு களுக்கு கடந்த   ஜீன் -26 முதல் சேர்க்கை நடைபெற்று கொண்டுள்ளது .     மாணவர்கள் சேர்க்கைக்கு கால அவகாசம் 14-08-2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்பொழுது 73 இடங்கள் காலியாக உள்ளது . இதிலுள்ள பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள் , பேசிக் டிசைனர் (2), ரோபோடிக்ஸ் (17), மெசினிஸ்டு (4), மேனுபேக்சரிங்கப்ரோஜஸ் (24), கம்மியர் ( மோட்டார் வண்டி ) (1), டர்னர் (18), ஒயர்மேன் (1), தோல்பொருள் உற்பத்தியாளர் ( மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் (6) ஆகும் . மேற்கண்ட ஐ . டி . ஐ தொழிற்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று கொண்டுள்ளது . இதில் சேர 10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் , விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது அசல் கல்வி சான்றுகளுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அப்துல்லாபுரத்தை அணுக தெரிவிக்கப்படுகிறது . 14 வயது முதல்...

• வேலூர் வேளாண்மை உதவி டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி.

·         வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வழங்கப்படவுள்ள உதவி டிராக்டர் ஓட்டுநர் பயிற்சியில்   கலந்து கொண்டு பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்(வேபொ). அரசு இயந்திர கலப்பை பணிமனை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை இணைந்து நடத்தும் உதவி டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி (Assistant Tractor Operator Training) 27 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேற்படி பயிற்சிக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு இலவசமாக மதிய உணவு மற்றும் உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், டிராக்டர் ஓட்டுநர் பயிற்சிக்கு பின்னர் டிராக்டர் ஓட்டுநர் உரிமம் இலவசமாக பெற்று தரப்படும். ஏற்கனவே LMV ஓட்டுநர் உரிமம் இருக்க கூடாது.  மேற்படி இப்பயிற்சி 10.08.2026 அன்று தொடங்க இருப்பதால் இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ள விவசாயி மற்றும் இளைஞர்கள் வேலூர் மாவட...

• வேலூர் மாவட்டத்தில் கலை போட்டிகள்.

·         வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில், 5   வயது முதல் 16   வயது வரையிலான மாணவ, மாணவியர்களுக்கு   கலை போட்டிகள் 08.08.2026 அன்று நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட் சி தலைவர் . தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டு துறை, தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 2025-2026-ம் ஆண்டிற்கான வேலூர் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் நாட்டுப்புற நடனம் ஆகிய பிரிவுகளில் வருகின்ற 08.08.2026 அன்று கலை 09.30 மணிக்கு,   சி.எஸ்.ஐ ஊரிஸ் அரசினர் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் 01.05.2025 அன்று 5-8 / 9-12 / 13-16 ஆகிய வயதினை நிறைவு செய்தவர்களாக இருத்தல் வேண்டும். போட்டிக்கு வருகை புரியும் நாளன்று பெயர், வயது, முகவரி ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் கொண்டு வரவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். 9-12 / 13-16 வயது பிரிவில் முதல் பரிசு பெறும் மாணாக்கர்கள் ம...