• பெருமுகை கலைஞர் தங்கும் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு.
· பெருமுகை ஊராட்சியில் ரூ.45.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 250 படுக்கை வசதி கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டுமான பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு. வேலூர் மாவட்டம் , பெருமுகை ஊராட்சியில் ரூ.45.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 250 படுக்கை வசதி கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டுமான பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக வரும் வெளி மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்களின் தங்கும் நலம் கருதி தமிழ்நாடு முதலமைச்சர், வேலூர் வட்டம், பெருமுகை கிராமத்தில் 2.15 இலட்சம் சதுர அடி பரப்பளவில் 250 படுக்கை வசதியுடன்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும் என 15.06.2023 அன்று அறிவித்தார்கள். இதனை தொடர்ந்து 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் 2 பகுதிகளாக 68400 சதுர அடி தரைதளம் மற்றும் 3 தளங்களில் 119 அறைகளுடன் 250 படுக்கை ...