Posts

• வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலய பிரதோஷம்.

Image
·          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.   ·          பக்தர்கள் ஹரோ ஹரா முழக்கங்களுடன் நந்தி பகவானை தரிசனம்.   ·          நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் – மஹாதீபாராதனை.          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் , சந்தனம் , தேன், கரும்பு சாறு, இளநீர் , பன்னீர் , திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.       பின்னர் அலங்காரங்களை செய்து மலர் மாலை, எலுமிச்சை மாலை , வில்வ இலைகள், அருகம்புல் மாலைகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் அரோகரா முழக்கங்களுடன்    பக்தர்கள்   நந்தி பகவானை வழிபட்டனர். பின்னர் சுவாமி உட்பிரகார உலா நடைபெற்றது. ...

• வேலூரில் ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாள்.

Image
·         வேலூரில் ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாள்.    ·         5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.                       வேலூர் மாவட்டம் , வேலூர் ஆர் . என் . பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தனர்.     ஈகை திருநாளான இன்று குர்பானி கொடுத்து உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.     இதேபோன்று மாவட்டத்தில் பள்ளிகொண்டா , பேர்ணாம்பட்டு , குடியாத்தம் ஆகிய பகுதிகளிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.     

• இராணிப்பேட்டை மாவட்ட காவல் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்.

Image
 ·          இராணிப்பேட்டை மாவட்ட காவல் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்.       இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் தலைமையில் நடைபெற்றது .     இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 40 மனுக்கள் பெறப்பட்டன . மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார் .  

• தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் செலவினம்.

Image
·       தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவினம் இறுதி கணக்கு தாக்கல் செய்வற்கான பயிற்சி கூட்டம் - வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சி தலைவர் தலைமையில்    நடைபெற்றது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 77-ன்படி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ரூ.40 , 00 , 000/- (ரூபாய் நாற்பது லட்சம் மட்டும்) அதிகபட்ச தேர்தல் செலவினமாக , இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. ( தேர்தல் நடைமுறைச் சட்டம் 1951- இன் பிரிவு 78 ) வேட்பாளர்கள் , தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் , தேர்தல் செலவுகள் பதிவேட்டுடன் ( தேர்தல் நடைமுறைச் சட்டம் 1951- இன் பிரிவு 78) தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும்.   அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவினம் இறுதி கணக்கு தாக்கல் செய்வற்கான பயிற்சி கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ...

• விபத்தில் மூளை சாவடைந்த ஆந்திர இளைஞர் உடல் உறுப்புகள் தானம்.

Image
  ·          விபத்தில் மூளை சாவடைந்த ஆந்திர இளைஞ ர் உடல் உறுப்புகள் தானம் .         ராணிப்பேட்டை, சி . எம் . சி . மருத்துவமனையில் கடந்த 26- ம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூர் பொம்மசமுத்திரம் அருகே இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற லிக்கிபிரபாஸ் என்ற 22 வயது இளைஞர் சாலையின் தடுப்புகளில் இரு சக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனையில் சேர்த்தனர்.             இந்நிலையில் லிக்கிபிரபாஸுக்கு மூளை சாவு ஏற்பட்டதையடுத்து அவரின் உறவினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து சிறுநீரகம் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனைக்கும் , ஒரு சிறுநீரகம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும் , கல்லீரல் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனைக்கும் , கண்கள் வேலூர் சி . எம் . சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.  

• வேலூர் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்.

Image
 ·         வேலூர் தென்மேற்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் - அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது. தமி ழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை – 2026 பருவகாலமானது எதிர்வரும் 26.05.2026 அன்று தொடங்கப்பட உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது . சென்ற 2025- ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் வேலூர் மாவட்டத்தில் 579.8 மி . மீ மழை பெய்துள்ளது . இது இயல்பைவிட 34% கூடுதலாக மழை பொழிந்துள்ளது . கடந்த 2025- ம் ஆண்டில் பெய்த மழையினை கணக்கில் கொண்டு வேலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறியப்பட வேண்டும் . (Vulnerable Areas) . கடந்த...