• காட்பாடி சட்டமன்றத் தொகுதி நல திட்ட உதவிகள்.
· காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் ரூ . 2.40 கோடி மதிப்பில் முடிவுற்ற 6 திட்டப் பணிகளை திறந்து வைத்து , 98 பயனாளிகளுக்கு ரூ . 2.69 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் , வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார்கள். வேலூர் மாவட்டம் , காட்பாடி சட்டமன்ற தொகுதியில் ரூ . 2.40 கோடி மதிப்பில் முடிவுற்ற 6 திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பள்ளிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா , சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை , புதிய மின்னணு குடும்ப அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் என மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூ . 2.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா.சுப்புலெட்சுமி , வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த் வழங்கினர். வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் , வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் , வேலூர் மாநகராட்சி , மண்டலம் 1, காட்பாடி தாராபடவேடு பகுதியில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் நீர்வள துறை அமைச்சர் துர...