• வேலூர் பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்.
· வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக் கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக ள் 15.07.2026 அன்று தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர். தமிழ் வளர்ச்சி துறையால் “ தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட 18.07.1967- ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18- ஆம் நாள் “ தமிழ்நாடு நாள் விழா ” மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி , தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத் துறை அமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திட கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு நாளை நினைவு கூ ரும் வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்...