• வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலய பிரதோஷம்.
· வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம். · பக்தர்கள் ஹரோ ஹரா முழக்கங்களுடன் நந்தி பகவானை தரிசனம். · நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் – மஹாதீபாராதனை. வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் , சந்தனம் , தேன், கரும்பு சாறு, இளநீர் , பன்னீர் , திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரங்களை செய்து மலர் மாலை, எலுமிச்சை மாலை , வில்வ இலைகள், அருகம்புல் மாலைகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் அரோகரா முழக்கங்களுடன் பக்தர்கள் நந்தி பகவானை வழிபட்டனர். பின்னர் சுவாமி உட்பிரகார உலா நடைபெற்றது. ...