Posts

• கிருஷ்ணசாமி பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி.

Image
 ·          வேலூர்  கிருஷ்ணசாமி பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி.       வேலூர், கிருஷ்ணசாமி முதலியார் சீனியர் செகண்டரி பள்ளியில் 9 -ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் த . சிவக்குமார் தலைமை தாங்கினார் .       சிறப்பு விருந்தினராக சென்னை மைண்ட் பிரெஷ் பயிற்சி மையத்தின் நிர்வாகி கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்கள் எவ்வாறு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் , வாழ்க்கையில் உயர்வதற்கான வழிமுறைகள் , பெற்றோர்கள் , பெரியோர்களை மதிக்கும் பண்புகள் குறித்து பேசினார் .       இதில் பள்ளி முதல்வர் ஆர் . ஜி . சுஜாதா , மேலாளர் துர்காதேவி மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர் .  

• காட்பாடி சன்பீம் பள்ளி ஆண்டு விழா.

Image
·         காட்பாடி சன்பீம் பள்ளி ஆண்டு விழா - சி . எம் . சி . மருத்துவமனை இணைஇயக்குனர் பரிசு வழங்கி பாராட்டு.      வேலூர் மாவட்டம், காட்பாடி , சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா ( சன்பீம் டே –2026) சிறப்பாக நடைபெற்றது .        விழாவுக்கு , சன்பீம் பள்ளிகளின் தாளாளர் முனைவர் தங்கபிரகாஷ் , துணைதலைவர் ஜார்ஜ்அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . பிளஸ் 2 மாணவன் மோனிஷ் வரவேற்றார் . மாணவி கேசில்டா ஆண்டு அறிக்கையை தொகுத்து வழங்கினார் . மாணவி எல்லோசியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார் .      தொடர்ந்து விழாவுக்கு, சன்பீம் பள்ளிகளின் தலைவர் அரிகோபாலன் தலைமை வகித்து பேசுகையில் , வகுப்பறைக்கு செல்லும் முன் ஆசிரியர்கள் தங்களை தினம் தினம் புதுப்பித்து கொண்டு மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் வகையில் தயார்படுத்தி கொள்ள வேண்டும் .          அதோடு , தினசரி நிகழ்வுகள் மற்றும் சமகால தகவல்களையும் அறிந்த...

• வேலூர் GPH மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.

Image
·         வேலூர் பெண்ட்லேண்ட் மருத்துவமனையில் அருண்குமார்விஜய்   ஏற்பாட்டில் முதலமைச்சர் ஜோசப்விஜய் பிறந்த நாள் முன்னிட்டு பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - மாவட்ட செயலாளர் வேல்முருகன் அணிவித்தார்.      தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்-யின் பிறந்த நாள் முன்னிட்டு வேலூர் GPH பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது .             நிகழ்ச்சிக்கு வேலூர் அருண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண்குமார் விஜய் தலைமை தாங்கினார் . சிறப்பு அழைப்பாளராக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார் .              நிகழ்ச்சியில் த . வெ . க . நிர்வாகிகள் ஜனனி சதீஷ்குமார் , தீபக் , சாகர் , பிரகாஷ் , மாதனூர் அன்பரசு மற்றும் குரும்பேரி ஜெகநாதன்...

• ஆற்காடு மகாலட்சுமி கல்லூரியில் உலக யோகா தினம்.

Image
 

• அணைக்கட்டு நடைபெற்ற 2-ம் நாள் வருவாய் தீர்வாயம்.

Image
·         அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 2-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ·         வருவாய் ஆவணக் கணக்குகளை ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து   87     கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் / தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பெற்றுக்கொண்டார். அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலி ஆண்டிற்கான 2-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ல் மாவட்ட ஆட்சி தலைவர் தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பி . எஸ் . லீலாஅலக்ஸ் கலந்து கொண்டு வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து 87 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.                 வேலூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் ஜமாபந்தி 17.06.2026 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.   ஜமாபந்தி 24.06.2026 அன்று வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் நடைபெற உள்ளது.         ...

• வேலூரில் பாமக சார்பில் பட்டாசு, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

Image
·         வேலூரில் பாமக சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் .    ·         சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு அரசுக்கு நன்றி          வேலூர் மாவட்டம் , வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் என் . டி . சண்முகம் கலந்து கொண்டு தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என கூறி பட்டாசுகளை வெடித்து   பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.     பாமக பல ஆண்டு காலமாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசு பாமக-வின் கோரிக்கையை ஏற்று ஜாதி வாரி கணக்கெடுப்பை ...