• வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா.
· வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா . · ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு . வேலூர் மாவட்டம் , வேலூரில் மஹா சிவராத்திரியின் மறுநாள் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழாவானது நடைபெற்றது. இறந்தவர்களின் சமாதிகளில் அவர்களுக்கு விருப்பமானவைகளை வைத்து படைத்தனர். பின்னர் விருதம்பட்டு , அம்பேத்கர் நகர், கோட்டை சுற்றுசாலை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வந்து அம்மன் ஆற்றில் இறங்கியது. முன்னதாக பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்த காளி , பார்வதி, சிவன் உள்ளிட்ட வேடங்களை அணிந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து மயான கொள்ளை விழாவில் பங்கேற்றனர். இதில் எலுமிச்சை பழங்கள், சில்லரை காசுகளை அம்மன் மீது வீசி எறிந்தனர். வேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ...