Posts

• வேலூர் ஆதரவற்ற நிலையில் இறந்த 7 சடலம் நல்லடக்கம்.

Image
 ·          வேலூர் ஆதரவற்ற நிலையில் இறந்த 7 சடலத்தை சமூக சேவகர் மணிமாறன் நல்லடக்கம்.              வேலூர் மாவட்டம் , வேலூர் பாலாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலையோரம் இறந்த 7 ஆதரவற்றோர் உடல்கள் யாரும் உரிமை கோராத நிலையில்,       வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 7 உடல்களையும் காவல் துறையின் அனுமதியை பெற்று திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன், வேலூர் பாலாற்றில் உள்ள மயானத்தில் சடங்குகளை செய்து, அவர் சொந்த செலவில் மலர்களை தூவி   முறைப்படி நல்லடக்கம் செய்தார். தொடர்ந்து இறந்தவர்களின் ஆன்மா சந்தியடையும் வழிபாடுகள் செய்யப்பட்டது இதுவரையில் சமூக சேவகர் மணிமாறன் 3500- க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.

• உங்களுடன் ஸ்டாலின்”நலத்திட்ட உதவிகள்.

Image
தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இ லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்க ளை வழங்கியதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் 1,000 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “உங்களுடன் ஸ்டாலின் திட்ட”-த்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இ லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி யதை தொடர்ந்து   வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி ஜே.பி.எம். மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1000 பயனாளிகளுக்கு   நலத்திட்ட உதவிகளை வழங்கினார். " மக்களிடம் செல் , அவர்களோடு வாழ் , அவர்களை நேசி" என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கை பாதையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மாபெரும் நலத்திட்டமாக தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங...

• வேலூர் மாவட்ட தொலைநோக்கு பார்வை.

·         வேலூர் மாவட்டத்தில்   அறிவுச்சார் தொழில் நுட்பம், நேர்த்தியான உட்கட்டமைப்பு, ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும் பசுமையான வேலூர் போன்ற இலக்குகளை   அடுத்த 5 ஆண்டுகளில் அடைய தங்களின் தொலைநோக்கு பார்வையை   provlr.tn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 94980 42453 என்ற வாட்ஸ்ஆப் தொலைபேசி எண்ணிற்கோ 07.02.2026-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கேட்டு கொண்டுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் - ன் தலைமையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% உயர்ந்துள்ளது . இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்க ளைவிட மிக உயர்ந்த வளர்ச்சியாகும். தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மாற்றத்தை உருவாக்கும் நலதிட்டங்கள் இன்று கோடிக்கணக்கான மக்களுக்கு உதவுகின்றன. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்களின் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கு...

• வேலூர் அனைத்து கட்சி பிரமுகர் ஆலோசனை கூட்டம்.

Image
 ·         வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்   தீவிர   திருத்தம் 2026 குறித்த அனைத்து கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் – வாக்காளர் பட்டியல் சிறப்பு   பார்வையாளர் தீபக் ஜாக்கப் தலைமையில்,   வேலூர் மாவட்ட தேர்தல் அலுவல ர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில்   நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல்   தீவிர   திருத்தம் 2026 குறித்து அனைத்து கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம்   வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் தீபக்ஜாக்கப் தலைமையில், வேலூர் மாவட்ட தேர்தல் அலுவல ர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை   வாக்காளர் பட்டியல்   தீவிர திருத்தம் 2026 ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பணிகள் நடைபெற்று வருகிறது.   அடுத்த 10 நாட்களுக்குள் இப்பணிகள் முடிவுற்று, இறுதி வாக்காளர் பட்டியல்   பிப்ரவரி 17 வெளியிடப்படும்.   ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பணிகளை ஆய்வு செய...

• ஜாக்டோ ஜியோ சார்பில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு.

Image
 ·          வரும் 8- ம் தேதி சென்னையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள்   ஜாக்டோ ஜியோ சங்கங்களின் சார்பில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு  ·          பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பது என முடிவு        வேலூர் மாவட்டம் , சத்துவாச்சாரியில் ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைந்த மாவட்ட, மாநில நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ஜோஷி தலைமையில் நடைபெற்றது.       இதில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜனார்த்தனன் , சேகர் , ஜெயகாந்தன் , மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக முதல்வர் அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கி பேசினார்.             பின்னர் செய்தியாளர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறுகையில்,       தமிழக அரசும், முதல்வரும், அரச...