Posts

• வேலூர் மாநகராட்சி சுதந்திர தின விழா.

Image
·          வேலூர் மாநகராட்சியில் 80- வது சுதந்திர தின விழா முன்னிட்டு மேயர் சுஜாதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.              வேலூர் மாவட்டம் , வேலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நாட்டின் 80- வது சுதந்திர தினம் முன்னிட்டு மேயர் சுஜாதா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் திரளான மாமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.  

• வேலூர் நேதாஜி மைதானத்தில் சுதந்திர தின விழா.

Image
·         வேலூர் நேதாஜி மைதானத்தில் சுதந்திர தின விழா - மாவட்ட ஆட்சி தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, 178   பயனாளிகளுக்கு ரூ .1,49,34,150/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .                 வேலூர் மாவட்டம் , நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண் டார்.                 தொடர்ந்து, ச மாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்கள் பறக்கவிட்டு , வேலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு சால்வை அணிவித்து   சிறப்பித்தார்.                 பின்னர் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 178 பயனாளிகளுக்கு ரூ .1,49,34,150/- மதிப...

• வள்ளிமலை சுப்பிரமணியர் ஆலய சமத்துவ விருந்து.

Image
 ·          வள்ளிமலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வள்ளிமலை சுப்பிரமணியர் ஆலய சமத்துவ விருந்து .              வேலூர் மாவட்டம் , வள்ளிமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்   80- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமத்துவம், சகோதரத்துவத்தினை அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென சமத்துவ விருந்து நடைபெற்றது .              மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் , வள்ளிமலை ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி , சுப்பிரமணியர் ஆலய செயல்அலுவலர் திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் அனைத்து மக்களும் சாதி மத பாகுபாடின்றி சமமாக அமர்ந்து சமத்துவமாக உணவை உண்டனர்.  

• வள்ளிமலை ஊராட்சி சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம்.

Image
 ·         சுதந்திர தினத்தை முன்னிட்டு வள்ளிமலை ஊராட்சியில் சிறப்பு கிராம ச பை   கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.                 சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் , காட்பாடி ஊராட்சி ஒன்றியம் , வள்ளிமலை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம ச பை கூட்ட த்தில்   மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது . அதன் அடிப்படையில் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் , வள்ளிமலை   ஊராட்சியில் ,   ஊராட்சி மன்ற தலைவர் கோ.வாசுகி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அனைத்து ஊராட்சிகளிலும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த கிராம ச பை கூட்டம் ந...

• அல்லேரி கிராம வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் ஆய்வு.

Image
·         அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், அல்லேரி கிராமத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு. வேலூர் மாவட்ட ம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், அல்லேரி கிராமத்தில்   பள்ளி, ஆஷா பணியாளர் இருப்பிடம் , இரு சக்கர அவசர ஊர்தி, நியாய விலை கடை, பள்ளி வகுப்பறை கட்டடம் ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், அல்லேரி கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆரம்ப பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்து, இனிப்புகளை வழங்கினார்.   தொடர்ந்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், அல்லேரி கிராமத்தில் ஆஷா ( ASHA) பணியாளர் இருப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ள அவசர கால மருந்துகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   மேலும், அல்லேரி கிராமத்தில் இருசக்கர அவசர ஊர்தி (108) ஓட்டுநரிடம் அவசர கால சிகிச...

• வேலூர் விஐடி பல்கலைகழக சுதந்திர தின விழா.

Image
·          வேலூர் விஐடி பல்கலைகழக சுதந்திர தின விழா.       வேலூர் மாவட்டம், வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் நடைபெற்ற 80- வது   சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.       இந்நிகழ்ச்சியில் இந்து குழுமத்தின் இயக்குநர் ரோகித்ரமேஷ் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார் . உடன் துணைதலைவர்கள் சங்கர் விசுவநாதன் , சேகர் விசுவநாதன் , செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி , இணைதுணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக் , பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் .  

• ஆடி வெள்ளி, ஆடிப்பூரம்.

Image
·          ஆடி வெள்ளி, ஆடிப்பூரம் - கோவில்களில் அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம்.   ·          ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் .   ·        கருமாரியம்மன் ஆலயத்தில் சையன துர்கை அலங்காரம் , செல்லியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரங்களை செய்து தீபாராதனைகள் சாமி வீதி உலா - திரளான பக்தர்கள் வழிபாடு.       வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை, ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவடைந்ததை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க அகிலாண்டீஸ்வரி அம்மன் சன்னதியிலிருந்து கொடி இறக்கப்பட்டது ( துவஜ அவரோஹனம் ). கொடி இறங்கிய பின்னர் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவித்து மீனாட்சி அலங்காரங்களை செய்து ஆடிப்பூரம் என்பதால் பல்லாயிரக்கணக்கான வளையல்களை கொண்டு அலங்காரங்களை செய்து   மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிக...