Posts

• DCPU உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவி.

·         குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இளைஞர் நீதி குழுமத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு வேலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சி தலைவர். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் இளைஞர் நீதி குழுமத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு வேலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 1.               உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் Assistant cum Data Entry Operator. -       12th pass from a recognized Board/ Equivalent Board with Diploma / Certificate in Computers. -       Typewriting Sk...

• மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி.

Image
 ·          மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி – வருவாய் கோட்டாட்சியர் துவங்கி வைத்தார்.             வேலூர் மாவட்டம் , வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகில் வருவாய் துறை சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.     அண்ணா கலையரங்கிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார்.       இதில் வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 கேள்விகளுக்கும் உரிய பதில் அளித்து மக்கள் தொகை கணக்கெடுப்பில் பயன்பெற வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் வேலூர் வட்டாட்சியர் பழனி மற்றும் திரளான கல்லூரி மாணவ , மாணவிகள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.  

• விலை குறைபாட்டு இழப்பீட்டு சந்தை இடையீட்டு திட்டம்.

·         விலை குறைபாட்டு இழப்பீட்டு சந்தை இடையீட்டு திட்டம்.             2026 தோத்தாபுரி மாம்பழ விவசாயிகளுக்கு ஒரு வரபிரசாதமாக புதிய திட்டமாக விலை குறைபாட்டு இழப்பீட்டு திட்டம் 2026-ஆம் ஆண்டு தோத்தாபுரி மாம்பழப் பருவத்திற்காக. தமிழ்நாடு அரசு விலை குறைபாட்டு இழப்பீட்டு சந்தை இடையீட்டு திட்டத்தை (Price Deficiency Payment - Market Intervention Scheme)   அறிமுகம் செய்துள்ளது. சந்தை விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வருவாயை பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.       இத்திட்டத்தின்கீழ், விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பயன்பெற தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சந்தை இடையீட்டு திட்டத்தின் கீழ் விலை (MIP) குவிண்டாலுக்கு ரூ.1,545.41/-நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் முன்மொழியபட்ட பற்றாகுறை செலுத்துதல் (ரூ. மெட்ரிக் டன்னுக்கு) சந்தை இடையீட்டு விலையின் 25 சதவீதம் ரூ.3863.525 ஒரு ஹெக்டேருக்கு 7 மெட்ரிக் டன் என்ற அடிப...

• வேலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்பாட்டம்.

Image
 ·          வேலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்தும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சு-க்கு ஆதரவாக ஆர்பாட்டம்.        வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஜோஷி தலைமையில் கண்டன ஆர்பாட்டமானது நடைபெற்றது.       நீட் முறைகேடு மற்றும் கல்வி துறையின் சீரழிவை பொறுப்பேற்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தடியடி நடத்தியதை கண்டித்தும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சு - க்கு ஆதரவாகவும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.     இதில் வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் தீனாசேகர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.  

• மூலைகேட் அரசு ஆரம்ப பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா.

Image
·          மூலைகேட் அரசு ஆரம்ப பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா .     வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அரசு ஆரம்ப பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது .          இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப்அன்னையா தலைமை தாங்கினார் . வல்லண்டராமம் ஊராட்சி மன்ற தலைவர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . ஆசிரியை ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார் .            கல்வி வளர்ச்சி நாளையொட்டி தமிழ் ஆங்கில பேச்சு திறன் போட்டி , திருக்குறள் ஒப்புவித்தல் திறன் போட்டி , பாடும் திறன் போட்டி , வண்ணம் தீட்டும் திறன் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன .        மேலும் காமராஜரை பற்றி பள்ளி மாணவர்கள் கோஷின் , மித்ரன், தாட்சாயினி, மகிழ்வதனி, செல்வி ஆகியோர் ஆங்கிலம் மற்றும் தமிழில் சிறப்பாக உரையாற்றினர் . முடிவில் ஆசிரியை ...

• வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

·         வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் , படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.07.2026 அன்று   நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.07.2026 2 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 3.30 3 மணிக்கு மாவட்ட ஆட்சி யர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது. அவ்வமையம் வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தை சார்ந்தோர்கள் தங்கள் குறைகளை மனுக்களாக படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர்-டம் சமர்ப்பித்து பயனடையுமாறு   கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

• வேலூர் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

Image
·         வேலூர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தொரப்பாடி ஏரி,   வேளாண்மை துறையின் சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், மணிலா விதை பண்ணை திட்டம் போன்ற திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.                  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் தொரப்பாடி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தொரப்பாடி ஏரியின் வலது கழிங்கின் வழிந்தோடி உபரி நீர் செல்லும் பகுதிகளில் உள்ள வீடுகள், சாலைகளில் வெள்ளம் செல்வதை தவிர்க்கும் பொருட்டு கால்வாயில் தண்ணீர் செல்லும் பாதையில் தேவையான இடங்களில் வெள்ளப் பாதுகாப்பு சுவரை கட்டுவதன் மூலமும், குடியிருப்பு பகுதியின் இடையே செல்லும் கால்வாயினை மூடி செல்லும் வகையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் தேவையான மதிப்பீடு தயார் செய்ய தள ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கணியம்பாடி ஊராட்சி ஒன்ற...