Posts

• ஆகஸ்டு மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

ஆகஸ்டு மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் . ஆகஸ்டு 2026- ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ,     21 .08.2026 வெள்ளிக் கிழமை அன்று காலை 10.30 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் , மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட    அரங்கில் ( 5- வது தளம் )   நடைபெற   உள்ளது . இக்கூட்டத்தில் வேளாண்மை துறை , தோட்டக்கலை துறை ,   வேளாண்     பொறியியல் துறை , வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை , பட்டு வளர்ச்சி துறை , மீன்வள துறை , கால்நடை பராமரிப்பு துறை ,   கூட்டுறவு   சர்க்கரை ஆலைகள் ,   கூட்டுறவு   துறை ,   நீர்வள ஆதார அமைப்பு , வனத்துறை ,   மாசுக்   கட்டுப்பாடு   வாரியம் ,    மின்சாரத்   துறை , போக்குவரத்துத்    துறை , பால்வள துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள் . மேலும் கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெற...

• சிஎம்சி முன்னாள் இயக்குநர் - இந்தியக் குடியரசு தலைவர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு.

Image
 ·          வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் ( சிஎம்சி) முன்னாள் இயக்குநர் - இந்தியக் குடியரசுத் தலைவர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு.     வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் முன்னாள் இயக்குநரும் , மருத்துவ இரத்தவியல் முதுநிலை பேராசிரியருமான டாக்டர் விக்ரம்மேத்யூஸ் , இந்தியாவின் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு , ஆகஸ்ட் 15, 2026 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் நடத்தப்பட்ட மதிப்புமிக்க ' அட் ஹோம் ' வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதை வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறது .  

• சொத்தை அபகரிக்க கொல்ல முயற்சிப்பதாக முதியவர் ஆட்சியரிடம் மனு.

Image
·          சொத்தை அபகரிப்பதற்காக மகன்கள் மனைவியுடன் சேர்ந்து தாக்கி கொல்ல முயற்சிப்பதாக முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பாதுகாப்பு வழங்கிட கோரிக்கை.       வேலூர் மாவட்டம் , காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்தவர் முதியவர் முருகேன். இன்று மாவட்ட ஆட்சியரிடம் தன் இரண்டு மகன்கள் மற்றும் தன் மனைவி தன்னை கொலை செய்துவிட்டு சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்சிடம் நேரில் மனு அளித்தார்.       அம்மனுவில் தனது இரண்டு மகன்கள் கோட்டீஸ்வரன் , பார்த்திபன் , மனைவி மகாலஷ்மி ஆகிய மூவரும் சேர்ந்து என்னிடம் உள்ள சொத்து பத்திரத்தை அபகரிக்க அடித்து உதைக்கின்றனர். இவ்வாறு பலமுறை செய்தும் கடந்த 14- ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மூவரும் என்னை சரமாரியாக தாக்கி ரூ . 50 ஆயிரம் பணத்தை பிடுங்கி கொண்டனர்.       மேலும் வீட்டு பத்திரத்தை கொடு, இல்லையென்றால் கொலை செய்து புதைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் மன...

• வேலூரில் அகில இந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள்.

Image
·          வேலூரில் அகில இந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் .   ·          சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாணவ , மாணவிகள் பங்கேற்பு.       வேலூர் மாவட்டம் , வேலூர், டோல்கேட் பகுதியில் ஜப்பான் ஷுட்டோ ராய்   கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.       இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர் , சிறுமியர்கள் என தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டனர்.             இந்த போட்டிகளை இந்திய தலைமை கராத்தே மாஸ்டர் ரமேஷ் தலைமை தாங்கி நடத்தினார். இதில் ஆசிய நடுவர் மகேஷ் தென்னிந்திய தலைமை மாஸ்டர் லட்சு , உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் .            ...