• சிங்கப்பெண் படை முயற்சியால் பள்ளியில் சேர்ந்த குழந்தை.
· இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சிங்கப்பெண் அதிரடி படையினரின் முயற்சியால் பள்ளியில் சேர்ந்த குழந்தை . இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி , ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோப்புக்கானா பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உதவி ஆய்வாளர் ரேணுகா தலைமையிலான காவல் துறையினர் , கடந்த 14.08.2026- ம் தேதி நகராட்சி தொடக்க பள்ளியில் விழிப்புணர்வு மேற்கொண்டபோது தலைமை ஆசிரியர் கூறியதன் அடிப்படையில் பள்ளி இடைநிற்றலில் இருந்த ஒரு குழந்தையை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்தனர் . சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரின் தொடர் முயற்சியால் இதுவரை மொத்தம் 35 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீட்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் .