வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நீரேற்று நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பொன்னை தலைமை நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு , வேலூர் மாநகராட்சியின் குடிநீர் வழங்கல் தொடர்பான பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது , SDRF நிதியின் கீழ் ரூ. 403.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள முக்கிய குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்து , பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். குடிநீர் வழங்கலின் அளவை அதிகரிக்கும் வகையில் , பொன்னை தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள 100 HP திறன் கொண்ட இரண்டு டர்பைன் பம்புகளை ...