• வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு மாத்திரை வழங்கும் திட்டம்.
வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு மாத்திரை வழங்கும் திட்டத்தின்கீழ் (2026) 10.08.2026 மற்றும் 17.08.2026 அன்றும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது - என மாவட்ட ஆட்சி தலைவர். தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின்கீழ் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) 10.08.2026 அன்றும், விடுப்பட்டவர்களுக்கு 17.08.2026 அன்றும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. மேற்படி முகாமானது அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலமாக சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் நோடல் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது. 1 முதல் 2-வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மா...