• பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி நூற்றாண்டு விழா.
· பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ம், பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் மரக்கன்றை நடவு செய்து, நூற்றாண்டு விழா ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், பெருமுகை கிராமத்தில் கூலி தொழிலாளர் குழந்தைகளின் கல்வி நலன் கருதி 26.07.1926 அன்று லேபர் பள்ளியாக அப்போதைய சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டது. இப்பள்ளி வேலூர் நகரப்பகுதிக்கு அருகில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இப்பள்ளி அமைந்துள்ளது. பெருமுகை பள்ளியானது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்டு, பின்னர் நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளியாகவும் இயங்கி வந்து தற்போது அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறத...