• வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை.
· வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ , பயன்படுத்தவோ கூடாது எனவும் , மீறினால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். தமி ழ்நாடு அரசானது கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் , ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் , பிளாஸ்டிக் பூசப்பட்ட பேப்பர் தட்டுகள்/பேப்பர் கப்புகள் , பிளாஸ்டிக் டம்ளர்கள் , பிளாஸ்டிக் பேப்பர்கள் , பிளாஸ்டிக் கொடிகள் , தெர்மாகோல் கொண்டு செய்யப்பட்ட கப்புகள்/ தட்டுகள் உட்பட 14 வகையான பொருட்களை பயன்படுத்தவும் , சேமித்து வைக்கவும் , விற்பனை செய்யவும் அரசாணை வாயிலாக தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது. மேலும் விதி மீறல்களில் ஈடுபடுபவருக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபோல உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 ன் பிரிவு 55, 58 ன் வாயிலாக தடை செய்யப்...