வேலூரில் டாக்டர் இக்ராம் சமூக அறக்கட்டளை சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாள் முப்பெரும் விழா
வேலூரில் டாக்டர் இக்ராம் சமூக அறக்கட்டளை சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாள் முப்பெரும் விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கல் வேலூர்: வேலூர் மக்கள் மன்றம், டாக்டர் அ.மு. இக்ராம் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஹஸரத் மக்கான் ஆகியோர் இணைந்து நடத்திய முப்பெரும் விழா, ஹஸரத் மக்கான் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில், நபிகள் நாயகத்தின் அறிவுரைகள் மற்றும் போதனைகள் குறித்து டாக்டர் அ.மு. இக்ராம் விளக்கிப் பேசினார். விழாவில் துணைச் செயலாளர் ஜோஷ்வா வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, வேலூர் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தனுஷ் குமார், ஐ.பி.எஸ்., சமூக நீதி விடுதிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதையடுத்து, மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாளர் ஆர். சீனிவாசன் உறுதிமொழியை வாசிக்க, விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். ஜாபர் அக்பர் கான், அமீர் ஜான் மற்றும் ஹஸரத் மக்கான் பொறுப்பாளர் சையத் குவாட்ரி , டாக்டர் ஹமீதுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவின் நிறைவில் துணைச் செய...