Posts

• வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு

Image
வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 - விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்   நடைபெற்றது. வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 – விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ். லீலாஅலெக்ஸ் தலைமையில் இன்று ( 28.08.2026) ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் உள்ள மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் ( Bulk Waste Generators) மற்றும் கழிவு உருவாக்குபவர்களுக்கான விழிப்புணர்வு   கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் , சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் , 1986- ன் பிரிவு 5- ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் 01.04.2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ள திடக்கழிவு மேலாண்மை விதிகள்– 2026 குறித்து மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் மற்றும் கழிவு உருவாக்குபவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கழிவுகளை உருவாகும் இடத்திலேயே 4 வகைகளாகத் தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி , (1) உணவு...

• வேலூர் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்.

Image
·         வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்க ள் மற்றும் விழா ஏற்பாட்டளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது . வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ள ப் பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்க ள் மற்றும் விழா ஏற்பாட்டளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாவட்ட   ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது. விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும் இடங்கள், சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு சிலைகள் இயற்கையான பொருட்களால் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு மேற்கொண்டு வேதி பொருட்களாலோ அல்லது சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் செயற்கை பொருட்களாலோ தயாரிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையினர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிலைகள் கரைக்கும்போது அவை சுற்று ச் சூழலுக்கு ப...

• TNPSC, TNSURB, TRB, SSC, RRB, IBPS பயிற்சி.

வேலூர் மாவட்டத்தை சார்ந்த படித்த இளைஞர்கள் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்   தொகுதி –II & IIA தேர்வுக் கு வேலைவாய்ப்பு மற்றும்   பயிற்சி துறையால் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் அதிக அளவில் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற்று பயனடையுமாறு   மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு மற்றும்   பயிற்சி துறையால் வேலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNSURB, TRB, SSC, RRB மற்றும் IBPS போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன .                 தற்போது ,   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி – II & IIA தேர்விற்கான அறிவிப்பு 11.08.2026 அன்று வெளியிட ப்பட்டுள்ளது. எனவே , தொகுதி -II & IIA கட்டணமில்லா பயிற...