Posts

• சுதந்திர தினம் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடி வைக்க வேண்டும்.

·          சுதந்திர தினம் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடி வைக்க வேண்டும்.                  தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்)கட்டுப்பாட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் , மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ளமதுக்கூடங்கள் அனைத்தும் 15.08.2026 ( சனிக் கிழமை) சுதந்திர தினம் அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே , மேற்கண்ட தினத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் , கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபானக்கூடங்கள் ( FL1/ FL2/ FL3/ FL3A / FL3AA and FL11) அனைத்தும் மூடப்படும் எனவும் , அன்றைய தினங்களில் மதுபானங்களில் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தினங்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் ,...

• பேர்ணாம்பட்டு உங்களை தேடி, உங்கள் ஊரில் ” திட்டம்.

        வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு வட்டத்தில் 19.08.2026 புதன்கிழமை மற்றும் 20.08.2026 வியாழகிழமை அன்று ” உங்களை தேடி , உங்கள் ஊரில் ” திட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்                  மக்களை நாடி , மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ” உங்களை தேடி , உங்கள் ஊரில் ” என்ற திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது .                  ” உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் ” (UTUO) படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் , சேவைகளும் , தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சரல் அறிவுறுத...

• தமிழ்நாடு பாட நூல்கள் தமிழகத்திலேயே அச்சிட முன்னுரிமை.

Image
·          தமிழ்நாடு பாடநூல் கழகம் பாட நூல்கள் அச்சிடுவதில் தமிழகத்திலேயே அச்சிட முன்னுரிமை அளிக்கப்படும்.   ·          தேவையான பாடநூல்கள் அனைத்தும் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு பாடல்நூல் கழக தலைவர் லயோலா மணி காட்பாடியில் பேட்டி.             வேலூர் மாவட்டம் , காட்பாடியில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.        அவருடன் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் , நிறுவன அதிகாரி வெண்ணிலா உடன் இருந்தார். ஆய்வின்போது அங்குள்ள குறைகளை விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் எடுத்து கூறினார். விளக்குகள் சரியாக எரியவில்லை. சென்னையில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு சிறு சிறு குறைபாடுகள் இருந்ததை சரி செய்யவும் கூறினார்.        பின...