Posts

• கவிஞர் இலக்குமிபதி மண்ணுக்குள் வானம் நூல் வெளியீடு.

Image
  ·          கவிஞர் இலக்குமிபதி எழுதிய மண்ணுக்குள் வானம் நூல் வெளியீட்டு விழா .       வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டம் சார்பில் வள்ளலார் நேரு நகர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கவிஞர் ச . இலக்குமிபதி, ராகவேந்திர ஸ்வாமிகள் எழுதிய “ மண்ணுக்குள் வானம்” என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .       இந்த விழாவில் மேத்தா , மணிவண்ணன் , ரங்காபுரம் சம்பத் , சண்முகம் , அண்ணாமலை , சாமிராமன் , ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் நிர்வாகிகள் ரவி, பன்னீர்செல்வம், வேலூர் வாசகர் வட்ட நிர்வாகிகள் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் ராஜன்பாபு வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அப்பாஜி சாமிகள் நூலை வெளியிட திருவள்ளுவர் பல்கலைகழக துணைப்பதிவாளர் ரமேஷ் பெற்று கொண்டார் .       இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் கவிஞர் பொன்செல்வகுமார் , கவிஞர் மோகன் , கவுன்சிலர் கணேஷ், சங்கர், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர் . முடிவில் மைக்கோ பரமேஸ...

• காமக்கூர் புராணம் நூல் - கவிஞர் லக்குமிபதி வெளியீடு.

Image
 ·          காமக்கூர் புராணம் நூல் - கவிஞர் லக்குமிபதி வெளியீடு.       ஆரணி அடுத்த காமக்கூர் அமிர்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகர சுவாமி கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜை நடைபெற்றது. இந்த யாக சாலை பூஜையில் வேலூர் , காமக்கூர் தமிழ் ஆசிரியர் கா . ஞானசக்திவேலன் தொகுத்த காமக்கூர் என வழங்கும் காம நகர் புராணம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.         விழாவிற்கு ஆர் . கார்த்திகேயன் தலைமை தாங்கினார் . கவிஞர் எஸ் . கே . எம் . மோகன் முன்னிலை வகித்தார் .     சிறப்பு விருந்தினராக வேலூர் வாசகர் வட்ட செயலாளர் கவிஞர் ச . லக்குமிபதி கலந்து கொண்டு காமக்கூர் புராண நூலை வெளியிட்டு சிறப்புரை   ஆற்றினார் . அவருக்கு ஆசிரியர் ஞானசக்திவேலன் ' வேலூர் விரிவுரை வித்தகர் ' விருதை வழங்கி ஏற்புரை நிகழ்த்தினார் .       நூல்களை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சி . வேலாயுதன் , காமக்கூர் ஆர் . சரவணன் , வேலூர் வே . த . சிவமூர்த்தி ஆக...

• குடியாத்தம், அணைக்கட்டு பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு.

Image
·         குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம்,   இலவச அவசர சிகிக்சை ஊர்தி (108), அரசு யுனானி மருத்துவ பிரிவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.                    வேலூர் மாவட்ட ம் , குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம்,   இலவச அவசர சிகிக்சை ஊர்தி (108), அரசு யுனானி மருத்துவ பிரிவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.                  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், தனகொண்டபல்லி ஊராட்சி, கொட்டமிட்டா துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   இந்த ஆய்வின்போது அருகிலிருக்கும் கிராமங்களுக்கு சென்று சி...

• வேலூரில் ஆதரவற்றோர் உடல்களை சமூக சேவகர் மணிமாறன் நல்லடக்கம்.

Image
·          வேலூரில் ஆதரவற்றோர் இரண்டு பேரின் உடல்களை சமூக சேவகர் மணிமாறன் தனது சொந்த செலவில் நல்லடக்கம்.           வேலூர் மாவட்டம் , வேலூர் பாலாற்றில் உள்ள   மயானத்தில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்த இரண்டு ஆதரவற்ற ஆண்களின் உடல்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அதனை காவல் துறையின் அனுமதியுடன் தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்து முறைப்படி எல்லா வழிபாடுகள் சடங்குகளையும் செய்து நல்லடக்கம் செய்தார்.       சமூக சேவகர் மணிமாறன் இதுவரையில் மொத்தம் 3,525 ஆதரவற்றோர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். இதனை பாராட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜோசப்விஜய் சமூக சேவகர் மணிமாறனுக்கு விருதினை வழங்கி பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

• வேலூரில் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள்.

Image
 ·          வேலூரில் ஈஷா யோகா சார்பில் கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள் – இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.           வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டரங்கில் 18- வது கிராமோத்சவ விளையாட்டு போட்டிகள் விழா ஈஷா யோகா அமைப்பின் சார்பில் நடைபெற்றது. இதனை நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி துவங்கி வைத்தார். இதில் கைப்பந்து மற்றும் எறிபந்து போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு அணிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்கள்.    இதில் கைப்பந்து போட்டிகளில் சோழன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடமும் , இரண்டாம் இடம் பொம்மையார்பாளையம் அணியும், மூன்றாம் இடம் ஏ . என் . பிரண்ட்ஸ் அணியும் பிடித்தனர்.     இதில் வெற்றி பெறும் அணிகள் செப்டம்பர் மாதம் கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளனர். கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ஈஷா யோகா சார்பில் ஐந்த...

• காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா.

Image
·         காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா - நீதிபதி யுவராஜ் பரிசு வழங்கி பாராட்டு.     வேலூர் மாவட்டம் , காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது .     இதில் சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கி பேசுகையில் ,     மாணவர்களின் தன்னம்பிக்கை , நேரம் தவறாமை , ஒழுக்கம் , விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான பயிற்சி ஆகியவை விளையாட்டிலும் வாழ்க்கையிலும் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றார் .      பள்ளி தாளாளர் தங்கபிரகாஷ் , துணைதலைவர் டாக்டர் ஜார்ஜ்அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மாணவி இனியா வரவேற்றார் .       சிறப்பு விருந்தினராக அரக்கோணம் சிறப்பு சார்பு நீதிபதி   யுவராஜ் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற எமரால்டு அணி , சீருடை அணிவகுப்பில் முதலிடம் பெற்ற சபையர் அணி , கூடார அலங்காரத்தில் முதலிடம் பெற்ற மார்பிள் அணி ஆகியவற்றிற்...