Posts

• சிங்கப்பெண் படை முயற்சியால் பள்ளியில் சேர்ந்த குழந்தை.

Image
·          இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சிங்கப்பெண் அதிரடி படையினரின் முயற்சியால் பள்ளியில் சேர்ந்த குழந்தை .     இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி , ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோப்புக்கானா பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உதவி ஆய்வாளர் ரேணுகா தலைமையிலான காவல் துறையினர் , கடந்த 14.08.2026- ம் தேதி நகராட்சி தொடக்க பள்ளியில் விழிப்புணர்வு மேற்கொண்டபோது தலைமை ஆசிரியர் கூறியதன் அடிப்படையில் பள்ளி இடைநிற்றலில் இருந்த ஒரு குழந்தையை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்தனர் .       சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரின் தொடர் முயற்சியால் இதுவரை மொத்தம் 35 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீட்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் .  

• இராணிப்பேட்டை காவல் வாகனங்கள் பொது ஏலம்.

Image
·          இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் மற்றும் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13 வாகனங்கள் பொது ஏலம்.      இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் தலைமையில் நடைபெற்ற பொது ஏலத்தில் , காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 4 காவல் வாகனங்கள் மேலும் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன .         இந்த பொது ஏலத்தின் மூலம் ரூ . 4,53,556/- அரசுக்கு வருவாயாக பெறப்பட்டது .  

• வேலூர் மாநகராட்சி அடிப்படை வசதிகள் ஆட்சியர் ஆய்வு.

Image
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து     மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.                    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நீரேற்று நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.                  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பொன்னை தலைமை நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு , வேலூர் மாநகராட்சியின் குடிநீர் வழங்கல் தொடர்பான பணிகளை ஆய்வு செய்தார்.     இந்த ஆய்வின்போது , SDRF நிதியின் கீழ் ரூ. 403.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள முக்கிய குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்து , பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். குடிநீர் வழங்கலின் அளவை அதிகரிக்கும் வகையில் , பொன்னை தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள 100 HP திறன் கொண்ட இரண்டு டர்பைன் பம்புகளை ...

• வேலூர் இரு பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பதிவு.

·         வேலூர் மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இரு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் முதிர்வு தொகை பெற உரிய ஆவணங்களுடன்   பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                       வேலூர் மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இரு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு முதிர்வு தொகை பெற அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள விரிவாக்க அலுவலர்கள் / மகளிர் ஊர்நல அலுவலர்களிடம் 28.08.2026 வரை அனைத்து வேலை நாட்களில் பயனாளிகள் தங்களது வைப்புத் தொகை பத்திரம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, குழந்தையின் தனி வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

• போதை பொருள் இல்லா தமிழ்நாடு வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்.

Image
·         போதை பொருள் இல்லா தமிழ்நாடு கு றித்த வாகன விழிப்புணர்வு பிர ச் சார ம் மற்றும் எச்.ஐ.வி/   எ ய் ட்ஸ்   குறித்த தீவிர விழிப்புணர்வு   பிரச்சாரம் 2026 செயல் நடவடிக்கைக்களை   வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி   வைத் தார்.                    வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு கு றித்த வாகன விழிப்புணர்வு பிர ச் சாரத்தை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத் தார். முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் எடுத்து கொண்டனர் வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு (Drug free Tamil Nadu)   என்ற மைய கருத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுத்தல் குறித்து 247 கிராம ஊராட்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொட...

• கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கவிஞர் எஸ்.கே.எம்.மோகன் வாழ்த்து.

Image
  ·          ஞானபீட விருது பெற்ற வைடூரியம் வாழ்க - கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கவிஞர் எஸ் . கே . எம் . மோகன் வாழ்த்து         வேலூர் , ஞானபீட விருது பெற்ற கவிஞரும் , திரைப்பட பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தமிழியக்கம் சார்பில் வி . ஐ . டி . பல்கலைகழகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது .         அதில் கவிஞரும் , வேலூர் மாவட்ட மூத்த பத்திரிகையாளருமான எஸ் . கே . எம் . மோகன் கலந்து கொண்டு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வாழ்த்து மடல் வழங்கினார் . அதில் கூறியிருப்பதாவது ;   அங்கம்மாளின் வைரத்திற்கு ஞானபீட விருது ! அளவில்லா வைரங்களையும் , முத்துக்களையும் தன் பெயரில் வைத்திருக்கும் தமிழ்ச்செம்மலுக்கு விருது ! ஞானத்தின் விழுதுக்கு இலக்கியத்தின் ஒப்பற்ற விருது ! கால் நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழன் கையில் ! ஞானபீட விருதால் மகா கவிஞனுக்கு ஆனந்தம் ! கூடுதல் ஆனந்தமாக விண்ணில் இருந்து வாழ்த்தும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் க...