• காட்பாடி வஞ்சி அம்மனுக்கு ரூ.30 லட்சம் அலங்காரம்.
· காட்பாடி வஞ்சி அம்மனுக்கு ரூ .30 லட்சம் நோட்டுகளில் அலங்காரம் . வேலூர் மாவட்டம் , காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள வஞ்சியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் 3- ஆம் வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சொர்ண லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது . இதில் 10 ரூபாய் , 20 ரூபாய் , 50 ரூபாய் , 100 ரூபாய் , 200 ரூபாய் , 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு ரூ .30 லட்சம் மதிப்பில் வஞ்சி அம்மனுக்கு சுவர்ணலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது . இதனை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.