Posts

• வேலூரில் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள்.

Image
 ·          வேலூரில் ஈஷா யோகா சார்பில் கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள் – இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.           வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டரங்கில் 18- வது கிராமோத்சவ விளையாட்டு போட்டிகள் விழா ஈஷா யோகா அமைப்பின் சார்பில் நடைபெற்றது. இதனை நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி துவங்கி வைத்தார். இதில் கைப்பந்து மற்றும் எறிபந்து போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு அணிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்கள்.    இதில் கைப்பந்து போட்டிகளில் சோழன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடமும் , இரண்டாம் இடம் பொம்மையார்பாளையம் அணியும், மூன்றாம் இடம் ஏ . என் . பிரண்ட்ஸ் அணியும் பிடித்தனர்.     இதில் வெற்றி பெறும் அணிகள் செப்டம்பர் மாதம் கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளனர். கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ஈஷா யோகா சார்பில் ஐந்த...

• காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா.

Image
·         காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா - நீதிபதி யுவராஜ் பரிசு வழங்கி பாராட்டு.     வேலூர் மாவட்டம் , காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது .     இதில் சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கி பேசுகையில் ,     மாணவர்களின் தன்னம்பிக்கை , நேரம் தவறாமை , ஒழுக்கம் , விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான பயிற்சி ஆகியவை விளையாட்டிலும் வாழ்க்கையிலும் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றார் .      பள்ளி தாளாளர் தங்கபிரகாஷ் , துணைதலைவர் டாக்டர் ஜார்ஜ்அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மாணவி இனியா வரவேற்றார் .       சிறப்பு விருந்தினராக அரக்கோணம் சிறப்பு சார்பு நீதிபதி   யுவராஜ் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற எமரால்டு அணி , சீருடை அணிவகுப்பில் முதலிடம் பெற்ற சபையர் அணி , கூடார அலங்காரத்தில் முதலிடம் பெற்ற மார்பிள் அணி ஆகியவற்றிற்...

• கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி.

Image
·          கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி - போக்குவரத்து பாதிப்பு.             வேலூர் மாவட்டம் , வேலூர், புதிய பேருந்து நிலையம் அருகே சென்னை - பெங்களூர் மேம்பாலத்தில் சென்னையிலிருந்து ஆம்பூருக்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கார் அதிக வேகமாக சென்றது. அது சாலையை கடக்க முயன்றவர் மீது மோதியதில் முதியவர் இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.     இந்த விபத்தினால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் மெக்கானிக் என தெரிய வருகிறது. காரில் வந்தவர்கள் தப்பி சென்றனர்.       இந்த விபத்து காரணமாக வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ...

• சிறை கைதிகளுக்கு நல்ல உணவை அளிக்க வேண்டும்.

Image
·          சிறைகளில் நீதிபதிகள் ஆய்வின்போது உணவு சரியில்லை என சிறை கைதிகள் புகார் .   ·          சிறை கைதிகளுக்கு நல்ல உணவை அளிக்க வேண்டும் .   ·          சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி தெலுங்கானா சிறை துறை ஐ . ஜி . முரளிபாபு பேச்சு.           வேலூர் மாவட்டம் , தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் 35 - வது பட்டமளிப்பு விழா சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது.       இதில் தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சிறை துறை அதிகாரிகள் பயிற்சிகளை முடித்து பட்டங்களை பெற்றனர். அவர்களுக்கு தெலுங்கானா சிறை துறை ஐ . ஜி முரளிபாபு பட்டங்கள் , பதக்கங்களை வழங்கினார். இவ்விழாவில் திரளான சிறை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.   ...