• வேலூர் ரூ.37,50,000/- மதிப்பில் உழைப்பாளர் நலக்கூடம்
· வேலூர் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ரூ.37,50,000/- மதிப்பில் உழைப்பாளர் நலக்கூ ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர். வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.37,50,000/- மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூ டத்தை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் திறந்து வைத்தனர். பின்னர் 40 நபர்களுக்கு தலா ரூ.20,000/- வீதம் என மொத்தம் ரூ.8,00,000/- மதிப்பில் திருமண நிதியுதவி தொகையினை வழங்கினார்கள். 2025-2026- ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் ” கட்டுமானத் தொழிலாளர்கள் அவர்களது அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில் , கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் , குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மையங்கள் 20 கோடியே 25 இலட்சம் ரூபாய் ...