Posts

• வேலூர் ரூ.37,50,000/- மதிப்பில் உழைப்பாளர் நலக்கூடம்

Image
·         வேலூர்   கட்டுமானத் தொழிலாளர்களுக்கான   ரூ.37,50,000/- மதிப்பில் உழைப்பாளர் நலக்கூ ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர். வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.37,50,000/- மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூ டத்தை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் திறந்து வைத்தனர்.   பின்னர் 40 நபர்களுக்கு தலா ரூ.20,000/- வீதம் என மொத்தம் ரூ.8,00,000/- மதிப்பில் திருமண நிதியுதவி தொகையினை வழங்கினார்கள்.   2025-2026- ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் ” கட்டுமானத் தொழிலாளர்கள் அவர்களது அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில் , கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் , குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மையங்கள் 20 கோடியே 25 இலட்சம் ரூபாய் ...

• வேலூர் சார்நிலை கருவூலம் ரூ.3.58 கோடி மதிப்பில் கட்டடம்

Image
 ·         வேலூர் மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் சார் நிலை கருவூல ம் ரூ.3.58 கோடி மதிப்பில் கட்டடம் - மாவட்ட ஆட்சி தலைவர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர். வேலூர், வேலப்பா டியில் ரூ.3.58 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள   மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் சார் நிலைக் கருவூல ம் கட்டடத்தை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் திறந்து வைத்தனர். தரைதளம் வரவேற்பு அறை, காப்பாறை (Strong Room), உதவி கருவூல அலுவலர் அறை, பாதுகாவலர் அறை,   மாற்று திறனாளிகள் கழிப்பறை, பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை போன்ற வசதிகளுடனும், முதல்தளம் சார்கருவூல அலுவலர் அறை, சார்கருவூல அலுவலகம், பதிவறை, ஓய்வூதியர்கள் பிரிவு, பெண்கள் மற்றும் ஆண்கள்   அலுவலர்கள் கழிப்பறை போன்ற வசதிகளுடனும்,   இரண்டாம் தளம் மண்டல இணை இயக்குநர் அறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகம், பெண்கள் மற்றும் ஆண்கள் அலுவலர்கள் கழிப்பறை போன்ற வசதிகளுடனும், மூன்றாம் தளம் கூட்டரங்கம், பதிவறை, அலுவலர்கள் கழிப்பறை போ...

• வேலூர் சதுப்பேரி ஏரி – ரூ.19 கோடி மதிப்பில் புனரமைத்து சுற்றுலாத் தலம்

Image
·         வேலூர் சதுப்பேரி ஏரி – ரூ.19 கோடி மதிப்பில் புனரமைத்து சுற்றுலாத் தலமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், ரூ.19 கோடி மதிப்பில்   புனரமைத்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டுள்ள வேலூர் சதுப்பேரி ஏரியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். பின்னர் படகில் சென்று ஏரியின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீவு திட்டினை பார்வையிட்டனர்.   வேலூர் சதுப்பேரி ஏரியினை புனரமைத்து சுற்றுலாதலமாக மேம்படுத் தப்பட்டுள்ள   பணி விவரம்.     ரூ .19.00   கோடி மதிப்பீட்டில் சதுப்பேரி ஏரியினை புனரமைத்து சுற்றுலாதலமாக மேம்படுத்தும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது . வேலூர் மாவட்டம் , வேலூர் வட்டத்தில் உள்ள சதுப்பேரி ஏரியினை புனரமைத்து சுற்றுலாதலமாக மேம்படுத்தும் பணி யினை 13.03.2025 அன்று தொட ங்கப்பட்டது . சதுப்பேரி ஏரி கரைகளை பலப்படுத்தி கரையின...

• கீ.வ.குப்பம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்.

Image
·         கீ.வ.குப்பம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஜி. ஜெயச்சந்திரன் முன்னிலையில் , மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாக நீதிபதி நீதியரசர் கே. முரளிசங்கர் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் , கீ.வ.குப்பம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஜி. ஜெயச்சந்திரன் முன்னிலையில் , மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாக நீதிபதி நீதியரசர் கே. முரளிசங்கர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஜி. ஜெயச்சந்திரன் பேசியதாவது , மக்களைத் தேடி நீதி என்ற அடிப்படையில் கீ.வ குப்பம் பகுதியில் நீதிமன்றம் அமைப்பதற்கு 2022- ம் ஆண்டில் தொடங்கிய முயற்சி இன்று நனவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பகுதி மக்கள் நீதியைத் தேடி   வெகுதூரம் அலைய வேண்டியதில்லை என்ற ஒரு கூற்றினைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது இன்றைய ...

• இறைவன்காடு பாலாற்றின் குறுக்கே ரூ.52.98 கோடி மதிப்பில் தரைமட்ட அணை.

Image
 ·         இறைவன்காடு பாலாற்றின் குறுக்கே ரூ.52.98 கோடி மதிப்பில் தரைமட்ட அணை. ·         இறைவன்காடு கிராமம் மற்றும் கவசம்பட்டு கிராமம் இடையே பாலாற்றின் குறுக்கே     ரூ.52.98 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தரைமட்ட அணையை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு வட்டம், இறைவன்காடு கிராமம் மற்றும் கீ.வ.குப்பம் வட்டம், கவசம்பட்டு கிராமம் இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.52.98 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தரைமட்ட அணையை இறைவன்காடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தனர்.   வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு வட்டம் , இறைவன்காடு கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தரைமட்ட அணை   விவரம் வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு வட்டம் , இறைவன்காடு கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே படுகை அணை அமைக்கும் பணிக்கு நபார்டு நிதி உதவியின் கீழ் ரூ. 52.98 கோடிக்கு நிர்வாக ...