Posts

• மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் “விழுதுகள்”.

மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் “ விழுதுகள் ” . “ விழுதுகள் ” உங்கள் ஊருக்கு அருகிலேயே உள்ளது! அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகளும் , அரசு நலத்திட்ட உதவிகளும் இப்போது ஒரே இடத்தில் கிடைக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம்தான் " விழுதுகள்" மையம். மாற்று திறனாளிகள் நலத்துறை , உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 21 வகையான மாற்று திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை எளிதாகப் பெற இந்த திட்டம் உதவுகிறது. அதன்படி , வேலூர் மாவட்டத்தில் , வருவாய் கோட்ட அளவில்   1. அரசு பெண்ட்லேண்ட மருத்துவமனை, வேலூர். 2. அரசு தாலுக்கா   மருத்துவமனை, பேர்ணாம்பட்டு ஆக மொத்தம் 02 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன. விரைவில் இம்மையங்கள்   செயல்பாட்டிற்கு வரவுள்ளது.   மேலும் , தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில்   உள்ள 08 வட்டார அளவில் 1. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊசூர், 2. அரசு ஆரம்ப சுகாதார ...

• நீர்வள துறை வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு.

Image
நீர்வள துறை மற்றும் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள்   குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.   வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் நீர்வளத்துறையின் சார்பில்   கழிஞ்சூர் ஏரி, தாராபடவேடு ஏரி, வெள்ளச்சேதம் தடுப்பு பணிகள், நெடுஞ்சாலை துறையின் சார்பில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள், பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் குறித்து   பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ள இரட்டை ஏரிகளான   கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரியை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து   காட்பாடி வட்டம், காட்பாடி நகரத்தில் உள்ள பாரதிநகர் மற்றும் வி.ஜி ராவ் நகர் பகுதியில் வெள்ள சேதத்தை தவிர்க்க பாண்டியன் மடுவு கால்வாய் தொலைக்கல் 21955மீ முதல் 22665 மீ வரை   ரூ.7 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாண்டியன் மடுவு கால்வாயானது காவனூர் ஏரியின் உபரி நீர் கால்வாயில் ஆரம்பமாகி 18.25 கி.மீட்டர் ...

• வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணி.

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை   நிர்வாக குழு தேர்தலுக்காக உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணி   நடைபெற்று வருவதால்   15.07.2026-ந் தேதிக்குள் பதிவு செய்யமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சர்க்கரை ஆலையின் தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.                         இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலில் இறந்தவர்களை நீக்குதல், ஆதார் எண் இணைத்தல் போன்றவை மேற்கொண்டு முழுமையான உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.                         எனவே ஆலையின் அங்கத்தினர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் எண் விவரங்களை தங்கள் பகுதி கரும்பு கோட்ட அலுவலகத்தில் ப...

• வேலூரில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம் .

Image
·          வேலூரில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம் .       வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநில துணை பொதுசெயலாளர் ஜோஷி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட தலைவர் ரமேஷ் துவங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் தீனா , சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.      17- வது சட்டமன்ற பொது தேர்தல் பணிகளில் வருவாய் துறை ஊழியர்கள் மேற்கொண்ட செல்வீனங்களுக்கான தொகையை தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் செல்வீன நிதியை உடனே வழங்க வேண்டும். சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்களில் ஆய்வு கூட்டங்கள் அரசு நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.              நீண்ட காலமாக வருவாய் துறையில் காலிய...

• முதலமைச்சர் மாநில இளைஞர் விருது

·         முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 2026 ஆண்டிற்கான   இணையதள மூலம் விண்ணப்பிக்க 13.07.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என வேலூர்   மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத் தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2026-ம் ஆண்டிற்கான “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” எதிர்வரும் 15.08.2026 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 1. 15 வயது முதுல் 35 வயது வரையுள்ள ஆண் / பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2025 (01.04.2025) அன்று 15 வயது   நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, ...

பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்வு முகாம்.

·         வேலூர் மாவட்டத்தில்   11.07.2026   இரண்டாவது   சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்வு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் . பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கீழே குறிப்பிட்டுள்ள கிராமங்களில் 11/07/2026 ஆம் தேதி (இரண்டாவது சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 0 1.00 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு செய்தல்,   குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் வட்ட வழங்கல் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும். மேலும் பொது விநியோக திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரிவித்து தீர்வு காணலாம். சிறப்பு குறைதீர்வு முகாம்கள் நடைபெறும் இடங்கள்: வ. எண்...