Posts

• சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

·         சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.                    சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 1.                  விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை 2.              இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 3.              ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 4.              கல்வி உதவித்தொகை 5.              திருமண உதவித்தொகை 6.              மகப்பேறு உதவித்தொகை 7. ...

• சுய உதவி குழு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் தேர்வு.

சுய உதவி குழு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் தேர்வு.                    வேலூர் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு 50 சுய உதவி குழுக்களுக்கு ஒரு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (கடன் மற்றும் வங்கி சேவைகள்) தேர்வு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 05.05.2026 அன்றுள்ளவாறு மதிகளம் (இணைய தளத்தில்) உள்ள பதிவுகளின்படி, 114   சமுதாய   வங்கி   ஒருங்கிணைப்பாளர்கள்   மட்டுமே   பணியில்   உள்ளனர். வேலுார் மாவட்டத்தில் தற்பொழுது காலியாக உள்ள 19 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ள விவரம்   பின்வருமாறு.   வ.எண் ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை 1 அணைக்கட்டு 3 2 குடியாத்தம் 5 3 காட்பாடி 1 ...

• வேலூர் கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள்.

·         காவிரி நீரை ஆதாரமாக கொண்ட வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குடிநீர் குழாயில் 03.06.2026 முதல் 05.06.2026 வரை மூன்று நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பொதுமக்கள் உள்ளூர் நீர் ஆதாரங்களை கொண்டு வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிக,ள் 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றின் நீரினை ஆதாரமாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மேட்டூர் செக்கனூர் கதவனை நீர் மின் நிலையத்தில் 31.05.2026 முதல் 14.06.2026 வரை 15 நாட்களுக்கு வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பராமரிப்பு பணியின் காரணமாக 31.05.2026 முதல் 14.06.2026 வரை 15 நாட்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து 50 சதவீத அளவிற்கு மட்டுமே குடிநீர் வழங்க இயலும் என ஏற்க...

• அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்.

·          அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்.                 அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூ ட்டம் நடத்தப்பட வேண்டுமென சென்னை , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் அவர்களின் கடிதம் ந . க . எண் .42791/2023/SBM(G)-2. நாள் : 22.05.2026 மற்றும் ந . க . எண் .28645/2026/CFC 1.2. நாள் : 29.05.2026- ல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து , வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 05.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் தவறாமல் சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இக்கிராம சபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய   கூட்டப்பொருள் விவரம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக சுற்றுசூழல் தினம் 2026- யை முன்னிட்டு 01.06.2026 முதல் 0506.2026 வரையில் “ காலநிலை நடவடிக்கை (Climate Action)” என்ற கருப்பொருளுடன் “Sw...

• வேலூர் மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு.

Image
வேலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 குறித்து அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு - முதன்மை மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்       நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027   பணிகளில் ஈடுபடவுள்ள கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பிற அலு வலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதன்மை மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இந்தியாவில் 1872 ஆம் ஆண்டு முதல்,   மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும், சுதந்திரத்திற்கு பிறகு 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும் உள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் கருவிகள் மற்றும் வழிமுறைகளின் மூலம் சேகரிக்கப்படவுள்ள முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கெடுப்பாளர்கள் தங்கள் சொந்த...