Posts

• அணைக்கட்டு ஜமாபந்தி நிறைவு நாள்.

Image
·         அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலி ஆண்டிற்கான   வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள்.   ·         மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் 192 பயனாளிகளுக்கு     ரூ.2 கோடியே   45 இலட்சத்து 91 ஆயிரத்து 714   மதிப்பில்   நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026 நிறைவு நாளில் மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பி . எஸ் . லீலா அ லெ க்ஸ் 192 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 45 இலட்சத்து   91   ஆயிரத்து 714   மதிப்பில்   நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.                 வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்தில் விவசாயிகள் சங்க மாநாடு மற்றும் ஜமாபந்தி 17.06.2026 அன்று   தொடங்கி 24.06.2026   வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து 5 நாட்கள் ...

• வேலூர் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நல வாரியம்.

·         வேலூர் மாவட்டத்திலுள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று   பயனடைய மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                  கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 1.                  விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை 2.              இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 3.              ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 4.              கல்வி உதவித்தொகை 5.     ...

• பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சான்று - லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவர் கைது.

Image
 ·          பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சான்று வழங்க ரூ . 900 லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவர் கைது.     வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த அக்கிரெட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்த ரங்கன் என்பவரின் மூன்று பிள்ளைகள் தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு பள்ளியில் உடல் தகுதி மற்றும் மருத்துவ சான்று கேட்டதால் பள்ளிகுப்பத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகியுள்ளனர் . பணியில் இருந்த அரசு மருத்துவர் வெங்கடலட்சுமி மருத்துவ சான்று வழங்க ஒரு பிள்ளைக்கு ரூ. 300 என மூன்று பேருக்கு ரூ. 900 லஞ்சம் கேட்டுள்ளார் .              இது குறித்து ரங்கன் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர் . மருத்துவர் இந்த பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக அரசு மருத்துவர் வெங்கடலட்சும...

• வேலூர் “START RUN, STOP DRUGS” - Anti-Drug Run-2026 விழிப்புணர்வு மாரத்தான்.

Image
 ·         வேலூர் மாவட்டத்தில் “START RUN, STOP DRUGS” - Anti-Drug Run- 2026 விழிப்புணர்வு   மாரத்தான் 26.06.2026 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவது குறித்து பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள் , இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள் , இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500 நபர்கள் கலந்து கொள்ளும் வகையில் “START RUN, STOP DRUGS” - Anti-Drug Run- 2026 என்கிற தலைப்பில் 5 கிலோ மீட்டர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட த்தை 26.06.2026 அன்று நடத்த அறிவுறுத்தியுள்ளார்.     நாள் இடம் நேரம் 26.06.2026 டவுன் ஹால் பழைய பேருந்து முதல் பாகாயம் சிஎம்சி விளையாட்டு அரங்கம் வரை காலை 6.30 மணிக்கு   ஸ்டார்ட் RUN , ஸ்டாப் DRUGS Anti-Drug Run 2026   நடத்திட வழிமுறைகள் :- இ...

• அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் 4-ம் நாள் ஜமாபந்தி.

Image
 ·         அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 4-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ·         மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் கலந்து கொண்டு வருவாய் ஆவணக் கணக்குகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து   253     கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலி ஆண்டிற்கான நான்காம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ல் மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பி . எஸ் . லீலா அ லெ க்ஸ் கலந்து கொண்டு வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து 253 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.                 வேலூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் ஜமாபந்தி 17.06.2026 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.   ஜமாபந்தி 24.06.2026 அன்று வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் நடைபெற உள்ளது.     ...

• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம்.

Image
·          வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம்.   ·          நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனை – கோபுர தரிசனம் – திரளான பக்தர்கள் வழிபாடு .                வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தேன் , பால், தயிர் , சந்தனம் , தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை சிறப்பு யாகம் நடைபெற்றது.       பின்னர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மலர் மாலைகள் வில்வ இலை மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் கோபுர தரிசனத்திற்கு பின்னர் வீதி உலாவுக்காக ஆலயத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்...