• வேலூர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் ஆட்சித்தலைவர் ஆய்வு.
· வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு . வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார் . வேலூர் மாவட்டத்தில் மார்ச் 2026 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் 02.03.2026 தொட ங்கியது. மேல்நிலை முதலாம் ஆண்டு ( Arrear) பொதுத் தேர்வு 03.03.2026 ( செவ்வாய்கிழமை) அன்று தொடங்க ப்படவுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு 11.03.2026 ( புதன்கிழமை) அன்று தொடங்கப் படவுள்ளது. மாவட்ட ஆட்சி தலைவரின் மேற்பார்வையில் வருவாய் துறை அலுவலர்கள் 22 பேரும் , பள்ளிக்கல்வி இயக்குநரக இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) அவர்களும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் , வேலூர் தலைமையில் 6 பறக்கும் படையும் பொதுத்தேர்வை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டிற்கு 82 தேர்வு...