Posts

வேலூரில் டாக்டர் இக்ராம் சமூக அறக்கட்டளை சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாள் முப்பெரும் விழா

Image
 வேலூரில் டாக்டர் இக்ராம் சமூக அறக்கட்டளை சார்பில்  நபிகள் நாயகம் பிறந்தநாள் முப்பெரும் விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கல்  வேலூர்: வேலூர் மக்கள் மன்றம், டாக்டர் அ.மு. இக்ராம் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஹஸரத் மக்கான் ஆகியோர் இணைந்து நடத்திய முப்பெரும் விழா, ஹஸரத் மக்கான் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில், நபிகள் நாயகத்தின் அறிவுரைகள் மற்றும் போதனைகள் குறித்து டாக்டர் அ.மு. இக்ராம் விளக்கிப் பேசினார். விழாவில் துணைச் செயலாளர் ஜோஷ்வா வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, வேலூர் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தனுஷ் குமார், ஐ.பி.எஸ்., சமூக நீதி விடுதிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதையடுத்து, மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாளர் ஆர். சீனிவாசன் உறுதிமொழியை வாசிக்க, விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். ஜாபர் அக்பர் கான், அமீர் ஜான் மற்றும் ஹஸரத் மக்கான் பொறுப்பாளர் சையத் குவாட்ரி , டாக்டர் ஹமீதுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவின் நிறைவில் துணைச் செய...

• வேலூர் வாசகர் வட்டம் வாரியார் சிறப்பு பட்டிமன்றம்.

Image
·          வேலூர் வாசகர் வட்டம் சார்பில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121- வது பிறந்தநாள் விழா சிறப்பு பட்டிமன்றம். முன்னாள் எம் . எல் . ஏ . கார்த்திகேயன் பங்கேற்பு.        வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டம் சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121- வது பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி வேலூரில் நடைபெற்றது.              விழாவிற்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஆடிட்டர் பாண்டியன் தலைமை தாங்கினார் . ஆடிட்டர் நிர்மல்குமார் முன்னிலை வகித்தார் . கவிஞர் பொன் . ராஜன்பாபு வரவேற்றார் .      சிறப்பு விருந்தினராக முன்னாள் எம் . எல் . ஏ ., கார்த்திகேயன் கலந்து கொண்டு வாரியார் சுவாமிகளின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார் .     சிறப்பு அழைப்பாளராக ரத்தினகிரி பாலமுருகன் கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் கலந்து கொண்டு பட்டிமன்றத்தை தொடங்கி ...

• வேலூரில் நபிகள் நாயகம் பிறந்த நாள்.

Image
·          வேலூரில் நபிகள் நாயகம் பிறந்த நாள்    ·          மிலாடி நபி விழாவான இன்று இஸ்லாமிய மக்கள் 1000 கிலோ அரிசி கொண்டு உணவு சமைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர் அன்னதானம்.      வேலூர் மாவட்டம் , வேலூர், சார்பனாமேடு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் தொடர் அன்னதானம் வழங்குவார்கள்.     அதேபோன்று இந்த ஆண்டும் 1000 கிலோ அரிசி கொண்டு உணவு சமைத்து சாதி மத பாகுபாடில்லாமல் அனைத்த தரப்பு மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றனர்.       மிலாடி நபி திருநாளான இன்று காலை முதல் இரவு வரையில் மக்கள் பசியாற உணவளித்து இந்த தொடர் அன்னதானம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  

• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.

Image
 ·          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில்    பிரதோஷம்.  ·          பக்தர்கள் ஹரோ ஹரா முழக்கங்களுடன் நந்தி பகவானை தரிசனம் .  ·          நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் - மஹா தீபாராதனை.             வேலூர் மாவட்டம் , வேலூர், கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் , சந்தனம் , தேன், கரும்பு சாறு, இளநீர் , பன்னீர் , திருநீறு   உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்யப்பட்டது. பின்னர்   மலர் மாலைகள், வில்வ இலைகள், அருகம்புல்   மாலைகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் அரோகரா முழக்கங்களுடன் பக்தர்கள் நந்தி பகவானை வழிபட்டனர். பின்னர் சுவாமி உட்பிரகார உலாவும் வந்தது.    

• விளையாட்டு போட்டிக்கு சென்ற மாணவிகள் மீது கார் மோதி விபத்து

Image
·         வேலூர் அருகே வட்டார விளையாட்டு போட்டிகளுக்கு சென்ற மாணவிகள் மீது கார் மோதி விபத்து - 7 மாணவிகள் காயம். ·      அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.              வேலூர் மாவட்டம் , தொரப்பாடி அரசினர் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் வட்டார விளையாட்டு போட்டிக்காக ஊசூர் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.              பின்னர் மீண்டும் அவர்கள் தொரப்பாடி அரசு பள்ளிக்கு சாலையில் நடந்து வந்த போது பின்பக்கமாக வந்த கார் மாணவிகளின் மீது மோதியது. இதில் எட்டாம் வகுப்பு மாணவிகள் வர்ஷா , சுஜாதா , ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் சிவானி , ஷர்மிதா , அர்ஷிதா , ரூபிகா , அன்சிகா ஆகிய 7 மாணவிகளும் காயமடைந்தனர்.       காயமடைந்த 7 மாணவிகளும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அ...