Posts

• ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மன், ஸ்ரீ செல்லியம்மன் சந்தன காப்பு அலங்காரம்.

Image
  ·          ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மன், ஸ்ரீ செல்லியம்மன் சந்தன   காப்பு அலங்காரம் – மகாதீபாராதனைகள்.   ·          திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் .      வேலூர் மாவட்டம் , வேலூர், கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து சந்தன காப்பு அலங்காரங்களை செய்து வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.       இதேபோல் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ செல்லியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து மலர் மாலைகள், பழ மாலைகளால் அலங்காரங்களை செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.  

• வேலூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்பாட்டம்.

Image
 ·          வேலூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்.        வேலூர் மாவட்டம் , சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வெங்கடேஷ்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வேலு , அரசு ஊழியர் சங்கம் ஜோஷி , கல்வி துறை அலுவலர்கள் சங்கம் சேகர் உள்ளிட்டோரும் திரளான ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.       இந்த ஆர்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 1,500- க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்களையும் , மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் , பதிவறை எழுத்தர் , அலுவலக உதவியாளர் , இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட கோருதல் , ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிட வேண்டு...