Posts

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் -   மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 692 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.                       வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது .                        மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை , ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நல துறை . மருத்துவ துறை , கிராம பொது பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவ...

• வேலூர் மலைக்குறவன் ஜாதி சான்றிதழ் கோரி மக்கள் மனு.

Image
·          வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மலைக்குறவன் ஜாதி சான்றிதழ் கோரி கிராம மக்கள் நேரில் மனு.          வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சஞ்சீவிராயபுரம் மற்றும் கிராம மக்கள் பள்ளி மாணவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.     இவர்கள் துத்திப்பட்டு , காட்பாடி , வசந்தபுரம் , விரிஞ்சிபுரம் , ராணிப்பேட்டை , அரக்கோணம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் இந்து மலை குறவர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.       ஆனால் வருவாய் துறையினர் சிலருக்கு மட்டும் இந்து மலை குறவன் ( எஸ் . டி ) சான்றிதழ் வழங்கி விட்டு மற்றவர்களுக்கு ஜாதி சான்றிதழ் குறவர் ( எஸ் . சி ) சான்று வழங்குகின்றனர். எங்களுக்கு இந்து மலை குறவன் ( எஸ் . டி) என சான்று வழங்க சான்று வழங்க வேண்டுமெனவும் இதனால் கல்வி வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுவதாகவும் கிராம மக்கள் ...

• வேலூர் மாவட்ட ஆகஸ்டு மாத மனுநீதி நாள் முகாம்.

வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்டு-2026 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் கீ.வ.குப்பம் வ ட்டம் , அரும்பாக்கம்   கிராமத்தில் 12.08.2026 அன்று   நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் .                  வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்டு – 2026 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் கீ . வ . குப்பம் வட்டம் , அரும்பாக்கம் கிராமத்தில் 12.08.2026 புதன்கிழமை காலை 10.00 மணியளவில்   மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது . மேற்படி மனுநீதி நாள் முகாம் நடைபெறும் வளாகத்தில் அரசு துறையின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளம்பர பதாகைகள் மற்றும் காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது . பொதுமக்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்களை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் மனு அளித்து மனுநீதி நாள் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி . எஸ் . லீலாஅலெக்ஸ் , தெரிவித்துள்ளார் .

• தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி விழிப்புணர்வு முகாம்.

·         வேலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வு முகாம் 30.07.2026 அன்று நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் மாவட்டத்தில் ஏற்றுமதி வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), ஏற்றுமதியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் மாவட்ட தொழில் மையம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநர் (Directorate General of Foreign Trade) சார்பில் விழிப்புணர்வு முகாம் 30.07.2026 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் 5-ம் தளத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏற்றுமதிக்கான பதிவு நடைமுறைகள், அரசின் ஊக்கத் திட்டங்கள், தரச்சான்றிதழ்கள், சந்தை வாய்ப்புகள், பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் தொடர்புடைய துறைகளின் சேவைகள் குறித்து நிபுணர்களால் விளக்கமளிக்கப்படும். எனவே, மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன...

• விவசாய பம்புசெட்டுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் அரசு கைவிட வேண்டும்.

Image
·          தமிழகத்தில் விவசாய பம்புசெட்டுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.   ·          தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆட்சியரிடம் மனு.           வேலூர் மாவட்டம் , வேலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் உதயகுமார் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.     அதில் தற்போது தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் அதனை ரத்து செய்யும் நோக்கில் விவசாய பம்பு செட்டுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்களை பொருத்த வேண்டுமென மின்வாரியத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை தமிழக விவசாயிகள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் முயற்சியை கைவிட்டு தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டுமென ஆட்சியர் லீலா அலெக்சிடம் மனு அளித்தனர்.    

• வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.

Image
 ·          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம். ·          நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் – மகாதீபாராதனை.             வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை, ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு தேன் , அரிசி மாவு , பால் , தயிர் , விபூதி , கரும்பு சாறு, சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்களை செய்து இறுதியாக கலசாபிஷேகம் செய்தனர்.       பின்னர் மலர் மாலைகள், வில்வ இலை மாலைகள், அருகம்புல் தாமரை மலர்களால் நந்திக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து தட்டு ஆரத்தி, கும்ப ஆரத்திகளை செய்து இறுதியாக மகாதீபாராதனை நடைபெற்றது.     இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி, ஜலண்டீஸ்வரர் அலங்காரங்கள் செய்து திருஊடல் வ...

• பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி நூற்றாண்டு விழா.

Image
·         பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்  தலைமையில்  நடைபெற்றது. வேலூர் மாவட்ட ம், பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் மரக்கன்றை நடவு செய்து, நூற்றாண்டு விழா ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும், ஓய்வு பெற்ற முன்னாள்   தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், பெருமுகை கிராமத்தில் கூலி தொழிலாளர் குழந்தைகளின் கல்வி நலன் கருதி 26.07.1926 அன்று லேபர் பள்ளியாக அப்போதைய சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டது. இப்பள்ளி வேலூர் நகரப்பகுதிக்கு அருகில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இப்பள்ளி அமைந்துள்ளது. பெருமுகை பள்ளியானது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்டு, பின்னர் நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளியாகவும் இயங்கி வந்து தற்போது அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறத...