• பி.டி.லீ. கல்லூரியில் AICRA நிறுவன உறுப்பினர் தொடக்க விழா.
காஞ்சிபுரம் பி . டி . லீ . செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் (AICRA) நிறுவன உறுப்பினர் தொடக்க விழா. காஞ்சிபுரம் அடுத்த ஊவேரியில் அமைந்துள்ள பி . டி . லீ . செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இயந்திரவியல் துறை (Department of Mechanical Engineering) சார்பில் , " அகில இந்திய ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் கவுன்சில் " (AICRA) நிறுவன உறுப்பினர் தொடக்க விழா கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது . நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் : இந்நிகழ்விற்கு பி . டி . லீ . செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தலைவரும் , சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியுமான P. கலையரசன் தலைமை தாங்கி ஆசி வழங்கினார் . இயந்திரவியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் S. பூபதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் . கல்லூரி முதல்வர் முனைவர் P. பழனிசாமி...