Posts

• வேலூர் பொற்கொடியம்மன் ஏரி திருவிழா.

Image
·         வேலூர் பொற்கொடியம்மன் ஏரி திருவிழா.     ·         ஒரு லட்சம் பேர் கூடி ஏரியில் சமைத்து மக்களுடன் உணவு உண்டு தேரை தூக்கி வழிபாடு     ·         மகிழ்ச்சியுடன் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தினர்.     வேலூர் மாவட்டம் , அனைக்கட்டு அருகேயுள்ள வேலங்காடு கிராமத்தில் ஏரியில் அமைந்துள்ளது அருள்மிகு பொற்கொடியம்மன் ஆலயம். இதில் ஆண்டுதோறும் ஏரித்திருவிழா என்றழைக்கப்படும் புஷ்பரத தேர் திருவிழா நடைபெற்றது.      வித்தியாசமான முறையில் வல்லண்டராமம் , வேலங்காடு , அன்னாசிபாளையம் , பனங்காடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மக்கள் பச்சை ஓலை கட்டி கொண்டு மாட்டு வண்டிகளிலும், டிராக்டர் ஆகியவற்றிலும் தென்னை ஓலை கட்டி கொண்டு ஏரியினுள் வந்து குடும்பம் குடும்பமாக கூடி பொற்கொடியம்மன் வணங்கி விவசாயம் செழிக்க வேண்டும், கால்நடைகள் நோய் நொடியின்றி இருக்க ...

• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.

Image
        வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.     ·         நந்தி பகவானுக்கு பால் தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக,   அலங்காரம்.      ·         பக்தர்கள் ஹரோ ஹரா முழக்கங்களுடன் தரிசனம்           வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் , சந்தனம் , தேன், கரும்பு சாறு, இளநீர் , பன்னீர் , திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்யப்பட்டது.       பின்னர் அலங்காரங்களை செய்து மலர் மாலைகள் வில்வ இலைகள், அருகம்புல் மாலைகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடந்தது.      இதில் அரோகரா முழக்கங்களுடன் பக்தர்கள் அனைத்து தோஷங்களும் நீங்க வேண்டி நந்தி பகவானை வழிபட்டனர். மேலும் மேளதாளங்கள் முழங்க சாமி உட்பிரகார...

• பொய்கை அருகே தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்தது.

Image
  ·         பொய்கை  அருகே  சென்னை பெங்களூர்  தேசிய  நெடுஞ்சாலையில்  பாலத்தின்  மீது   தனியார்  பேருந்து   தீப்பற்றி  எரிந்தது.    ·         தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரமாக போராடி தீயை அணைத்தனர்.         வேலூர் மாவட்டம் , பொய்கை கிராமத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரிலிருந்து வேலூருக்கு ஒரு சொகுசு பேருந்து வந்தது. பேருந்தின் பாகங்களை உடைத்து எடுப்பதற்காக வேலூருக்கு வந்ததை ஓட்டுநர் வினோத்குமார் ஓட்டி வந்தார்.      பொய்கை மேம்பாலம் அருகே வரும்போது திடீரென பேருந்தின் டயர் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. ஓட்டுநர் வினோத்குமாரை பேருந்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி உயிர் தப்பினார்.       சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை வேக வேகமாக அணைத்தனர். பாலத்தின் ம...

• வேலூர் வேளாண் அடுக்கக திட்டம் - 58,696 விவசாயிகள் பதிவு.

·         வேலூர் மாவட்டத்தில்   வேளாண் அடுக்கக திட்டத்தில் 58,696 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.   பதிவு செய்யாத விவசாயிகள் 31.05.2026 தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வேளாண் அடுக்கக திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் , அவர்கள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் மத்திய , மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.   மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப் பணிகளையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பயன்பெற வேளாண் அடுக்கக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது. வேளாண் அடுக்கக திட்டத்தில் தனிப்பட்ட அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் தவணை வழங்கப்ப...

• வேலூர், விருதம்பட்டில் புதிய ஆதார் சேவை மையம்.

Image
  ·         வேலூர், விருதம்பட்டில் புதிய ஆதார் சேவை மைய ம் - மாவட்ட ஆட்சி தலைவர் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி, விருதம்பட்டில் புதிய ஆதார் சேவை மையத்தை   மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி திறந்து வைத்தார்.   இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), வேலூர் நகரில் குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட ஆதார் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாக, வேலூர் விருதம்பட்டில் புதிய UIDAI ஆதார் சேவை மையத்தை (ASK) தொடங்கி உள்ளது. இந்த ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவு, மக்கள் தொகை விவரங்கள் மற்றும் உயிர்வள (Biometric) தகவல் புதுப்பித்தல், பிழை திருத்தம், குறைதீர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதார் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இந்த மையம் அரசு பொது விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அதிக வசதியும் மேம்பட்ட சேவை அனுபவமும் கிடைக்கும். மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்து, அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். மேலும...