Posts

Showing posts from July, 2026

• பொன்னை சி.ஆர்பி.எப். பெண் வீரரின் வீட்டில் நகை திருட்டு.

Image
 ·          பொன்னை அருகே சி . ஆர்பி . எப். பெண் வீரரின் வீட்டில் 22.5 சவரன் நகை     திருட்டு.   ·          பல மாதங்களாகியும் குற்றவாளியை பிடித்தும் நகையை மீட்டு தராமல் பொன்னை காவல் துறையினர் அலைகழிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் சி . ஆர்.பி . எப். பெண் வீரர்   நேரில் மனு.              வேலூர் மாவட்டம் , பொன்னை அருகேயுள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலாவதி. இவர் மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் ( சி . ஆர் . பி . எப் ) வெளிமாநிலத்தில் பணியாற்றுகிறார். இவரின் தாய் மற்றும் தந்தை விவசாயம் செய்து வருகின்றனர்.       கடந்த ஜுன் 24, 2025 அன்று இவர் வீட்டில் மொத்தம் 22.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ .50 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.       நகைகள் திருடு போனது குறித்து பொன்னை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து போலியான குற்றவாளியை...

• வள்ளிமலை வளரிளம் பெண்கள் சிறப்பு கிராம சபை கூட்டம்.

Image
 ·         வள்ளிமலை ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் வளரிளம் பெண்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் சிறப்பு பார்வையாளராக   கலந்து கொண்டார். வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், வள்ளிமலை ஊராட்சியில்   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ச.வாசுகி தலைமையில் நடைபெற்ற வளரிளம் பெண்களுக்கான கிராம சபை கூட்டத் தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண் டு,   கருத்துரை   வழங்கினார்.                  இக்கிராம சபை கூட்டத்தில் வள ரி ளம் பெண்கள் , பள்ளி மாணவ , மாணவிகள் , பெற்றோர்கள் ஆகியோருக்கு பெண்களின் பாதுகாப்பு , சுகாதாரம் , குழந்தை திருமணங்களை தடுத்தல் போன்ற பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த தீர்மானங்க ள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது .                ...

• வேலூர் ஆவின் குளிரூட்டும் நிலையம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

Image
 ·          வேலூர் ஆவின் குளிரூட்டும் நிலையம் - வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணா ஆய்வு .       வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணா ஆய்வு செய்தார். அப்போது அவர் பால் உற்பத்தி செய்து பேக்கிங்க் செய்யபடும் இயந்திரத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பால் வாகனங்களில் ஏற்றி அனுப்புவதையும், மேலும் நெய் தயாரிக்கும் மையத்தினையும் ஆய்வு செய்தார்.              சில நாட்களாக ஆவின் பால் கெட்டுப் போவதாக நுகர்வோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த திடீர் ஆய்வை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வின்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.    

• வேலூர் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Image
·         வேலூர் மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் (NADCP) கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகா ம் - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.                  வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சி, சோமநாதபுரம் கிராமத்தில் தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் (NADCP) கால்நடைகளுக்கான ஒன்பதாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தொடங்கி வைத்தார். இன்று நடைபெற்ற முகாமில் மேல்பாடி ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சுமார் 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் நாள்தோறும் 42 இடங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்   நடைபெற உள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.   மேல...

• காட்பாடி ஊராட்சி ஒன்றியம் - வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு .

Image
·         காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை, பள்ளிகள், நியாய விலை கடை, மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் தோழி விடுதி ஆகிய பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார். காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வள்ளிமலை, மேல்பாடி, விண்ணம்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் நாற்றாங்கால் பண்ணை பணி,   பள்ளிகள், நியாய விலை கடை, மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் தோழி விடுதி ஆகிய பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.                  வள்ளிமலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின்கீழ் ரூ.9.45 இலட்சம் மதிப்பில் 7,500 மரக்கன்றுகள், ரூ.2.52 இலட்சம் மதிப்பில் 2,000 மரக்கன்றுகள் உருவாக்கும் வகையில் அமையவுள்ள நாற்றாங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகளுக்காக தற்பொழுது அவ்விடம் சீர் செய்யப்பட்டுள்ள நிலையில் பணிகளை உடனடியாக தொடங்க அறி...