Posts

Showing posts from August, 2026

• வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இலட்சினை உலக சாதனை நிகழ்வு .

Image
வேலூர் நகராட்சி 1.8.2008 அன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருவதை முன்னிட்டு அதனை பெருமைப்படுத்தும் விதமாக 1,558 தூய்மை பணியாளர்களைக் கொண்டு Triumph World Record - நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சியின் இலட்சினையாக ( Logo) மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் நின்ற உலக சாதனை நிகழ்வு   நடைபெற்றது. வேலூர் நகராட்சி 1.8.2008 அன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருவதை முன்னிட்டு அதனை பெருமைப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் 1,558 தூய்மை பணியாளர்களைக் கொண்டு Triumph World Record - நிறுவனத்துடன் இணைந்து வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் மாநகராட்சியின் இலட்சினையாக ( Logo) தூய்மை பணியாளர்கள் நின்ற உலக சாதனை நிகழ்வு   நடைபெற்றது. வேலூர் மாநகராட்சியானது 1866- ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வந்து கடந்த 01.08.2008- ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான எண்ணற்ற சேவைகளை செய்து ...

• இல்லம் சென்று பொது விநியோக திட்ட பொருட்களை விநியோகிக்கும் திட்டம்

·         202 6- ஆம் ஆண்டு   ஆகஸ்ட் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இல்லம் சென்று பொது விநியோக திட்ட பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் பொருட்களை வழங்கும் வகையில் ஆகஸ்ட்   4 , 5 -ம் தேதிகளில் ” தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                                                                        அரசாணை (நிலை) 82 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1) துறை நாள்.11.08.2025 மற்றும் அரசாணை (நிலை) 114 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு...

• வேலூரில் உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு.

Image
  ·          வேலூரில் உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு - மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் நேரில் துவங்கி வைத்தார்.   ·          மாவட்டம் முழுவதும் 2,686 நபர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர் - ஆட்சியர் லீலா அலெக்ஸ் பேட்டி .              வேலூர் மாவட்டம் , வேலூரில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் சத்துவாச்சாரி இரண்டாவது மண்டலத்தில் ஆர்.டி.ஓ. சாலையில் வீடுகளுக்கு நேரடியாக சென்று பணியை அவரே துவங்கினார்.       இதில் வீட்டின் உரிமையாளர்களிடம் 37 கேள்விகள் கேட்கப்பட்டு அவைகள் பதிவிடப்படுகிறது. ஆன்லைனில் இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரையில் வீடு வீடாக 2,686 களப்பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு கணக்கெடுப்பை செய்கின்றனர். களப்பணியாளர்களை கண்காணிக்க கண்காணிப்பாளர்களு...

• தொரப்பாடியில் இலவச கண்புரை பரிசோதனை முகாம்.

Image
 ·          தொரப்பாடியில் தமிழக புரட்சி கழகத்தின் சார்பில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் - முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.          வேலூர் மாவட்டம் , வேலூர், தொரப்பாடியில் தமிழக புரட்சி கழகத்தின் சார்பில் கரிகிரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண்புரை பரிசோதனை முகாமினை முன்னாள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.       இதில் மாநில மருத்துவ அணி அமைப்பாளர் தமிழரசன் , நிறுவன தலைவர் இக்பால் , மாநில இளைஞரணி அமைப்பாளர் முக்தியார் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சர்க்கரை வியாதி , ரத்த கொதிப்பு, கண்புரை உள்ளது போன்றவை எல்லாம் பரிசோதிக்கப்பட்டது. இதில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை கரிகிரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கண் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இந்த இலவச முகாமில் நூற்று கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ...

• பெண்கள் பாதுகாப்பு குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி

Image
 ·         பெண்கள் பாதுகாப்பு குறித் து திறன் மேம் பா ட்டு பயிற்சி ( POSH Act 2013) - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.   வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் பெண்கள் பாதுகாப்பு குறித் து திறன் மேம் பா ட்டு பயிற்சி POSH Act 2013 வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது.   மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் பெண் குழந்தைகளைப் காப்போம் பெண் குழந்தைக்கு கற்பிப்போம் BBBP திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 2026-2027- ஆம் நிதி ஆண்டு நிகழ்ச்சியின் அட்டவணைப் படி மாவட்ட அளவில் LC/IC உள்ளூர் குழு / உள்ளக குழு / உறுப்பினர் / தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Nodal Officers) அவர்களுக்கும் POSH ACT 2013 (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் குறித்தும் அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது. குழு உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் அனைவரும் ...