Posts

• பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்.

Image
·          பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பள்ளி   மாணவ ,   மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் நீதிநெறி கல்வி வகுப்புகளில் மாணவ , மாணவிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ் இனத்தின் மறுமலர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களை போற்றும் வகையில் அவர் பிறந்த நாளான ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் முதல் மே மாதம் 5 ஆம் நாள் வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ் வாரம் கொண்டாடப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அறிவித்தார்கள் . அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் பாரதிதாசன் பிறந்தநாள் விழா தமிழ் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் வருகின்ற 05.05.2025 மற்றும் 06.05.2025 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மற்றும் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவிகளுக்கு பேச்சுப்போ...

• முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட விண்ணப்பம்.

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு தொகை விண்ணப்பம் .        சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதிர்வு தொகை பெற்று வழங்கிட வட்டார விரிவாக்க அலுவலர் ( ம) ஊர்நல அலுவலர்கள் மூலம் பயனாளிகளை கண்டறிந்து ஆ வண ங்களை பெற்று ஆணையரகம் மூலம் தொகை பெற்று வழங்கப்பட்டு வருகிறது.   மேலும் வைப்புத்தொகை பத்திரம் பெற்று 22 வயது மற்றும் அதற்கு மேல் பூர்த்தி அடைந்தும் முதிர்வு தொகை வேண்டி விண்ணப்பம் அளிக்காதவர்கள் தங்களின் வைப்புத்தொகை பத்திரம் , வ ங்கி கணக்கு விவரம் (தனி கணக்கு). 10- ம் வகுப்பு மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் வேலூர் மாவட்ட சமூகநல அலுவலகம் அல்லது சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலுள்ள விரிவாக்க அலுவலர் மற்றும் ஊர்நல அலுவலர்களிடம் விண்ணப்பம் அளி த்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

• நில அளவை செய்ய விண்ணப்பிக்கும் புதிய வசதி.

·         நிலங்களை நில அளவை செய்ய விண்ணப்பிக்கும் புதிய வசதி . வேலுார் மாவட்டம் அனைத்து வட்டங்களுக்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தபட்ட வட்ட அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில் , வட்ட அலுவலங்களுக்கு செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது . இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவைக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு செல்லாமல் ” Citizen portal ” மூலமாக   இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது . தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொது சேவை மையங்கள் ( இ - சேவை ) மூலமாக விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது . நிலஉரிமைதாரர்கள் தங்களது நிலங்களை நில அளவை செய்ய பொது சேவை மையங்களை அணுகி , நில அளவைக்கான கட்டணத்தை...

• சித்திரை முழு நிலவு மாநாடு - தீர்மானம்.

Image
  ·          மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் சார்பில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க தீர்மானம்.          வேலூர் மாவட்டம் , பொய்கையில் தனியார் திருமண மண்டபத்தில் காட்பாடி , அணைக்கட்டு, வேலூர், குடியாத்தம் , கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் பொதுகுழு கூட்டம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.       இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி , வன்னியர் சங்க மாநில துணைசெயலாளர் சுரேஷ் , பாமக மாநில துணைதலைவர் என் . டி . சண்முகம் , இளவழகன் , மாவட்ட செயலாளர்கள் ரவி , ஜெகன் மாநில பொறுப்பாளர்கள் ஜானகிராமன் , சக்ரவர்த்தி, கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க தலைவர் புதா அருள்மொழி கலந்து கொண்டு பேசினார். இதில் வரும் மே 11- ம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு...

• தொழிலாளர் தினத்தன்று கிராம சபைக் கூட்டம்.

·         01.05.2025   வியாழக்கிழமை தொழிலாளர் தினத் தன்று வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் . அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து , வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் 01.05.2025 தொழிலாளர் தினத்தன்று காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இக்கிராம சபைக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய   பொருள்கள் விவரம் . பொருள் 1 : கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் பொருள் 2 : இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் . பொருள் 3 : சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் . ...