Posts

• வேலூர் மாநகராட்சி பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

Image
·         வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள், கால்வாய்களில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்   பார்வையிட்டு ஆய்வு. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 2 சத்துவாச்சாரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள், கால்வாய்களில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமான பணி போன்ற பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் சர்க்கார் தோப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணியின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளையும், பாலாற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு கழிவு நீரை கொண்டு செல்லும் கழிவு நீர் குழாய்கள் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலாற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு கழிவு நீர் குழாய்களை கொண்டு செல்வதற்காக மொத்தம் 24 எண்ணிக்கையிலான தூண்கள் அமைக்...

• வேலூர் வி.ஐ.டி பல்கலைகழக தின விழா.

Image
·          வேலூர் வி . ஐ . டி பல்கலைகழக தின விழா மற்றும் ஆண்டு விளையாட்டு விழா.       வேலூர் வி . ஐ . டி பல்கலைகழகத்தில் பல்கலைகழக தின விழா மற்றும் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது .        விழாவிற்கு வி . ஐ . டி வேந்தர் ஜி . விசுவநாதன் தலைமை தாங்கினார் . பதிவாளர் ஜெயபாரதி வரவேற்றார் . துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் ஆண்டறிக்கை வாசித்தார் .       விழாவில் சிறப்பு விருந்தினராக   உச்சநீதிமன்ற நீதிபதி எம் . எம் . சுந்தரேஷ் கலந்து கொண்டு பேசினார் . அப்போது அவர் பேசியதாவது ;         1984- ல் உருவான வி . ஐ . டி . இன்று வளர்ந்து ஆலமரமாக திகழ்கிறது . பல்கலைக்கழகம் 40- வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறது .   ஒரு மனிதரால்தான் இது சாத்தியமானது .   அவர்தான் உங்கள் வேந்தர் விசுவநாதன் . அவருடைய தொலைநோக்குப் பார்வையால் பல மாணவர்களுக்கு கல்வி கிடைக்கிறது . அவர் லயோலா கல்லூரியில் பட...

• வேலூர் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்.

Image
 

• வேலூர் மின் கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்.

Image
  ·          வேலூர் மின் கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்.   ·     200- க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர் . மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .               வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை சுற்று சாலையில் உள்ள மின் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .                  இந்த முகாமில் வேலூர் மின்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின் கட்டணம் , மின்மீட்டர் , குறைந்த மின்னழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் , சேதமான மின்கம்பம் மாற்றுதல் உள்ளிட்ட புகார்களை அளித்தனர்.       இதில் உதவி செயற்பொறியாளர் சிட்டிபாபு , உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றனர்.   ...

• வேலூரில் வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு.

Image
  ·          வேலூரில் வருவாய் கிராம உதவியாளர்   சங்க மாநில செயற்குழு.   ·          காலிப் பணியிடங்கள் நிரப்பவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெனவும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செயற்குழுவில் தீர்மானம்             வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள கோட்டை சுற்று சாலையில் உள்ள காவலர் நல்வாழ்வு மண்டபத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்   உதவியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் திருமலைவாசன் தலைமையில் நடைபெற்றது.       இதில் மாநில துணைதலைவர் ரவி , மாநில பொதுசெயலாளர் எஸ் . ரவி , பொருளாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோரும் திரளான கிராம வருவாய் ஊழியர்களும் பங்கேற்றனர்.       இந்த மாநில செயற்குழுவில் காலிப் பணியிடங்களை நிரப்பிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்...

• தட்டச்சர் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கல்.

Image
·          தட்டச்சர் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கல்.         வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி IV தேர்வில் தேர்ச்சி பெற்று தட்டச்சர் பணி தேர்வு செய்த இரண்டு நபர்களுக்கு பணி ஒதுக்கீட்டு ஆணையை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே . இரா . சுப்புலெட்சுமி வழங்கினார் .