Posts

பொய்கையில் வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் எம்.எல்.ஏ.,க்கள்

Image
 பொய்கையில் வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு   வேலூர், செப்.16-   வேலூர் அடுத்த பொய்கையில் வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா, கிருஷ்ணர் ராதை சிலை திறப்பு விழா  நடந்தது. விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி தணிகாசலம் தலைமை தாங்கினார். ரஞ்சன் மஹால் உரிமையாளர் ரஞ்சன், ஜெயசித்ரா, டாக்டர் பிரேமிரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   வலம்புரி விநாயகருக்கு வேத மந்திரங்கள் முழங்க ஈஸ்வரன் கோயில் குருக்கள் ராமச்சந்திரன் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.   விழாவில் கவிஞர் ச.லக்குமிபதி கலந்துகொண்டு விநாயகர், கிருஷ்ணர் பெருமைகளை பற்றி பேசினார்.   விழாவில் வனதுர்கை அம்மா, வராகிதாசன், எம்.எல்.ஏ.,க்கள் ஏ.பி. நந்தகுமார், ப. கார்த்திகேயன், முன்னாள் மத்திய மந்திரி என்.டி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ., இளவழகன், வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் த.வேலழகன், தி.மு.க ஒன்றிய செயலாளர் குமாரபாண்டியன், வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் துணைத் தலைவர் ஜனார்த்தனன், பஸ் உரிமைய...

பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல்

Image
         பி . டி . லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் சங்கத்தின் தொடக்க விழா ·   மின் மின்னணுவியல் மற்றும் அதன் பயன்பாடு குறித்த கருத்தரங்கு     காஞ்சிபுரம் மாவட்டம் அரக்கோணம் பிரதான சாலையில் ஊவேரி சத்திரம் அருகே பி . டி . லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அமைந்துள்ளது .   இக்கல்லூரியில் அறக்கட்டளையின் தலைவரும் முன்னாள் நீதியரசருமான பொன் . கலையரசன் அவர்களின் சீரிய தலைமையில் அரங்காவலர்கள் முன்னால் மாவட்ட ஆட்சியர் வி . சந்திரசேகரன் , முன்னாள் மாவட்ட நீதிபதி . எஸ் . சாத்த பிள்ளை , மருத்துவர் ஆர் . கண்ணையன் , திருமதி எஸ் . ரேணுகா , பொறியாளர் எச் . வெங்கடேஷ் , முனைவர் பி . அரிஸ்டாட்டில் , திரு எம் . ராஜேந்திரன் மற்றும் . எம் . என் . விஜயசுந்தரம் ஆகியோரின் சிறப்பான ஒத்துழைப்பினாலும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றது .   கல்லூரி இயக்குனர் டாக்டர் எம் . அருளரசு அவர்களின் நெறியாள்கையில்...

• புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய்.

Image
·         ரூ. 2.50   கோடி மதிப்பீட்டில் குடியாத்தம் மற்றும் கீ. வ. குப்பம் வட்டத்தில்   தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாயை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு   நீர்வள துறை அமைச்சர் அர்ப்பணித்தார்.   ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் குடியாத்தம் மற்றும் கீ. வ. குப்பம் வட்டத்தில்   தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாயை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் கீ.வ குப்பம் ஊராட்சி ஒன்றியம் கீழ்முட்டுக்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர்ப்பணித்தார். தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் விவரம் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் கீ.வ குப்பம் வட்டத்தில் உள்ள மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் தொலைக்கல் 0 மீ முதல் 31840 மீட்டர் வரை தூர்வாரி புனரமைக்கும் பணிக்கு நபார்டு நிதி உதவியின் கீழ் ரூ. 2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.                  மோர்தானா அணையின் இடதுபுற கால்...

• குடியாத்தம் பகுதியில் தேசிய கைத்தறி தினவிழா.

·         வேலூர் மாவட்ட   நிர்வாகம் மற்றும் கைத்தறித் துறை இணைந்து நடத்தும்  11- வது தேசிய கைத்தறி தினவிழா குடியாத்தம் பகுதியில் உள்ள பத்மசாலிய பஹுத்துவ திருமண மண்டபத்தில் 07.08.20 25 அன்று நடைபெ ற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். 1905- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7- ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது .   தமிழ்நாட்டில் 11 வது தேசிய கைத்தறி நாளினை 07.08.2025 அன்று கைத்தறி தொழிலினை போற்றும் வகையிலும் , கைத்தறி நெசவாளர்களின் பங்கினை கௌரவிக்கும் வகையிலும் கொண்டாடப்படவுள்ளது . இதன்படி வேலூர் மாவட்டத்தில் , மாவட்ட நிர்வாகம் மற்றும் கைத்தறி துறை இணைந்து நடத்தும...