• வேலூர் கம்பன் கழகம் கண்ணதாசன் பிறந்த நாள் விழா.

· மொழி பிரச்சனை பற்றியும் கண்ணதாசன் அன்றைக்கே எழுதியுள்ளார் - விஐடி வேந்தர் ஜி விஸ்வநாதன் பேச்சு : வேலூர் கம்பன் கழகம் சார்பில் கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது . கம்பன் கழக தலைவர் கோ . வி செல்வம் தலைமையில் பெற்ற இவ்விழாவில் , பல்வேறு கவிஞர்கள் எழுத்தாளர்கள் , தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வேலூர் விஐடி பல்கலை கழக வேந்தர் ஜி . விஸ்வநாதன் , திரைப்படத் துறை கவிதைகளில் இன்னும் கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 25 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . திரைப்படங்களுக்கு எழுதி இருக்கிறார் . தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார் . அவருடைய படங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் . கவிதை நூல்கள் வந்திருக்கின்றன . காப்பியங்கள் 10 எழுதப்பட்டிருக்கின்றன. சிற்றிலக்கியங்கள் ஒன்பது வந்திருக்கின்றன . கவிதை நாடகமாக...