• சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

·        சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

                 சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

1.                 விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை

2.             இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை

3.             ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை

4.             கல்வி உதவித்தொகை

5.             திருமண உதவித்தொகை

6.             மகப்பேறு உதவித்தொகை

7.              மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்

8.             முதியோர் ஓய்வூதியம்

மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1. சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள்,  2. 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள் 3. அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பனராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.

                மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி கீழ்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

www.dncwb.tn.gov.in

மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

 

Comments