• வேலூர் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்.
·
வேலூர் மாவட்டத்தில்
08.03.2025
இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது
– மாவட்டஆட்சித் தலைவர்.
பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள கிராமங்களில் 08.03.2025 இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகத் திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரிவித்து தீர்வு காணலாம்.
வ.எண் |
நாள் |
வட்டம் |
உள்வட்டம் |
கிராமம் |
1. |
08.03.2025 |
வேலூர் |
பென்னாத்தூர் |
சோழவரம் |
2. |
08.03.2025 |
அணைக்கட்டு |
அணைக்கட்டு |
|
3. |
08.03.2025 |
காட்பாடி |
திருவலம் |
கண்டிப்பேடு |
4. |
08.03.2025 |
குடியாத்தம் |
வளத்தூர் |
செம்பேடு |
5. |
08.03.2025 |
கீ.வ.குப்பம் |
வடுகந்தாங்கல் |
முடினாம்பட்டு |
6. |
08.03.2025 |
பேர்ணாம்பட்டு |
பேர்ணாம்பட்டு |
அரவட்லா |
எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட கிராமங்களில் நடைபெறும் சிறப்பு குறை தீர்வு முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் ஒளி நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment