• வேலூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாராத்தான் ஓட்டம்.
· வேலூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மாணவிகள் மற்றும் மகளிர் பங்கேற்ற மாராத்தான் ஓட்டம் - மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூரில் காவல் துறை சார்பில் கிரீன் சர்க்கிள் அருகிலிருந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் திரளான கல்லூரி மாணவிகளும், பெண் காவலர்களும் மற்றும் மகளிர்களும் பங்கேற்று புதிய பேருந்து நிலையம் கிரீன் சர்க்கிளிலிருந்து - காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் வரையில் 5 கிலோமீட்டர் தூரம் ஓடி இந்த ஓட்டமானது நிறைவடைந்தது.
Comments
Post a Comment