• வேலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்.
· வேலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்.
வேலூர் மாவட்டத்தில் நடப்பு கொள்முதல் 2024-2025 குருவை மற்றும் சம்பா பருவங்களில் தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று கீழ்க்கண்ட 10 கிராமங்களில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய ஆவணங்கள் பட்டா நகல் மற்றும் கணினி சிட்டா நகல் (10/1) கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று பெற்று e-DPC மென்பொருள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் நிலைய பணியாளர்கள் பதிவு செய்து விவசாயிகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பெருவிரல் கைரேகை பதிவுடன் (Bio Metric) நெல்லை விற்பனை செய்துள்ளார்கள்.
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு குருவை பருவத்தில் 36.440 மெ.டன் மற்றும் சம்பா பருவத்தில் 3001.160 மெ.டன் ஆக மொத்தம் 3037.600 மெ.டன் நெல் 803 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு 7 கோடியே 30 இலட்சத்து 38 ஆயிரத்து 826 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கின் மூலம் தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். கொள்முதல் செய்யப்பட்ட நெல் முழுவதும் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், 2025-2026-ம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் 2187 ஹெக்டெர் பரப்பளவில் சுமார் 7684 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment