Posts

• தாட்கோ CAD, CAM பயிற்சிகள்.

·         தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ( தாட்கோ ) மற்றும்   தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான Computer-Aided Design ( CAD), Computer-Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற   பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது - இப் பயிற்சியில் சேர   விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                     தமிழ்நாடு ஆதிதிராவிடர்   வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ )     மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன்  அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது . அதன் அடிப்படையில் தாட்கோ ,    மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின  இளைஞர்களுக்கு Computer-Aided Design ( CAD), Computer-Aided Manufacturing   (CAM) Course...

• வீர தீர செயல்களுக்கான Jeevan Raksha Padak Series of Awards.

·         வீர தீர செயல்களுக்கான Jeevan Raksha Padak Series of Awards. வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் Jeevan Raksha Padak Series of Awards – 2026-க்கான விருதுகள் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட உ ள்ளன. இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.gov.in என்ற வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 31.08.2026-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் வலைதளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்துள்ளார்.

• வேலூர் மாற்று திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் மாநில விருது.

·         வேலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகளை பெற விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் 25.06.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                 மாற்று திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து , தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்க ளால் மாநில விருது வழங்கி கௌரவிக்கப்ப டவுள்ளது. தமி ழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாற்று திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் , மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு , கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்ட் 2026 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன . வ . எண் விருதின் வகை விருது விவரம...

• குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை.

·         குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் உதவி மையம் - 1098 க்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு ஆற்றுப்படுத்துநர் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் ஆகிய இரண்டு பதவி களு க்கு வேலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் குழந்தைகள் உதவி மையம் - 1098 க்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு ஆற்றுப்படுத்துநர் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் ஆகிய இரண்டு பதவி களு க்கு வேலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 1.    குழந்தை உதவி மைய ஆற்றுப்படுத்துநர் ( Child Helpline Counsellor) ·       Graduate   in   Social Work / Sociology / Psychology / Public Health /Counselling from a recognized unive...

• வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

Image
·         அங்கான்வாடி மையம், மேல்நிலை பள்ளி மற்றும் தாயுமானவர் திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்பதை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                   வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அங்கான்வாடி மையம், மேல்நிலை பள்ளி மற்றும் தாயுமானவர் திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்பதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் மாநகராட்சி, டிட்டர்லைன் பகுதியில் உள்ள மாநகராட்சி உருது தொடக்க பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.   மேலும் குழந்தைகளின்   எண்ணிக்கை, குழந்தைகளின் உடல் எடை போன்ற விவரங்கள் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். தொடர...

• வேலூர் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு.

Image
·          வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களை அனைத்து கட்சியினர் முன்னிலையில் திறந்து ஆட்சியர் ஆய்வு .          வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையத்தின் கிடங்கு உள்ளது தற்போது இக்கிடங்கில் வேலூர் , அனைக்கட்டு , காட்பாடி , கே.வி.குப்பம் , குடியாத்தம் , ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள் எண்ணப்பட்டு இக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.              இதேபோன்று கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்களும் இங்கு தான் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் முன்னிலையில் அனைத்து கட்சியினர் திமுக , அதிமுக , காங்கிரஸ் , பாஜக , தேமுதிக , பகுஜன்சமாஜ் கட்சி , உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட கிடங்குகளை திறந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.      

• வேலூர் TNPSC கட்டணமில்லா பயிற்சி வகுப்பு.

·          வேலூர் TNPSC கட்டணமில்லா பயிற்சி வகுப் பு. ·          வேலூர் மாவட்டத்தை சார்ந்த படித்த இளைஞர்கள் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி - 1 தேர்வுக் கு வேலைவாய்ப்பு மற்றும்   பயிற்சி துறையால் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் அதிக அளவில் கலந்து கொண்டு   தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு   வேலையை பெற்று பயனடையுமாறு   மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் . வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் வேலூர் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNSURB, TRB, SSC, RRB மற்றும் IBPS போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.   தற்போது ,   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி –I தேர்விற்கான   அறிவிப்பு 23.06.2026 அன்று   வெளியிடப்படவுள்ளது ...