• வேலூர், விருதம்பட்டில் புதிய ஆதார் சேவை மையம்.
· வேலூர், விருதம்பட்டில் புதிய ஆதார் சேவை மைய ம் - மாவட்ட ஆட்சி தலைவர் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி, விருதம்பட்டில் புதிய ஆதார் சேவை மையத்தை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி திறந்து வைத்தார். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), வேலூர் நகரில் குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட ஆதார் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாக, வேலூர் விருதம்பட்டில் புதிய UIDAI ஆதார் சேவை மையத்தை (ASK) தொடங்கி உள்ளது. இந்த ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவு, மக்கள் தொகை விவரங்கள் மற்றும் உயிர்வள (Biometric) தகவல் புதுப்பித்தல், பிழை திருத்தம், குறைதீர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதார் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இந்த மையம் அரசு பொது விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அதிக வசதியும் மேம்பட்ட சேவை அனுபவமும் கிடைக்கும். மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்து, அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். மேலும...