Posts

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

Image
பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில்,                                    அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி                          காஞ்சிபுரம், ஊவேரியில் செயல்படும் பி.டிலீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 1300-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதிமற்றும் காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.                                      தென்னிந்தியாவின் முதல் தொழில்கல்வி நிறுவனத்தை தொடங்கிய பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை, சென்னை வேப்பேரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, இவ்வறக்கட்டளையின் ந...

வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியில் மனித நேயமும் சேவை மனப்பான்மையும் கருத்தரங்கம்

Image
 வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியில் மனித நேயமும் சேவை மனப்பான்மையும் கருத்தரங்கம்                         வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் அமைப்பும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து மனித நேயமும் சேவை மனப்பான்மையும் கருத்தரங்கம் இன்று 26.11.2025 கல்லூரியின் அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரியின் முதல்வர் எ.ஆரோக்கிய ஜெயசீலி தலைமை தாங்கினார்.  நிகழ்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் அமலா வளர்மதி முன்னிலை வகித்தார். பேராசிரியர் வி.கங்கா வரவேற்று பேசினார்.                  சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியரும் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் பங்கேற்று யூத் ரெட்கிராஸ் கையேட்டினை வழங்கி மனிதநேயமும் சேவை மனப்பான்மையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.                உலகில் வாழக்கூடிய முகம் தெரியாத நபர்கள் நம்மை பார்த்த...

34வது வடக்கு மண்டல அறிவியல்மாநாடு 56 இளம் விஞ்ஞானிகள் தேர்வு

Image
34வது வடக்கு மண்டல அறிவியல் மாநாடு      56 இளம் விஞ்ஞானிகள் தேர்வு              தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இராணிப்பேட்டை மாவட்டக் கிளையின் சார்பாக வடக்கு மண்டல அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு இன்று இராணிப்பேட்டை மாவட்டம் அன்னை மிரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இம் மாநாட்டில் 56 இளம் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான மாநாட்டிற்கு தகுதி பெற்றனர்.       துவக்க விழாவிற்கு மாவட்டத் தலைவர் அ.கலைநேசன் தலைமை தாங்கினார்.  வடக்கு மண்டல மாவட்ட செயலாளர்கள் வேலூர் செ.நா.ஜனார்த்தனன், திருவண்ணாமலை எ.மோகன், வடசென்னை மலைச்செல்வி காஞ்சிபுரம் செல்லபாண்டி, திருவள்ளுர் எஸ்.குமார், அன்னை மிரா பொறியியற் கல்லூரியின் நிறுவனர் எஸ்.ராமதாஸ், செயலர் ஜி.தாமோதரன், முதல்வர் டி.கே.கோபிநாதன், விரவுரையாளர் ஏ.மணிகண்டன்                                      , ஆகியோர் முன்னிலைவகித்தனர்.     மாநில செயற்குழு உறுப...

நீடித்த நீர் மேலாண்மை 34வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் வேலூர் மாவட்ட இளம் விஞ்ஞானிகளாக 14 மாணவ மாணவிகள் தேர்வு

Image
நீடித்த நீர் மேலாண்மை   34 வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் வேலூர் மாவட்ட இளம் விஞ்ஞானிகளாக 14 மாணவ மாணவிகள் தேர்வு                  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , இந்திய கணித அறிவியல் நிறுவனம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து   நீடித்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் 34 வது குழந்தைகள் அறிவியல் மாநாடு இன்று 20.11.2025 காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது .   இந்த மாநாட்டில் 7 ஆய்வு கட்டுரைகளும் வேலூர் மாவட்ட இளம் விஞ்ஞானிகளாக 14 மாணவ மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .                 முதுநிலை பிரிவில் ஊசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் கே . தீபா , டி . சங்கரி , காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் எஸ் . தினேஷ் , பி . தீரஜ் , பேர்ணாம்பட்டு நுசரத்துல் இஸ்லாம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆலியா நுசுபா பர்தாஸ் , சி . நசி...

வாசகர்கள் விரும்பி படித்து மகிழ்வது இதழ்களையா?, நூல்களையா சிறப்பு பட்டிமன்றம்

Image
  ·          வேலூர் மாவட்ட   நூலகத்தில் 58 வது தேசிய நூலக வார விழா ·          நூலகத்திற்கு வரும் வாசகர்கள் விரும்பி படித்து மகிழ்வது இதழ்களையா ?, நூல்களையா சிறப்பு   பட்டிமன்றம் ·          நூலக தந்தை எஸ் ஆர் ரங்கநாதனின் புத்தகம் படிப்போம் புதிய உலகம் படைப்போம் பொன்மொழியை பின்பற்றுவோம் -   முனைவர்   கவிஞர் ச . லக்குமிபதி     வேலூர் மாவட்ட மைய நூலகத்தில்   58 வது தேசிய நூலக வர விழாவை முன்னிட்டு  சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது . நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட மைய நூலக அலுவலர் ( பொறுப்பு ) கு . இரா . பழனி தலைமை தாங்கினார் . ஓய்வு பெற்ற நூலகர் ஜெ ‌. ரவி முன்னிலை வகித்து பேசினார் . நூலகர் க . கோபாலகிருஷ்ணன் வரவேற்றார் . விழாவில் சிறப்பு விருந்தினராக முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சு . ஸ்ரீதரன் கலந்து கொண்டு பட்டிமன்ற விழாவை தொடங்கி வைத்து...