• பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன்
· வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் ( Pradhan Mantri Shram Yogi Maandhan - PM-SYM) பங்களிப்பு ஓய்வூதிய திட்ட த்தில் தகுதியுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதை எட்டிய பின் மாதந்தோறும் ரூ.3,000/- உறுதியான ஓய்வூதியம் வழங்கும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் சேர்ந்து பயனடையலாம். பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan Mantri Shram Yogi Maandhan – PM-SYM) என்ற திட்டம் 18 முதல் 40 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்திய அரசின் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும். இத்திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால், இந்திய அரச...