Posts

• வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

Image
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.                    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக்கடை, நிக்கல்சன் கால்வாய்,   அம்மா உணவகம் ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.   வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், வேலூர் மாநகராட்சி, கொணவட்டம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். பொதுமக்களிடம் மருத்துவரின் அணுகுமுறை, சிகிச்சை முறை, அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவரிடம் பொதுமக்களின் வருகை விவரம், மருந்துகளின் இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சுகாதார நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை ஆய்வு செய்தார். தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, கொணவட்டம் நியாய விலை கடையை பார்வையிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து, அத்தியாவசிய பொருட்களின் இருப்ப...

• திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள்.

Image
திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாளை முன்னிட்டு கிருபானந்த வாரியார்   திருவுருவ சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் மாலை அணிவித்து , மலர் தூவி மரியாதை. திருமுருக கிருபானந்த வாரியார் 121-வது பிறந்த நா ளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் காட்பாடி வட்டம் , காங்கேயநல்லூர் ஞானத்திருவளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவ சிலைக்கு   மாலை அணிவித்து , அலங்கரிக்கப்பட்ட அன்னாரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார் . இந்நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் , 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.பேச்சிமுத்து, மாவட்ட வழங்...