• டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும்.
· டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும் . தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் ( டாஸ்மாக் ) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள் , மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 01.05.2025 ( வியாழன் ) அன்று மே தினம் என்பதால் , அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது . எனவே , மேற்படி தினத்தில் ( 01.05.2025) வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் , கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபானக் கூடங்கள் (FL1/ FL2/ FL3/ FL3A / FL3AA and FL11) அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் எனவும், அன்றை தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள் ...