Posts

• விபத்தில் மூளை சாவடைந்த ஆந்திர இளைஞர் உடல் உறுப்புகள் தானம்.

Image
  ·          விபத்தில் மூளை சாவடைந்த ஆந்திர இளைஞ ர் உடல் உறுப்புகள் தானம் .         ராணிப்பேட்டை, சி . எம் . சி . மருத்துவமனையில் கடந்த 26- ம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூர் பொம்மசமுத்திரம் அருகே இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற லிக்கிபிரபாஸ் என்ற 22 வயது இளைஞர் சாலையின் தடுப்புகளில் இரு சக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனையில் சேர்த்தனர்.             இந்நிலையில் லிக்கிபிரபாஸுக்கு மூளை சாவு ஏற்பட்டதையடுத்து அவரின் உறவினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து சிறுநீரகம் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனைக்கும் , ஒரு சிறுநீரகம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும் , கல்லீரல் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனைக்கும் , கண்கள் வேலூர் சி . எம் . சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.  

• வேலூர் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்.

Image
 ·         வேலூர் தென்மேற்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் - அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது. தமி ழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை – 2026 பருவகாலமானது எதிர்வரும் 26.05.2026 அன்று தொடங்கப்பட உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது . சென்ற 2025- ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் வேலூர் மாவட்டத்தில் 579.8 மி . மீ மழை பெய்துள்ளது . இது இயல்பைவிட 34% கூடுதலாக மழை பொழிந்துள்ளது . கடந்த 2025- ம் ஆண்டில் பெய்த மழையினை கணக்கில் கொண்டு வேலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறியப்பட வேண்டும் . (Vulnerable Areas) . கடந்த...