• விபத்தில் மூளை சாவடைந்த ஆந்திர இளைஞர் உடல் உறுப்புகள் தானம்.
· விபத்தில்மூளை சாவடைந்தஆந்திரஇளைஞர்உடல்உறுப்புகள்தானம்.
ராணிப்பேட்டை, சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த 26-ம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூர் பொம்மசமுத்திரம் அருகே இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற லிக்கிபிரபாஸ் என்ற 22 வயது இளைஞர் சாலையின் தடுப்புகளில் இரு சக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் லிக்கிபிரபாஸுக்கு மூளை சாவு ஏற்பட்டதையடுத்து அவரின் உறவினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து சிறுநீரகம் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், கல்லீரல் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

Comments
Post a Comment