• தெலுங்கு வருட பிறப்பு.
· தெலுங்கு வருட பிறப்பு.
· வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தான மையம் மற்றும் ஜலகண்டீஸ்வரர் ஆலயங்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள்
· நவதானியங்களால் மகாவிஷ்ணு கோலம் வரையப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம்.
வேலூர் மாவட்டம், வேலூர் பகுதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் அமைந்துள்ள பெருமாள் சன்னதியில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள், வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனைகள் நடைபெற்றது. மேலும் நவதானியங்கள், காய்கறிகளை கொண்டும், மகாவிஷ்ணு உருவம் கோலமாக வரையப்பட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள வெங்கடேச பெருமாள் சன்னைதியில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Comments
Post a Comment