Posts

Showing posts from April, 2025

• தொழிலாளர் தினத்தன்று கிராம சபைக் கூட்டம்.

·         01.05.2025   வியாழக்கிழமை தொழிலாளர் தினத் தன்று வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் . அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து , வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் 01.05.2025 தொழிலாளர் தினத்தன்று காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இக்கிராம சபைக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய   பொருள்கள் விவரம் . பொருள் 1 : கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் பொருள் 2 : இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் . பொருள் 3 : சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் . ...

• டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும்.

Image
·         டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும் . தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் ( டாஸ்மாக் ) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள் , மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 01.05.2025 ( வியாழன் ) அன்று மே தினம் என்பதால் , அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது . எனவே , மேற்படி தினத்தில் ( 01.05.2025) வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் , கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபானக் கூடங்கள் (FL1/ FL2/ FL3/ FL3A / FL3AA and FL11) அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் எனவும், அன்றை தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள் ...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
·         வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் 537   கோரிக்கை மனுக்களை பெற்றார்.                 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி   தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை த் தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித் தொகை வேளாண்மைத் துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சித் துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சித் துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சாரத்துறை சார்பான குறைகள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை . மருத்துவத்துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர்வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 537 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அ...

• கோயில் திருவிழாக்கள் - அனைத்து துறை அலுவலர் ஆலோசனை கூட்டம்.

Image
·         குடியாத்தம் அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு திருவிழா, அருள்மிகு ஸ்ரீ பொற்கொடியம்மன் திருக்கோயில் புஷ்பரத ஏரித் திருவிழா மற்றும் அருள்மிகு ஸ்ரீ பாலசார்தூலீஸ்வரர் திருக்கோயில் கருப்புலீஸ்வரர் திருத்தேர் உற்சவம் – ·         கோயில் திருவிழாக்களை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் , கோபாலபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு திருவிழா, அணைக்கட்டு வட்டம், வல்லண்டராமம் கிராமத்தில்   அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொற்கொடியம்மன் திருக்கோயில் புஷ்பரத ஏரித் திருவிழா மற்றும் குடியாத்தம் நகரம் , நெல்லூர்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசார்தூலீஸ்வரர் திருக்கோயில் கருப்புலீஸ்வரர் திருத்தேர் உற்சவம் ஆகிய திருவிழாக்களை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட...