• தொழிலாளர் தினத்தன்று கிராம சபைக் கூட்டம்.
· 01.05.2025 வியாழக்கிழமை தொழிலாளர் தினத் தன்று வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் . அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து , வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் 01.05.2025 தொழிலாளர் தினத்தன்று காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இக்கிராம சபைக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம் . பொருள் 1 : கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் பொருள் 2 : இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் . பொருள் 3 : சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் . ...