• குடியாத்தம் ஒன்றிய வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்.

·        குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் 15-வது மத்திய நிதி குழு மானியத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ல் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், கலைஞர் கனவு இல்லம், பிரதம மந்திரியின்  அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், தூய்மை பாரத இயக்கம்,  முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், ஊரகப் பகுதிகளில் வீடுகளை பழுது பார்க்கும் பணி போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஊராட்சி வாரியாக தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    2022-2023 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை வருகின்ற ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். 2023-2024 பொது நிதியின்கீழ் நடைபெற்று வரும் 16 திட்டப்பணிகள் வருகின்ற ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள்  முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

2024-2025 பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் 21 வீடுகளை பேஸ்மெண்ட் லெவல் வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார். மேலும் Lintel level கொண்டு செல்ல வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அடுத்த 3 மாதங்களுக்கு கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இக்கூட்டத்தில்  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி செயற்பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.