• காட்பாடியில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
· காட்பாடியில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் கோரிக்கை அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.
ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தாங்கினார்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க செயலாளர் ஜி.டி.பாபு, வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட வி.திருக்குமரன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் கே.தனசேகர், தலைமை நிலைய செயலாளர் ரகுராமன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் காட்பாடி வட்டார செயலாளர் ஜி.தெய்வசிகாமணி, மாவட்ட துணை செயலாளர் ஹரிபாபு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் குமரவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்று, பழைய ஒய்வூதிய திட்டத்தினை உடனடியாக நடைமுறைபடுத்து, ஊதிய முரண்பாடுகளை களைந்திடுக, நிறைவேற்ற மறுப்பாயானால் போராட்டங்கள் தீவிராமாகும் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முடிவில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மகளிர் செயலாளர் சிவகாமி நன்றி கூறினார்.
Comments
Post a Comment