• கிருஷ்ணசாமி பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி.
· வேலூர் கிருஷ்ணசாமி பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி.
வேலூர், கிருஷ்ணசாமி முதலியார் சீனியர் செகண்டரி பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் த.சிவக்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை மைண்ட் பிரெஷ் பயிற்சி மையத்தின் நிர்வாகி கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்கள் எவ்வாறு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், வாழ்க்கையில் உயர்வதற்கான வழிமுறைகள், பெற்றோர்கள், பெரியோர்களை மதிக்கும் பண்புகள் குறித்து பேசினார்.
இதில் பள்ளி முதல்வர் ஆர்.ஜி.சுஜாதா, மேலாளர் துர்காதேவி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment