• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி.

· வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரருக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் - 1008 சங்காபிஷேகம் - திரளானோர் வழிபாடு. வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர், அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்குகளில் புனித நீரை நிரப்பி சங்குகளை யாக சாலையில் வைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து மஹா பூர்னாஹதிக்கு பின்னர் 1008 சங்குகளும் கொண்டு செல்லப்பட்டு ஜலகண்டீஸ்வரருக்கு பால், தயிர் , உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்களை செய்து பின்னர் 1,008 சங்குகளில் உள்ள நீரை கொண்டு சங்காபிஷேகம் செய்து ஜலகண்டீஸ்வரருக்கு தங்கக்கவசம் அணிவித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.