Posts

• திங்கள் தின குறை தீர்வு முகாம்கள் நடைபெறாது.

·         தமிழ்நாடு சட்டமன்ற     பொதுத்தேர்தல் 2026   தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை திங்கள் தின குறை தீர்வு நாள் (GDP) முகாம்கள் மற்றும் இதர   கூட்டங்கள் நடைபெறாது - வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .        இந்திய தேர்தல் ஆணையத்தால் 5 மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 23.04. 2026 ( வியாழக்கிழமை ) அன்று நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது . எனவே தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நடத்தை விதிகள் 15.03.2026 முதல் அமலுக்கு வருவதால் , வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மற்றும் மனு நீதி நாள் முகாம்கள் , இந்திய சுதந்திர போரட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுகள் குறைதீர்வு கூட்டம் , மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர்வு கூட்டம் மற்றும் ஏனைய அ...

• அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதி ஆலோசனை கூட்டம்.

Image
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிக ளுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலும், தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் முன்னிலையி ல் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பொது த் தேர்தல் 2026 முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிக ளுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையிலும், தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.                 இக்கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர், செலவின பார்வையாளர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026   தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமெனவும், தேர்தல் தொடர்பான புகார்களை ச...

• ஆந்திர மாநில எல்லை கிறிஸ்டியன் பேட்டை சோதனை சாவடி ஆய்வு.

Image
 ·         தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் /   மாவட்ட ஆட்சி தலைவர் ஆந்திர மாநில எல்லையான காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை காவல் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு . தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆவணங்க ளி ன்றி ரூ . 50 000/- கு மேல் ரொக்கமாக வோ அல்லது ரூ . 10000/- கு மேல் பரிசு பொருட்க ள், சட்டத்திற்கு புறம்பாக கொண்டு வரப்படும் மதுபானங்கள் மற்றும் இதர போதை வஸ்துக்கள் ஆகியவற்றை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாகன சோதனைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் வேலூர் மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் வேலூர் மாவட்டத்தில் அண்டை மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள 6 காவல் சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆந்த...

• வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி - விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்.

Image
·         வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்.     வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் விஐடி பல்கலைகழகம் சுகாதார துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள புரிந்துணர்வு   ஒப்பந்தம்   மேற்கொண்டுள்ளன .       வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் வேலூர்   கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாலமன்சதீஷ்குமார் மற்றும் விஐடி பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர்   கையெழுத்திட்டனர் .     தொடர்ந்து விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன .       இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் விஐடி பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து , சுகாதார துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க இணைந்து செயல்பட முடியும் .       மேலும் பேராசிர...