Posts

• டாம்கோ சிறுபான்மையின மக்களுக்கு கடன் திட்டங்கள் .

·         தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள் .          தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு விராசாத் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.                 இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம்-1-ல் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.8,00,000/- வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.   (தி...

• வேலூர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது

·         வேலூர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 2026 பெற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெற மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.   சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ”ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத் தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2026ம் ஆண்டிற்கான “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” எதிர்வரும் 15.08.2026 அன்று நடைபெறும் சுகந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 1.                  15 வயது முதுல் 35 வயது வரையுள்ள ஆண் / பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2025 (01.04.2025) அன்று 15 வயது   நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31,   ...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
·         வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 601      கோரிக்கை மனுக்களை பெற்றார்.         வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 601 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந...

• இரங்காபுரம் நுண் உரம் செயலாக்கம் மையம்.

Image
·         இரங்காபுரம் நுண் உரம்   செயலாக்கம் மையம் - மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு. வேலூர் மாநகராட்சி, மண்டலம் 2, வார்டு 22, இரங்காபுரத்தில் உள்ள நுண் உரம் செயலாக்க மையத்தை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது ரங்காபுரம் நிலையத்தில் தினசரி சுமார் 3 டன் நகராட்சி திடக்கழிவுகள் ( MSW)* இத்தொழில்நுட்பத்தின் மூலம் உரமாக மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. மக்கும்   குப்பைகளை   BSFL லார்வாக்களின் உதவியுடன் உயிரியல் முறையில் அதிக மதிப்புள்ள உயிரி உரம் மற்றும் கால்நடை/மீன் தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களாக மாற்றும் இந்த தொழில்நுட்பம் , பாரம்பரிய குப்பை மேடு மற்றும் திறந்த கம்போஸ்டிங் முறைகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் *கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திறன் கொண்டதாகும்*. மேலும் , தற்போது செயல்பட்டு வரும் அமைப்பை " Pile-Up" முறை மூலம் மேம்படுத்துவதன் மூலம் , அதே கட்டமைப்பில் கூடுதலாக * 50 முதல் 70 சதவீதம் வரை கழிவு சிகிச்சை திறனை அதிகரிக்க முடியும்* இந்த BSFL தொழில்நுட்பத்தின் முக...

• பள்ளி வாசல் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் மானியம்

·         வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு   இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000/-லிருந்து   ரூ.50,000/- ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும்.                 இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இரு சக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50% அல்லது வ...

• வேலுார் மாவட்ட சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.

வேலுார் மாவட்டத்தில்     காலியாக உள்ள 19 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் 13.06.2026 ஆம் தேதிக்குள்       விண்ணப்பித்து பயனடையுமாறு   மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு 50 சுய உதவிக்குழுக்களுக்கு ஒரு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (கடன் மற்றும் வங்கி சேவைகள்) தேர்வு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 05.05.2026 அன்றுள்ளவாறு மதிகளம் (இணைய தளத்தில்) உள்ள பதிவுகளின்படி, 114   சமுதாய   வங்கி   ஒருங்கிணைப்பாளர்கள்   மட்டுமே   பணியில்   உள்ளனர். வேலுார் மாவட்டத்தில் தற்பொழுது காலியாக உள்ள 19 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ள விவரம்   பின்வருமாறு.   வ.எண் ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை 1 அணைக்கட்டு 3 ...