• பல்வேறு துறைகளில் வீரத்துடனும், துணிச்சலுடனும் சாதனை செயல்கள் புரிந்த பெண்கள் 2022-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித் தலைவர்.

 


                        தமிழக     அரசிரன்     சார்பில்    பல்வேறு    துறைகளில்    மற்றும்      சமூகத்தில்   வீரத்துடனும்.     துணிச்சலுடனும்     சாதனை        செயல்கள்      புரிந்த       பெண்களுக்கு     "கல்பனா சாவ்லா"      விருது     வழங்கி சிறப்பித்து   வருகிறது.    அதன்படி   2022-ஆம்     ஆண்டிற்கான     கல்பனா     சாவ்லா     விருதிற்கான       விண்ணப்பங்கள    வரவேற்கப்படுகின்றன.   2022-ம்      ஆண்டிற்கான      "கல்பனா சாவ்லா   விருதிற்கான    விண்ணப்பம் "    எனக்      குறிப்பிட்டு      விண்ணப்பத்தினை            அனுப்ப  வேண்டும்.

                மேற்கண்ட    விருதிற்கான     விவரங்களை      http://awards.tn.gov.in      என்ற    இணையதளத்தின்     வாயிலாகவும், மேலும்     பூர்த்தி      செய்த    விண்ணப்பங்களை     அசலாக    தபால்     வாயிலாக     உறுப்பினர்     செயலர்,  தமிழ்நாடு      விளையாட்டு     மேம்பாட்டு     ஆணையம்,     நேரு     விளையாட்டரங்கம்,    பெரியமேடு.    சென்னை -   03   என்ற    முகவரிக்கு     வருகின்ற     28.06.2023  -க்குள்     வந்து    சேரும்படி    அனுப்பி     வைக்க வேண்டும். மேலும்      கூடுதல்      விவரங்களுக்கு      மாவட்ட     விளையாட்டு     மற்றும்    இளைஞர்    நலன்     அலுவலர் அவர்களை    7401703483      என்ற      தொலைபேசி     எண்ணில்     தொடர்பு       கொள்ளலாம்   என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.  

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.