Posts

Showing posts from March, 2025

• வேலூர் அரசு அருங்காட்சியகத்தை மரு.மணிவாசன் பார்வையிட்டு ஆய்வு.

Image
·          வேலூர் அரசு அருங்காட்சியகத்தை   தமிழ்நாடு அரசின் சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் மரு. மணிவாசன் பார்வையிட்டு ஆய்வு.                   வேலூர் கோட்டையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை தமிழ்நாடு அரசின்   சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் மரு. மணிவாசன்   பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                   வேலூர் கோட்டை வளாகத்தில் தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகம் 1985-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் கலை, தொல்லியல், மானுடவியல், புவியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் சார்ந்த வரலாற்று விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் 16 அடி உயரமுள்ள டைனோசர் மாதிரியும், 18-ஆம் நூற்றாண்டை சார்ந்த 2 பீரங்கிகளு...

• வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்.

Image
  ·          வேலூர் மாவட்ட தி . மு . க . சார்பில் பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம் - அமைச்சர் துரைமுருகன் மரியாதை.       வேலூர் மாவட்ட தி . மு . க சார்பில் முன்னாள் பொதுசெயலாளர் பேராசிரியர் அன்பழகன் 5- ம் ஆண்டு நினைவு தினம் வேலூர் மாவட்ட அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது . நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ . பி . நந்தகுமார் , எம் . எல் . ஏ . தலைமை தாங்கினார் .       சிறப்பு அழைப்பாளராக தி . மு . க . பொதுசெயலாளரும் , நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பேராசிரியர் அன்பழகன் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .            இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் , எம் . எல் . ஏ ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு . பாபு , முன்னாள் எம் . எல் . ஏ . சி . ஞானசேகரன் , பகுதி செயலாளர்கள் தங்கதுரை , பாலமுரளிகிருஷ்ணா , முருகப்பெருமான் , வக...

• வேலூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் பணி ஆய்வுக் கூட்டம்.

Image
  ·         வேலூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் பணி, வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர சலுகைகள் குறித்த ஆய்வு க் கூட்டம் - மாண்புமிகு தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன், தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன், தலைமையில் வேலூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் பணி, வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர சலுகைகள் குறித்த ஆய்வு க் கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்ததாவது.   அனைத்து துறைகள் சார்ந்த தூய்மை பணியாளர்க ளிடம் அவர்கள் பெரும் ஊதியம் பற்றி விசாரிக்கப்பட்டது . அவ்வாறு விசாரணை செய்யும்போது அவர்கள் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதினால் கடந்த ஆண்டு வேலூர் மாவட்ட ஆட்சி த் தலைவர் அவர்களால் மாற்றி அமைக்கப்பட்ட ஊதியத்தினை அவர்களுக்கு வழங்கவும் , நிலுவையில் உள்ள தொகையினை எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் அவர்களின் கணக்குகளில் ஒப்பந்ததாரர் மூலம் செலுத்தி அவ்வாறு செலுத்தியதற்கான அறிக்கையினை டெ...

• பெண்கள் அனைவரும் பாதுகாப்பு சட்டங்கள் அறிந்திருக்க வேண்டும் .

Image
·          பெண்கள் அனைவரும் பாதுகாப்பு சட்டங்கள் அறிந்திருக்க வேண்டும் .      ·          பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் தீய தொடுதல் குறித்து சொல்லி தருவதை விட உங்கள் யாரும் தொட விட கூடாது என கற்று தாருங்கள்    ·          காட்பாடி வி . ஐடியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானிசுப்புராயன் பேச்சு.              வேலூர் மாவட்டம் , காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் மகளிர் தின விழாவானது பல்கலைகழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்கலைகழக துணைதலைவர்கள் சங்கர் , சேகர் மற்றும் முதன்மை இயக்குநர் சந்தியா பெண்ட்டா ரெட்டி உள்ளிட்டோரும் திரளான மாணவிகளும் மகளிர்களும் பங்கேற்றனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பவானிசுப்புராயன் கலந்து கொண்டு மகளி...

• வேலூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாராத்தான் ஓட்டம்.

Image
·          வேலூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மாணவிகள் மற்றும் மகளிர் பங்கேற்ற மாராத்தான் ஓட்டம் - மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி துவங்கி வைத்தார்.       வேலூர் மாவட்டம் , வேலூரில் காவல் துறை சார்பில் கிரீன் சர்க்கிள் அருகிலிருந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.       இதில் திரளான கல்லூரி மாணவிகளும், பெண் காவலர்களும் மற்றும் மகளிர்களும் பங்கேற்று புதிய பேருந்து நிலையம் கிரீன் சர்க்கிளிலிருந்து - காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் வரையில் 5 கிலோமீட்டர் தூரம்   ஓடி இந்த ஓட்டமானது நிறைவடைந்தது.  

• மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.88.27 கோடி கடனுதவி.

Image
·         உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தை சார்ந்த    817 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.88.27 கோடி மதிப்பிலான நேரடி வங்கி கடனுதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் வழங்கினார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக் கான நேரடி வங்கி கடனுதவிகளை சென்னையில் வழங்கியதை தொடர்ந்து   நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த 817 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.88.27 கோடி மதிப்பிலான நேரடி வங்கி கடனுதவிகளை காட்பாடி வட்டம், ஜாப்ராபேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட   தொழில் மையத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 5 மகளிருக்கு ரூ.16.76 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான 8 கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் மற்றும் ரூ.3,75,000/- பரிசுத் த...