Posts

Showing posts from March, 2025

• வேலூரில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை.

Image
  ·          வேலூரில் ரம்ஜானை முன்னிட்டு ஆர் . என் . பாளையத்தில் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை - 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு .           வேலூர் மாவட்டம் , வேலூர் ஆர் . என் . பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார்கள். ஈகை திருநாளான ரம்ஜானை முன்னிட்டு நோன்பிருந்து ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்       இதேபோன்று காட்பாடி , கொணவட்டம் , சத்துவாச்சாரி, குடியாத்தம் , பேர்ணாம்பட்டு போன்ற இடங்களிலும் மாவட்டத்தில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பங்கேற்றனர். இதில் ஈத்கா மைதான நுழைவாயிலில் வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க கோரி நிதியும் வசூ...

• வேலூர் திமுக மத்திய மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல்.

Image
  ·          வேலூர் திமுக மத்திய மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல்   ·          பொதுமக்களுக்கு பழங்கள், மோர் உள்ளிட்டவைகளை சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வழங்கினார்.                   வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் மத்திய மாவட்ட அலுவலகத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் தலைமையில், அவரது சொந்த செலவில், கோடை வெய்யிலில் செல்லும் பொதுமக்களுக்கு நீர், மோர், மற்றும் தர்பூசணி , பப்பாளி , முலாம்பழம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.         இந்த நீர் மோர் பந்தலை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பொதுமக்களுக்கு வழங்கி துவங்கி வைத்தார். மக்களும் பழங்கள், மோர் ஆகியவைகளை வாங்கி சென்றனர். இதில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்ட திரளான திமுக-வினரும் கலந்து கொ...

• வேலூர் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா

Image
·         வேலூர் 3- வது மாபெரும் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது . வேலூர் கோட்டை மைதானத்தில் வேலூர் மாவட்டத்தின் 3- வது மாபெரும் புத்தக திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது . இவ்விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்ததாவது , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்து நாட்களுக்கு புத்தகத் திருவிழாவினை நடத்த உத்தரவிட்டு , ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் மாபெரும் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறார்கள். நம்முடைய வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டோடு மூன்றாவது ஆண்டாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த புத்தகத் திருவிழாவானது நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது. அந்த இடத்திற்கு சரியான போக்குவரத்து வசதிகள் இல...

• தெலுங்கு வருட பிறப்பு.

Image
·          தெலுங்கு வருட பிறப்பு.      · வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தான மையம் மற்றும் ஜலகண்டீஸ்வரர் ஆலயங்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள்        ·          நவதானியங்களால் மகாவிஷ்ணு கோலம் வரையப்பட்டு   பக்தர்கள் சாமி தரிசனம்.           வேலூர் மாவட்டம் , வேலூர் பகுதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் அமைந்துள்ள பெருமாள் சன்னதியில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள், வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனைகள் நடைபெற்றது. மேலும் நவதானியங்கள், காய்கறிகளை கொண்டும், மகாவிஷ்ணு உருவம் கோலமாக வரையப்பட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.          இதேபோன்று வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள வெங்கடேச பெருமாள் சன்னைதியில் சிறப்பு அபிஷேகங்கள் செய்த...

• ரூ.100 கோடியில் மேல்அரசம்பட்டு அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும்.

Image
·          ரூ . 100 கோடியில் மேல்அரசம்பட்டு அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும்       · பாலாற்றின் குறுக்கே பள்ளிகொண்டாவில் ரூ . 48 கோடியில் புதிய தடுப்பணையை கட்டி ஏரிகளுக்கு நீரை திருப்பும் வகையில் அமைக்கப்படும் - அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேலூரில் பேட்டி.        வேலூர் மாவட்டம் , வேலூரில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,       நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக மத்திய அரசு தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய சுமார் ரூ . 4 ஆயிரம் கோடி பணத்தை உடனடியாக ஏழை மக்களுக்காக வழங்கிட வேண்டும். மேலும் நூறு நாள் வேலைவாய்ப்பு தொழிலாளர்களுக்கு ரூ .17 உயர்த்தியதை வரவேற்கிறேன்.       தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்யகூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும். மாநிலத்தில் இ...

• ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் குழந்தைகள் பட்டமளிப்பு விழா.

Image
·          ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் குழந்தைகள் பட்டமளிப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா.             ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி குளோபல் பள்ளியில் குழந்தைகள் பட்டமளிப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .          இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார் . இதை தொடர்ந்து முதல் நிகழ்வாக வேலூர் பிரீத்தா சண்முகசுந்தரம் மற்றும் , ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை செயலாளர் சாந்தி பாலாஜி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினர் .              இதை தொடர்ந்து அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை செயலாளர் மற்றும் ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லம் தலைவர்            J. லட...