• மேல்மணவூர் பள்ளியில் சாரண இயக்கம் தொடக்கம்.
·
மேல்மணவூர் பள்ளியில்
சாரண
இயக்கம்
தொடக்கம்.
வேலூர் மாவட்டம், மேல்மணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பாரத சாரண, சாரணிய இயக்கம் “கப்ஸ் அண்ட் புல் புல்”திட்டத்தின் கீழ் சிறப்பாக தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட சாரண இயக்க செயலாளர் சிவகுமார், ஜான் பாபு (LT Scouts), பிரகாஷ் (HWB Scouts) மற்றும் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் சிலம்பரசி முன்னிலை வகித்தனர். எஸ்.எம்.சி தலைவர் மற்றும் பெற்றோர் மன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை ஆசிரியர் சிலம்பரசி ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார். சாரண இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

Comments
Post a Comment