• தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி விழிப்புணர்வு முகாம்.

·        வேலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வு முகாம் 30.07.2026 அன்று நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்

மாவட்டத்தில் ஏற்றுமதி வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), ஏற்றுமதியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் மாவட்ட தொழில் மையம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநர் (Directorate General of Foreign Trade) சார்பில் விழிப்புணர்வு முகாம் 30.07.2026 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் 5-ம் தளத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஏற்றுமதிக்கான பதிவு நடைமுறைகள், அரசின் ஊக்கத் திட்டங்கள், தரச்சான்றிதழ்கள், சந்தை வாய்ப்புகள், பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் தொடர்புடைய துறைகளின் சேவைகள் குறித்து நிபுணர்களால் விளக்கமளிக்கப்படும்.

எனவே, மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.