• குடியாத்தம், உள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்.
· குடியாத்தம் வட்டம், உள்ளி கிராமத்தில் ஜுலை-2026 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் - 08.07.2026 அன்று நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் ஜீலை – 2026 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் குடியாத்தம் வட்டம், வளத்தூர் உள்வட்டம், உள்ளி கிராமத்தில் 08.07.2026 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி மனுநீதி நாள் முகாம் நடைபெறும் வளாகத்தில் அரசு துறையின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளம்பர பதாகைகள் மற்றும் காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்களை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் மனு அளித்து மனுநீதி நாள் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment