• வேலூரில் சிப்பாய் புரட்சி கருத்தரங்கம்.
· வேலூரில் தென்னிந்திய ஆய்வு மையம் சார்பில் வேலூர் சிப்பாய் புரட்சி கருத்தரங்கம்.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் தென்னிந்திய ஆய்வு மையத்தின் சார்பில் சிப்பாய் புரட்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி 1806 ஜுலை 10-ம் நாள் நடைபெற்றது இதில் வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களின் கொடி இறக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது இந்த புரட்சியில் இந்திய வீரர்கள் நூற்றுகணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இதனை போற்றும் வகையில் சிப்பாய் புரட்சி கருத்தரங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் வரலாற்று ஆர்வலர் சரவணன்ராஜா, சிவக்குமார் மற்றும் தென்பாரத அமைப்பாளர் பக்தன் உள்ளிட்டோர் பங்கேற்று இந்திய வீரர்களின் தியாகத்தையும் நாட்டுபற்றையும் முதல் முதலில் வேலூர் இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டத்தையும் வரும் சந்ததியினர் அறியும் வகையில் விளக்கி கூறி இதனை இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கி கூறி நாட்டுபற்றை வளர்க்க வேண்டுமென பேசினர்.
Comments
Post a Comment