• வெட்டுவானம் கிராம மக்கள் கோரிக்கை.

· வெட்டுவானம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் சிறிய பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் மனு. வேலூர் மாவட்டம் , வெட்டுவானம், அம்பேத்கர் நகர் மக்கள் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், சுமார் 2,500 குடும்பங்கள் சுற்று வட்டார கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் வெட்டுவானம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். காரணம் நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். இதில் பல சிக்கல்கள் உள்ளது. ஆகவே சிறிய மேம்பாலம் அமை...