Posts

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
   ·         வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 548   கோரிக்கை மனுக்களை பெற்றார்.         வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நல துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 548 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்...

• வேலூர் சுதந்திர போராட்ட தியாகிகள் குறைகேட்பு கூட்டம்.

Image
 ·         வேலூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம்.                  வேலூர் மாவட்டத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகின்ற 02.07.2026 (வியாழக்கிழமை) அன்று   பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள "காயிதே மில்லத்" கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து அதன் மீது தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் இந்த குறை கேட்பு கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தெரிவித்துள்ளார்.  

• ஜுன் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

Image
 ·         ஜுன் 2026- ம் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் .                 ஜுன் 2026- ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ,   30.06.2026 அன்று காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் , மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட    அரங்கில்   ( 5- வது தளம் )   நடைபெற   உள்ளது . இக்கூட்டத்தில் வேளாண்மை துறை ,   தோட்டக்கலை துறை ,   வேளாண்     பொறியியல் துறை , வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை , பட்டுவளர்ச்சி துறை , மீன்வள துறை , கால்நடை பராமரிப்பு துறை , கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ,   கூட்டுறவு   துறை ,   நீர்வள ஆதார அமைப்பு , வனத்துறை ,   மாசு   கட்டுப்பாடு   வாரியம் ,    மின்சார   துறை , போக்குவரத்து துறை , பால்வள துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவி...

• வேலூர் அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்க்கை.

Image
·          வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.                  வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ், பார்வையிட்டு ஆய்வு செய்து, 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கையை தொடங்கி வைத்தார்.             வேலூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி, வேலூர் வட்டம், பிள்ளையார்குப்பம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மாதிரி பள்ளியில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் தனித்திறன் மிக்க மாணவர்களிலிருந்து அவர்களது ஒட்டுமொத்த செயல் திறன்கள் அடிப்படையில் இப்பள்ளியில் பயில உரிய வாய்ப்பினை அளிக்கும் வகையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களது விருப்பம் மற்றும் திறமைக்கேற்ப உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற ஏதுவாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.       ...

• வேலூர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கைவிரல் ரேகை பதிவு.

·         வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்               வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை பதிவு செய்யாதவர்கள் 30.06.2026-க்குள் நியாய விலை கடைகளுக்கு சென்று கைவிரல் ரேகையினை பதிவு செய்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.                     மேலும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை வருகிற ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து தங்களது உரிமையினை உறுதி செய...

• தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் 28.06.2026 அன்று நடைபெறும்.

·         தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் 28.06.2026 அன்று நடைபெறும் மாவட்ட   ஆட்சி தலைவர் தகவல்.                  போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு 1995-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.                 இந்த ஆண்டு 28.06.2026-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 5 வயதிற்குட்பட்ட 99785 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. மேலும், முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும்.                 வேலூர் மாவட்டத்தில் இப்பணியினை சிறப்பாக செயல்படுத்த 950 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.   இந்த ஆண்டும் கூடுதலாக தே...

• தாட்கோ நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி.

·         தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ( தாட்கோ ) மற்றும்    மத்திய   பெட்ரோ   கெமிக்கல்ஸ்   பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி   செயலாக்க இயந்திர இயக்குபவர்   (Machine Operator Plastics Processing Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது . பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - வேலூர்   மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .                       தமிழ்நாடு ஆதிதிராவிடர்   வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ( தாட்கோ )   மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது . அதன் அடிப்படையில் தாட்கோ , மற்றும் மத்திய   பெட்ரோ   கெமிக்கல்ஸ்   பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழ...