• வேலூரில் 220-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம்.
· · இந்தியாவின் முதல் சுந்தந்திர போராட்டமான சிப்பாய் புரட்சியில் பலியான 800 இந்திய ராணுவ வீரர்களுக்கு வேலூரில் 220- வது சிப்பாய் புரட்சி நினைவு தினத்தில் சிப்பாய் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி. வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை அருகில் உள்ள சிப்பாய் புரட்சியின் 220- வது ஆண்டை முன்னிட்டு சிப்பாய் புரட்சி நினைவு தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் தலைமையில் அரசு அதிகாரிகள் மலர் தூவி மலர் வளையம் வைத்து காவலர்களின் இசையுடன் அஞ்சலியை செலுத்தினார்கள். 1806- ம் ஆண்டு ஜுலை 10- ஆம் நாள் வேலூர் கோட்டையினுள் சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. அப்போதைய ஆங்கில அரசின் மதராஸ் படையின் முதன்மை தளபதி சர் ஜான் கிரேடக் என்பவன் பல புதிய விதிமுறைகளை புகுத்தினான். இந்துக்கள் கடுக்கன் அணிய கூடாது. நெற்றியில் சமய சின்னங்களை அணிய கூடாது. இஸ்...