Posts

• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.

Image
·          வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்   ·          நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனை ·          உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் முற்றோதல்       வேலூர், கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில்    பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு தேன் , அரிசி மாவு , பால் , தயிர் , விபூதி , கரும்பு சாறு, சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்களை செய்து இறுதியாக கலசாபிஷேகம் செய்தனர்.       பின்னர் மலர் மாலைகள், வில்வ இலை மாலைகள், அருகம்புல் தாமரை மலர்களால் நந்திக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து தட்டு ஆரத்தி, கும்ப ஆரத்திகளை செய்து இறுதியாக மகாதீபாராதனைகள் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.     ...

• விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.

Image
 ·          விபத்தில் மூளை சாவடைந்த ஆந்திர மாநில இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.              ஆந்திர மாநிலம் , சித்தூர் அருகே உள்ள சந்திரகிரியை சேர்ந்த 22 வயதான கோதாபட்டி ஹேம்நாத்ரெட்டி ஒரு பட்டதாரி. மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார் . ஜூலை 8- ஆம் தேதி திருப்பதி அருகே இரு சக்கர வாகன விபத்தில் சிக்கினார் .     ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுத்தாக்கு சி . எம் . சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேம்நாத்ரெட்டி ஜூலை 9- ம் தேதி அவர் மூளைசாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார் . அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர் .       இதயம் சென்னை எம் . ஜி . எம் மருத்துவமனைக்கும் , ஒரு சிறுநீரகம் ராணிப்பேட்டை சி . எம் . சி மருத்துவமனைக்கும் , கண்கள் வேலூர் சி . எம் . சி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன . அவரது தந்தை தனபிரகாஷ்ரெட்டி ஒரு விவசாயி , தாய் முனிலட்சுமி ஒரு இல்லத்தரசி . அவருக்கு ஒரு தங்கை உ...

• அரசு சமூக நீதி விடுதி மாணாக்கர்களுக்கு வரவேற்பு தொகுப்பு.

Image
·         வேலூர் மாவட்டத்தில் 2026-2027-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நல துறையின்கீழ் செயல்படும் 20 அரசு சமூக நீதி விடுதிகளில் சேர்க்கை பெறும் 396 புதிய மாணாக்கர்களுக்கு தலா ரூ.1952/- வீதம் ரூ.7,72,992/- மதிப்பிலான வரவேற்பு தொகுப்பு - மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். வேலூர் மாவட்டத்தில் 2026-2027-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நல துறையின் கீழ் செயல்படும் 20 அரசு சமூக நீதி விடுதிகளில் சேர்க்கை பெறும் 396 புதிய மாணாக்கர்களுக்கு தலா ரூ.1952/- வீதம் ரூ.7,72,992/- மதிப்பிலான வரவேற்பு தொகுப்பினை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்   வழங்கினார். இந்த வரவேற்பு தொகுப்பில்   பாயுடன்கூடிய மெத்தை, போர்வை, தலையணை, இரண்டு தலையணை உறைகள் ஆகிய உறக்கத்திற்கான உபகரணங்களும், எவர்சில்வர் தட்டு, விளிம்புடன்கூடிய எவர் சில்வர் டம்பளர் ஆகிய உணவருந்தும் உபகரணங்கள், பிளாஸ்டிக் வாளி, பிளாஸ்டிக் குவளை ஆகிய குளியலறை உபகரணங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்நிகழ்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலர் த.ராஜராஜன், ...

• கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள்.

கல்வி உதவித் தொகை பெறுவதற்காக , மின்னணு முறையில் விண்ணப்பங்கள் . இந்திய அரசின் , மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் , பீடி , சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் , ஒன்றாம்    வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும்   குழந்தைகளுக்கு ,  2026-27- ம் நிதி ஆண்டில் ,  ரூபாய் 1000/- முதல் ரூபாய் 25000/- வரை ,   கல்வி உதவித் தொகை பெறுவதற்காக , மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .  1)                https://scholarships.gov.in என்கிற,  தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு (OTR) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம். 2)             ஒவ்வொரு மாணவரும் , தங்களுக்கென தனியாக ,  தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் , மைய வங்கி அமைப்பு என்...