Posts

• ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஆய்வு.

Image
 ·          ஆற்காடு நகர காவல் நிலையத்தில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு.    இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் , இராணிப்பேட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட ஆற்காடு நகர காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .              காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . மேலும் , காவல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார் .        இந்நிகழ்வின்போது , இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் , காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடனிருந்தனர் .  

• வேலூர் விஐடி பல்கலைகழக 41-வது பட்டமளிப்பு விழா.

Image
·          இந்தியாவை ' செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவராக ' மாற்ற வேண்டும் - தில்லி முதல்வர் ரேகா குப்தா வேண்டுகோள்.   ·          வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் 41 - வது பட்டமளிப்பு விழா.       வேலூர் :   இந்தியாவை ' செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவராக ' மாற்ற வேண்டும் என தில்லி முதல்வர் ரேகாகுப்தா வேண்டுகோள் விடுத்தார் .       வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் 41 - வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.       விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தில்லி முதல்வர் ரேகாகுப்தா கலந்து கொண்டு மாணவ , மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கி   பேசியதாவது :       அரசும் , பட்டதாரிகள் இணைந்து செயல்பட்டால் பல சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும் . தில்லி நகரம் சந்திக்கும் மாசு , போக்குவரத்து , கழிவு மேலாண்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஐஐடி-யுடன்...