· வேலூரில் டெய்ட்கோ (TEIDCO FOUNDATION) ஃபவுண்டேஷன் 4- வது மாநில மாநாடு . · 40 அரங்குகளில் வர்த்தக கண்காட்சி, பாவலர் முகில் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி - பல மாநிலங்களிலிருந்து பங்கேற்பு. · டெய்ட்கோ வர்த்தக மையத்தை திறந்து வைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் எம் . பி. வாழ்த்துரை. வேலூர் அடுத்த பொய்கையில், ரஞ்சன் மஹாலில் திறன்மிகு தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு பேரவையின் (TEIDCO FOUNDATION) நான்காவது மாநில மாநாடு வெகு சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது . வேலூர் மண்டல தலைவர் மகாதினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தேசிய துணைதலைவர் மு . முத்துகுமாரசாமி அனைவரையும் வரவேற்றார் . தேசிய துணைதலைவர் மு . அசோக்குமார், தேசிய துணைபொதுசெயலாளர் க . உஷாராணி , ஆலோசகர்கள் ...
· காஞ்சிபுரம் பெ . தெ . லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம் . · பல்வேறு துறைகளில் சென்சாரின் செயல்பாடுகள் - கல்லூரி இயக்குனர் பேராசிரியர் டாக்டர் மா . அருளரசு . சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பெ . தெ . லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின்கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன . அவ்வறக்கட்டளையின் காஞ்சிபுரம் மாவட்டம் , ஊவேரியில் பீ . டி . லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும் செயல்படுகிறது . இக்கல்லூரியில் , அறக்கட்டளை தலைவர் நீதியரசர் பொன் . கலையரசன் மற்றும் அறங்காவலர்களின் வழிகாட்டுதல்களோடு தொடர்ந்து பல கல்விசார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன . இக்கல்லூரியில் செயல்படும் எந்திரவியல் துறை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது . இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் பேராசிரியர் டாக்டர் மா . அருளரசு மற்றும் கல்லூரி முதல்வ...
· அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம். · வேளாண் சுற்றுலா மையமாக அறிவு தோட்டம். வணக்கம் . அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக வேளாண் சுற்றுலா மையமாக அறிவு தோட்டத்தை அங்கீகரித்து நாளை 200 மாணவர்களும் 25 ஆசிரியர்களும் பயணித்து வருகிறார்கள். அவர்களை அறிவுத்தோட்டம் வரவேற்று மகிழ்கிறது. இவர்களின் வருகையைத் தொடர்ந்து அடுத்த வாரம் ஆக்சிலியம் கல்லூரி மாணவிகளும் வருவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் . பல பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வர இருக்கிறார்கள் . மிக்க மகிழ்வான தருணம். நாளை 200 சிட்டுக்களையும் வரவேற்க சென்னையிலிருந்து வேலூர் செல்கிறேன் . இயற்கை நோக்கிய பயணம் தொடரட்டும். வாழ்த்துக்களுடன் . கு . செந்தமிழ்ச்செல்வன், அறிவுத்தோட்டம் 9443032436
Comments
Post a Comment