• ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மன், ஸ்ரீ செல்லியம்மன் சந்தன காப்பு அலங்காரம்.
·
ஸ்ரீஅகிலாண்டீஸ்வரிஅம்மன்,
ஸ்ரீ செல்லியம்மன் சந்தன காப்புஅலங்காரம் – மகாதீபாராதனைகள்.
· திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
வேலூர் மாவட்டம், வேலூர், கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து சந்தன காப்பு அலங்காரங்களை செய்து வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ செல்லியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து மலர் மாலைகள், பழ மாலைகளால் அலங்காரங்களை செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.

Comments
Post a Comment