Posts

• வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி.

Image
 ·          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி.    ·          குரு தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் - பக்தர்கள் வழிபாடு.        வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு பால் , தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.     பல்வேறு ராசிகாரர்களுக்கும் பரிகாரங்களை செய்து பின்னர் குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது.       குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் குரு மஹா சாந்தி யாகம் நடந்தது. பூர்ஹதிக்கு பின்னர் தீபாராதணைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  

• பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை.

Image
·          பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை.  ·          தமிழக அரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றம்.    ·          வரும் 1 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் மாநில பொதுசெயலாளர் உதயகுமார் வேலூரில் பேட்டி.             வேலூர் மாவட்டம் , வேலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் உதயகுமார் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தார்.       மனு அளித்த பின்னர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,       தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. த.வெ.க. தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யபடும் என அறிவித்தார்.      ஆ...

• வேலூர் மாவட்டத்தில் தீவிர தூய்மை பணிகள்.

Image
·         வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 25.05.2026, 26.05.2026 ஆகிய 2 நாட்கள் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ள பகுதிகளிலும்,   27.05.2026, 28.05.2026, 29.05.2026 ஆகிய 3 நாட்கள்   பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட ள்ளது என   மாவட்ட ஆட்சி தலைவர் தகவல். வேலூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களுக்கான குடிநீர், தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் பொதுமக்களுக்கு நாள்தோறும் வழங்கப்பட்ட குடிநீர் அளவு குறித்தும், கோடை வெயில் அதிகமாக உள்ள காரணத்தினால் அடுத்து வரும் நாட்களில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களிடமு...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
  ·         வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 536    கோரிக்கை மனுக்களை பெற்றார்.           வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது .   மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நல துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 536 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து ...

• வேலூர் கோடைக்கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள்.

·         வேலூர் மாவட்டத்தில் கோடைக்கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள   பொதுமக்கள்   தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சை சாறு மற்றும் ORS உப்பு கரைசல் போன்ற திரவ உணவுகளை எடுத்து கொள்ள வேண்டுமெனவும், அத்தியாவசியமில்லாமல்   வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.  வேலூர் மாவட்டத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பத்தால் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறி, நீர் மற்றும் உப்புச் சத்து குறைபாடு ஏற்படும்.. இதனால் தாகம், தலைவலி, சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, சிறுநீர் குறைவு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பச்சிளம் குழந்தைகள், சிறுவர், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இந்த வெப்ப தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் சிறப்பு கவனம் எடுத்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும். வெயிலிலிருந்து பாதுகாப்பதற்காக மக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சைச்ச...

• விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .            மே 2026- ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ,   29.05.2026   வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் , மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட    அரங்கில்   ( 5 வது தளம் )   நடைபெற   உள்ளது . இக்கூட்டத்தில் வேளாண்மை துறை , தோட்டக்கலை துறை ,   வேளாண்     பொறியியல் துறை , வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை , பட்டுவளர்ச்சி துறை , மீன்வள துறை , கால்நடை பராமரிப்புத் துறை ,   கூட்டுறவு   சர்க்கரை ஆலைகள் ,   கூட்டுறவுத்   துறை ,   நீர்வள ஆதார அமைப்பு , வனத்துறை ,   மாசுக்   கட்டுப்பாடு   வாரியம் ,    மின்சாரத்   துறை , போக்குவரத்துத்    துறை , பால்வள துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள் . எனவே , வேலூர் மாவட்டத்...