Posts

• ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

Image
ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது .                 வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2026-ஆம் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலாவதாக, தமிழ்நாடு வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி, விரிஞ்சிபுரத்திலிருந்து எல்நினோ தாக்கத்தில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது வேளாண்மை துறையின் சார்பாக பயறு வகைகள் பற்றியும், விவசாயிகள் அடையாள பதிவு செய்து பயனடையவும், NMEO எண்ணெய் வித்துக்களின் திட்டம் மற்றும் இயற்கை விவசாயத்தின் பயன்கள் பற்றியும் விரிவாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது பொறியியல் துறை மூலம் 5 கார் கலப்பை மற்றும் மணிலா உடைக்கும் கருவி வழங்கிடவும், வாழை திசு வளர்ப்பு ஆய்வகம...

• இந்திய திறன் போட்டிகள் 2027

·         இந்திய திறன் போட்டிகள் 2027 - பங்கேற்க விரும்பும் தகுதியான இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெற வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.   உலகத் திறன் போட்டிகள் (World Skills Competition) - ஐச்சி , ஜப்பான் 2028- ல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களை தேர்வு செய்வதற்கான இந்திய திறன் போட்டிகள் (India Skills Competition) 2027- க்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன . இந்திய திறன் போட்டியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது . கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய மற்றும் உலக திறன் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த போட்டியாளர்கள் பல பதக்கங்களையும் விருதுகளையும் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் . அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியத் திறன் போட்டியில் தமிழ்நாடு ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்ததுடன் , உலகத் திறன் போட்டியில் (World Skills Shanghai, China 2026) தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்கள் ...

• பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு 26/09/2026 வரை அவகாசம்.

·         வேலூர் மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்திட 26/09/2026   வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது - மாவட்ட வருவாய் அலுவலர்.                  பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை , பிறப்பு   சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ வயது குறித்த ஆதாரம் , குடியுரிமைக்கான அத்தாட்சி ,   குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம் வழிவகை   செய்கிறது . பிறப்பு சான்றிதிழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும் .              பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர , வாக்காளர் அடையாள அட்டை பெற , ஓட்டுநர் உரிமம் பெற , அரசு துறைகளில் பணியில் சேர , பாஸ்போர்ட் மற்றும் விசா பெற இன்றிமையாத ஆவணமாக உள்ளது .              ஒரு குழந்தை...

• பேர்ணாம்பட்டு “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்.

Image
·         பேர்ணாம்பட்டு “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு, ஆய்வு.         ” உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் ” படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து , மக்களின் குறைகளை கேட்டறிந்து , அரசின் அனைத்து நலத்திட்டங்களும் , சேவைகளும் , தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று தமி ழ்நாடு   முதலமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளது .             அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் , பேர்ணாம்பட்டு வட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு , ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ' உங்களை தேடி உங்கள் ஊரில் ' திட்டத்தின்கீழ்   பேர்ணாம்பட்டு ஊர...