Posts

Showing posts from October, 2025

• வேலூர் கோட்டை மைதானத்தை மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

Image
·          வேலூர் கோட்டை மைதானத்தை மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.       மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ள வேலூர் கோட்டை மைதானத்தை மாவட்ட ஆட்சி தலைவர் வே . இரா.சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார் .          ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ . பி . நந்தகுமார்,ப . கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு . பாபு உட்பட பலர் உடன் இருந்தனர் .  

• வாக்காளர் திருத்தம் ஆலோசனை கூட்டம்

Image

• தாயுமானவர் திட்டம்.

2 025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின்கீழ் பொருட்களை வழங்கும் வகையில் “ நவம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் “ தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என   மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். அரசாணை (நிலை) 82 கூட்டுறவு , உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப் 1) துறை நாள்.11.08.2025ன்படி மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு   அவர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியினை நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் மாதம் தோறும் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.                 வேலூர் மாவட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் கொண்ட 33,245 ...

• வேலூர் விஐடி வேந்தர் "வாழ்நாள் சாதனையாளர் விருது.

Image
      ·          வேலூர் விஐடி வேந்தர் " வாழ்நாள் சாதனையாளர் விருது ".       புதுடெல்லியில் நடைபெற்ற உலக கல்வி கழகங்களின் கூட்டமைப்பின் 8- வது ஆண்டு மாநாட்டில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ . விசுவநாதன், முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் பத்மவிபூஷன் முரளிமனோகர்ஜோஷி அவர்களால் " வாழ்நாள் சாதனையாளர் விருது " வழங்கி கௌரவிக்கப்பட்டார்.       மாநாட்டில் அரசு மற்றும் தனியார் பல்கலை கழகங்கள் கலந்து கொண்டன .  

• முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

Image
 ·         வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் , படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் , படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் / சார்ந்தோர்கள் 100 நபர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 40 நபர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்-டம் மனுக்கள் அளித்தனர். அம்மனுக்கள்மீது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட முப்படை வீரர் வாரிய உப தலைவர் துரைராஜ், முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குநர் லெப் கர்னல் ஆர்.பழனி வேலு (ஓய்வு)   மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ...

• வேலூர் மாற்று திறனாளி மகன் திருமண உதவித்தொகை .

Image
 ·         மாற்று திறனாளிகள் நல வாரியத்தின் சார்பில் உறுப்பினர்களின் மகன் அல்லது மகளுக்கு வழங்கி வந்த திருமண உதவி தொகையை   ரூ.2000/- லிருந்து ரூ.5000/- ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் முதல் பயனாளியாக வேலூர் அல்லாபுரத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி மகன் திருமண உதவித்தொகை ரூ.5000/-க்கான ஆணையினை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாற்று திறனாளிகள் நல வாரியத்தின் சார்பில் உறுப்பினர்களின் மகன் அல்லது மகளுக்கு வழங்கி வந்த திருமண உதவி தொகையை   ரூ.2000/- லிருந்து ரூ.5000/- ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில்   முதல் பயனாளியாக வேலூர் அல்லாபுரத்தை சார்ந்த மாற்று திறனாளி சாந்தி அவர்களின் மகன் திருமண உதவித்தொகை ரூ.5000/-க்கான ஆணையினை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். தமி ழ்நாட்டில் மாற்று திறனாளிகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பை அளிக்கும் வகையில் தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுத்திட மாற்றுத்திறனாளிகளை உறுப்பி...

• PLI / RPLI அஞ்சலக சிறப்பு முகாம்.

Image
·          PLI / RPLI அஞ்சலக சிறப்பு முகாம்.  

• உள்ளாட்சிகள் தினம்.

உள்ளாட்சிகள்   தினம் - 01.11.2025     தினத்தன்று    வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும்   கிராம சபை கூட்டம்   நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் .   அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து , வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு பிறப்பித்துள் ளார் . இக்கிராம சபைக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய   பொருள்கள் விவரம் . , பொருள் 1 : கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் பொருள் 2 : கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பொருள் 3 : ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நட...

• கீ.வ.குப்பம், குடியாத்தம் வட்ட வளர்ச்சி திட்ட பணிகள்

Image
கீ.வ.குப்பம், குடியாத்தம் வட்ட   வளர்ச்சி திட்ட பணிகள் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு. வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளர் மருத்துவர் ச . உமா , கீ.வ.குப்பம் வட்டம் மற்றும் குடியாத்தம் வட்டத்தில் அணைகள், பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் நியாய விலை கடை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளர் மருத்துவர் ச . உமா , கீ.வ.குப்பம் வட்டத்தில் உள்ள ராஜாதோப்பு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மழையின்போது   அணை க்கு நீர்வரத்து சுற்றியுள்ள மலைகளில் இருந்து வருவதாக நீர்வளத்துறை அலுவலர்க ள் தெரி வித்தனர். இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரானது கால்வாய்கள் வழியாக மற்றும் கரசமங்கலம் வழியாகச் சென்று இறுதியாக தாராபடவேடு ஏரியை அடைகிறது. மேற்கண்ட அணையின் உபரிநீரினால் சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை . தொடர்ந்து கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்ற...