• வேலூரில் 9 மாவட்டங்களை சேர்ந்த மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி.
· வேலூரில் 9 மாவட்டங்களை சேர்ந்த மண்டல அளவிலான பளுதூக்கும் போட்டி - 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள அரசு பளு தூக்கும் பயிற்சி மையத்தில் முதல்வர் கோப்பைக்கான திருவண்ணாமலை மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்றது.
இதில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இரண்டாவது நாளாக நடைபெறும் பளு தூக்கும் போட்டிகளை மண்டல மேலாளர் சாந்தி துவங்கி வைத்தார். இதில் காமன் வெல்த் வீரர் சதிஷ் போட்டிகளை முன்னின்று நடத்தினார். இதில் பாலமுருகன், பயிற்றுநர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் வெல்வோர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

Comments
Post a Comment