Posts

• வேலூர் வெங்கடாபுரம் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்.

Image
 ·         உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம்   ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்ட ம் -   மாவட்ட ஆட்சி தலைவர் சிறப்பு   பார்வையாளராக   கலந்து கொண்டார்.             உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம்   ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்ட த்தில்   மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் சிறப்பு பார்வையாளராக   கலந்து கொண்டார். உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது . அதன் அடிப்படையில் வேலூர் ஊராட்சி ஒன்றியம் , வெங்கடாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத் தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண் டார். இக்கூட்டத்தில் சுற்றுசூழல் உறுதிமொழியை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்து கொண்டனர். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை ...

• உலக சுற்றுசூழல் தினம்.

Image
·         உலக சுற்றுசூழல் தினம் . ·         வேலூர் மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை   மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினம் 2026, “ காலநிலை நடவடிக்கை ( Climate Action)” என்ற கருப்பொருளின் கீழ் 05.06.2026 அன்று அனுசரிக்கப்படவுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிலையான வளர்ச்சி நடைமுறைகள் , சூழலியல் அமைப்புகளின் மீட்பு , புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு மற்றும் சமூகப் பங்கேற்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி , இந்திய அரசின் சுற்றுச்சூழல் , வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் , அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பள்ளி பசுமைப் படைகள் ( Eco-Clubs) மூலம் பெரிய அளவிலான மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகளை நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி , தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை , மாவட்ட நிர்வாகம் , பள்ளிக்கல்வித் துறை மற்றும் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து பள்ளிகளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகளை ந...

• வேலூர் ஊரக வளர்ச்சி துறை திட்டப் பணிகள் ஆலோசனை கூட்டம்.

Image
 ·         வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்   நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.                 இக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II,   சிறுபாசன ஏரிகள் புனரமைப்பு திட்டம், 15-வது மத்திய நிதி குழு மான்ய   சுகாதார கட்டிடங்கள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு   திட்டம்,   நமக்கு நாமே திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், கலைஞர் கனவ...

• ஏழு ஆதரவற்றோர் சடலங்களை நல்லடக்கம்.

Image
 ·          ஏழு ஆதரவற்றோர் சடலங்களை சமூக சேவகர் மணிமாறன் நல்லடக்கம் செய்தார் .             வேலூர் மாவட்டம் , வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோராத ஆதரவற்ற ஏழு பேரின் சடலங்களை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் வேலூர் பாலாற்றங்கரையில் நல்லடக்கம் செய்தார். 7 பேரின் உடல்களையும் நல்லடக்கம் செய்து தனது சொந்த செலவில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.        

• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹார சதுர்த்தி.

Image
  ·   வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர்  ஆலயத்தில்  சங்கடஹர   சதுர்த்தி முன்னிட்டு  ஸ்ரீ  விநாயகபெருமானுக்கு  பல்வேறு  பொருட்களை    கொண்டு  சிறப்பு  அபிஷேகம்.             வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயக பெருமானுக்கு பால் , தயிர் , சந்தனம் , உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்களை செய்து பின்னர் அருகம்புல் மாலை, மலர் மாலைகள் அணிவித்தும் வெள்ளி கவசத்துடன் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடைபெற்றது.       இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி உட்பிரகார உலாவும் வந்தது.  

• பாஜக அண்ணாமலை பிறந்த நாள் - தங்கத்தேர் இழுத்து வழிபாடு.

Image
·         பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பாஜக-வினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு .                வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு பாஜக-வை சேர்ந்த மனோகரன் , ஜெகன் மற்றும் பாபு ஆகியோர் முன்னிலையில்              பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணாமலை நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்றிட வேண்டும். தொடர்ந்து மக்களுக்காக அவர் பணியாற்றிட வேண்டி தங்கத்தேரில் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மனை வைத்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை சுற்றி வலம் வந்து தங்கத்தேரை இழுத்து வழிபாடு செய்தனர்.  

• இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தீவிர இரவு ரோந்து

Image
·          இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தீவிர இரவு ரோந்து         இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினர் , மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் , பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தீவிர இரவு நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர் .            மேலும் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது .