Posts

• வேலூர் மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு.

Image
 ·         நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் வேலூர்    மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங்பேடி வேலூர்    மாநகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் குழாய் பாலம் அமைக்கும் பணி, பயோமைனிங் முறையில் குப்பைகளை அகற்றும் பணி, திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் வேலூர் மாநகராட்சி, சர்க்கார்தோப்பு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, காகிதப்பட்டறை முதல் விருதம்பட்டு வரை கழிவுநீர் குழாய் எடுத்து செல்வதற்கான பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து...

• வேலூர் மாவட்ட தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்.

Image
 ·         வேலூர் மாவட்டத்தில் 'தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்' (SWDS) கீழ், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள், சமூக பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு மற்றும் நிதி சேவைகள் சென்றடைதல் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 'தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்' (SWDS) கீழ், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு மற்றும் நிதி சேவைகள் சென்றடைதல் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் சமூக-பொருளாதார நல்வாழ்வு, வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, அரசு வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய பதிவு, ஆதார் பதிவு மற்...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
·         வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 687 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.           வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை , ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நல துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 687 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர், பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட ...

• வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் சிறார் கல்வி உதவி தொகை.

·         வேலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும்   கல்வி உதவி தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள்   வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.     பாரத பிரதமரின் கல்வி உதவி தொகை (PMSS ) / ரக்சா மந்தரியின் முன்னாள் படைவீரர் நல நிதியின் கல்வி உதவி தொகை ( RMEWF) பெற தகுதி இல்லாத மற்றும் நிராகரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவி தொகை (ECLIG) 2026-27 பெறுவதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது. மேலும் முன்னாள் படைவீரர் மற்றும் கைம்பெண்கள் அவர்களது சிறார்களுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவி தொகை கோரும் நேர்வில் 01 முதல் 12-ம் வகுப்பு வரை நடப்பு ஆண்டிலும் ( Current Year ) ஏனைய படிப்புகளுக்கு நடந்து முடிந்த கல்வி ஆண்டிற்கும் விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகுமாறும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்....

• வேலூரில் இலவச கண் மருத்துவ முகாம்.

Image
·          வேலூரில் இலவச கண் மருத்துவ முகாம் - 100 பேர் பங்கு பெற்றனர்.       வேலூரில், வேலூர் கட்டிட பொறியாளர்கள் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது .       முகாமிற்கு வாசன் கண் மருத்துவமனை குழுமத்தின் பொது மேலாளர் செல்வம் தலைமை தாங்கினார் . வேலூர் கட்டிட பொறியாளர் சங்க தலைவர் வி . எஸ் . அர்ஜுனன் முன்னிலை வகித்தார் . வாசன் கண் மருத்துவமனை வேலூர் மேலாளர் விஜயகுமார் வரவேற்றார் .     முகாமில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பொறியியல் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சு . பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார் .       முகாமில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர் . கண் பரிசோதனை செய்ய வந்தவர்களை மூத்த கண் டாக்டர்கள் சர்வேஸ்வரன் , ஸ்ரீஷா மற்றும் டாக்டர்கள் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர் .       முகாமில் கட்டிட பொற...

• வேலூர் வாசகர் வட்டம் கவிஞர் வாலி சிறப்பு பட்டிமன்றம்.

Image
·          வேலூர் வாசகர் வட்டம் சார்பில் காவிய கவிஞர் வாலியின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்.   ·          கவிஞர் லக்குமிபதி பங்கேற்பு       வேலூரில் உள்ள சண்முகனடியார் சங்கத்தில் வேலூர் வாசகர் வட்டம் சார்பில் காவியக் கவிஞர் வாலியின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது . விழாவிற்கு பிரியா குழுமத்தை சேர்ந்த பிரியாசுரேஷ் தலைமை தாங்கி பேசினார் .       சைன் ஜீனியஸ் டி . பன்னீர்செல்வம் , இம்பீரியல் பஸ் உரிமையாளர் ஸ்ரீதர் ஜெயபால் , சண்முகனடியார் சங்க செயலாளர் பு . தட்சிணாமூர்த்தி , வேலூர் அனைத்து வணிகர் சங்க தலைவர் அசோகன் , வேலூர் வாசகர் வட்ட அறங்காவலர் தி . ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .       தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் இரா . ப . ஞானவேலு பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து பேசினார் .       காவிய க...