• வேடிக்கை மனிதர்களை போல சாக கூடாது
வேடிக்கை மனிதர்களை போல சாக கூடாது - மண் பயனுற வாழ வேண்டும். - மகாகவி பாரதியின் நினைவு நாளில் கவிஞர் முனைவர் ச . இலக்குமிபதி. வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டத்தின் சார்பில் மகாகவி பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது . வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பாரதி புக் ஹவுஸ்-ல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதி புக் ஹவுஸ் உரிமையாளர் உமா தலைமை தாங்கினார் . வேலூர் வாசகர் வட்டத்தின் சார்பில் எம் . காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் வாசகர் வட்ட செயலாளர் கவிஞர் முனைவர் ச . இலக்குமிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதியாரின் நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார் . சிறப்பு விருந்தினர் கவிஞர் லட்சுமிபதி பேசும்போது, எட்டயபுரத்து எரிமலை கவிஞரான மகாகவி பாரதியார் “ யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் வாழ்வை எதிர் கொள்ள வேண்டும்” என...